-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 085. திருவருட்பேறு tiruvaruṭpēṟu
1. சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
எந்தாய்நின் உள்ளமறி யேன்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 017. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு attuvita āṉanta aṉupava iṭaiyīṭu
1. திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 021. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் sutta saṉmārkka vēṇṭukōḷ
1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 030. பிரியேன் என்றல் piriyēṉ eṉṟal
1. அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
1. பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
1. அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
சுகாதீத வெளிநடுவிலே
அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
பொற்பொடுவி ளங்கிஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
பூரணா காரமாகித்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
சிறப்பமுதல் அந்தம்இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
தெளிந்திட வயங்குசுடரே
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
சுந்தரிக் கினியதுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 068. பழமலையோ கிழமலையோ paḻamalaiyō kiḻamalaiyō
1. ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
1. பரசிவா னந்தபரி பூரண சதானந்த
பரசிவா னந்தபரி பூரண சதானந்த
பாவனா தீதமுக்த
பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
பௌதிகா தாரயுக்த
சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
சாம்பவ விநாசரகித
சாஸ்வத புராதர நிராதர அபேதவா
சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
சுகோதய பதித்வநிமல
சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
டணுவளவும் அறிகிலாத
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் 2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்முதற் பிரிவு
-
திருவருண் மெய்ம்மொழி
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 5. திருவருண் மெய்ம்மொழி ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும் அருட்பிரகாசத் தந்தையார் திருவருண் மெய்ம்மொழி
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:
-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
-
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்
4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
சிறப்புப் பாயிரம் நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத் தழிவிலடுக் குந்தேனை யன்பரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லோர்ந்து. இச்செய்யுள் கருதிற்று யாதோ எனின், இந்நூன்முகத்து ஆசிரியர் பெயர் முதலியவற்றைக் குறித்து நிற்றலின் சிறப்புப் பாயிர ஒழுக்கம் உணர்த்தல் கருதிற்று என்க. வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த் தாடலைமேல் வைத்து என்பது:- வள்ளலார் என்னும் திருப்பெயருடையவர். ஞானாசாரிய நிருபராகிச் சமயவாதிகள் தருக்கச் செருக்குகள் பிற்பட்டொழியப் பேரருள் நெறியா வெற்றிகொண்டு சீகாழி என்னும் திருநகர்க்கண்ணே மெய்ந்நெறி விளங்க வீற்றிருந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வள்ளற்றன்மையுடைய மலர்போலும் திருவடிகளைத் தமது நன்முடிக்கண் ஓர் பொன்முடியாக அணிந்து, ஓர்ந்து உள்ளத் தழிவி லடுக்குந் தேனை யன்ப ரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லுரைத்தான் என்பது:- அத் திருவடிகளின் அருட்டுணையால் தத்துவங்க ளனைத்தும் சடமென்று ஓர்ந்துணர்ந்து அவற்றைக் கடந்து தற்காட்சியோடு திருவருட்காட்சியும் செய்து, அங்ஙனம் வாதனையால் அசைந்தெழும் போதந்தோற்றாது அதனை அத்திருவருள் ஒளியில் அடக்கி ஆண்டு மேன்மேலும் எழாநின்ற சிவானந்தத்தேனைத் தாம் அனுபவஞ் செய்தவாறு அதன் கண் அன்புள்ள பக்குவரும் செய்தற்பொருட்டு, அச் சிவானந்தானுபவ அந்தரங்க மெல்லாம் வெளிப்பட்டு விளங்க, ஒழிவிலொடுக்கம் என்று ஓர் உபதேச முறையை உரைத்தருளினார் என்றவாறு. வள்ளல் என்னும் பெயர் ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியா சாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப் பெயர் என்க. அல்லதூஉம், பின்னர் ஞானாசாரிய நிலைக்கண் தமது அருள்ஞான நோக்கால் இயைந்த கண்ணுடைய என்னும் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ளலென்னும் பெயர் ஈண்டு அவ்விசேடணம் இசையெச்ச நிலையில் நிற்ப நின்றது எனினும் அமையும் என்க. இஃது வினை பண்பு முதலிய அடுத்த தொகைநிலைச் சொற்றொடராகாது தொகாநிலையாய்த் தனைத் தொடர் பயனிலை அண்மைப் பொருளுணர்ச்சியின்றி இடையிட்டு நிற்கத் தான் செய்யுள் முதற்கண் தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோ எனின், அற்றன்று. கொடை மடங்குறித்த குணங் காரணமாக வந்த இவ்வள்ளல் எனும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழ், அழகு, வளம் என்னும் நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மை என்னும் முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலின் பொருளாற்றல் உண்டென்க. அல்லதூஉம், இப்பெயர் உயர்பொருட்கிடனாய் உடனிலைக்கூட்டாய் ஒருநெறியசைத்தாய் ஓரினந்தழுவிப் பல்வகைக்குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலின் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடை