Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4158
வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே 

மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே 
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே 

வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே 
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து 

கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே 
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.