வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச் செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம் குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே