வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக் குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே