Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3816
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல் 

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே 
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும் 

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ 
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில் 

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே 
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே 

பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.