Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4152
விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன் 

மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி 
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே 

மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே 
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே 

எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே 
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.