Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3156
வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த

மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்

துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே

உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்

மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.