வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே