வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும் சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும் தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில் பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே