Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3767
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் 
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே 
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.