கடைகளில் ஒன்றின் நிறுத்தாது முதலடி முதற்சீர் எதுகைத் தொடைக்கண் நிறுத்ததிற் குறித்தது யாதோஎனின், ஒன்றிரண்டெனக் கொண்டுறும் மறை ஆகம நன்றிரு முடிபின் நடுநிலை நடாஅய்ப் புலம்பெறு தத்துவ நியதியிற் போந்து உண்மலந்தெறும் அறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையில் தலைமையாய உத்தம சன்மார்க்கத்தினர் என்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினர் என்பதை ஆசிரியர் கூறிய "இது வென்ற தெல்லாம் பொய்யென்றான்"1 என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும். குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப் பெயராய் நின்று, ஓதி உணர்ந்து பன்னாள் பலசாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத்தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப்பெற்றும் ஓரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்றும் உணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானாசாரிய அருளிலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஓதி உணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின் கண் அருளுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனர் என்பதூஉம், திருநோக்கஞ்செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையாலும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்று உணர்க. இங்ஙனம் ஓதாமல் வேதாகமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய "தன்மையு முன்னிலையும்"2 என்னும் திரு வெண்பாவாற் காண்க. அல்லதூஉம், குருராயன் என்பது வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்த விதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்திலும் குமாரசற்குருவாய் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர். 1. இதுவென்ற தெல்லாம்பொய் யென்றான் எனக்குப் பொதுவன்றித் தங்குமிடம் போச்சு - அதுநாங்காண் என்றா னதன்பேர் இரவைப் பகலாக்கும் ஒன்றோ பரமசுக மோ. 44 2. தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமாய் என்னொழிவில் இன்புமாய் இன்புமிது - என்னாத வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றான் ஓதாமல் வேதமுணர்ந் தோன். 42 தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத் தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின் தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந் தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.3 என்றதனால் பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க. கல்லாடம், உழன்மதிற் சுட்ட தழனகைப் பெருமான் வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்4 குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்.4 சித்தியார், அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை5 என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க. ஆயின், குருவேந்தன் என்னாது குருராயன் என்றது எது குறித்தற்கோ எனின், நான்கன் வேற்றமையால் அடுத்து மிக்குயர் நெறிப் பொருண்மையின் வந்த காரகச் சிறப் பொருதலைத் தொடர் மொழிப் பெயராய இக் குருராயன் என்பதன்கண் குரு என்பதன் முதனிலை யெழுத்துத் தமிழியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், ராயன் என்பதன் முதனிலை யெழுத்து தமிழியல் விதியின்றி ஆரியவியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும் வந்து இருவகை இயலுங் கோடலின், இதனைத் தம் பெயராகவுடைய பிள்ளையாரும் தமிழ்நூல் வடநூல் என்னும் இருவகை நூற்கும் உரியார் என்பது குறித்தற்கு என்க. ஆசிரியர் "மறைப்புலவன் தமிழ்க்குரிசில் சீகாழிச் சம்பந்தன்"6 என்றதனால் இருவகை நூற்கும் உரியர் என்பது காண்க என்க. அல்லதூஉம், பொருள் வேறுபடாது சிறிதே வடிவு வேறுபட்டு நின்ற குருராயன் என்பது தன்னை உள்ளூன்றி நோக்கினர்க்கு இலைமறைக்காய்போல் ஐ என்னும் உயிர்மெய்யோடிருந்த தன் முன்வடிவ முட்கொண்டு விளங்கக்காட்டி நிற்கின்றதாகலின், இதனையுடைய பிள்ளையாரும் தமது கடவுட்டன்மை வேறுபடாது உத்தமபுருட உருவங்கொண்டு நின்ற தம்மை அன்பால் உள்ளூன்றி நோக்கினார்க்குக் குமாரசற்குரு என்னும் பெயர் கொண்டு அளவிகந்த சூரியர் உதயம் போன்று ஒளி வீசும் தம் முன்னுருவாய் தெய்த் திருவுரு வுட்கொண்டு விளங்கக் காட்டி நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. ஆளுடைய பிள்ளையார் புராணம், 3. கந்தரந்தாதி, 56 4. முருகன் துதி. 5. பரபக்கம், முருகன் துதி. 6. சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து வைத்துவழி காட்டு மறைப்புலவன் - சுத்தன் றமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பான் எமக்கருளிச் செய்த திது. மறையவர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப் பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந் திறையவன் உமையா ளுடனருள் தரஎய் தினையென்பார்.7 என்று மூவாண்டிற் பிள்ளையார் திருவருள் வடிவைக் கண்டு சீகாழி யுள்ளார் வியந்து கூறிய வாறாய இச்செய்யுளால் உள்ளூன்றி நோக்கினர்க்குத் தம் முன்னுருவைக் காட்டி நின்றனர் என்பது காண்க என்க. இனி இன்றியமையாக் காட்டுளதேற் காட்டுவதன்றி மற்றைய விரிக்கிற் பெருகும் என்க. அல்லதூஉம், குரு என்பதன் ஈற்று உயிர்மெய்யோடு ராயன் என்பதின் முதலுயிர்மெய்ப் புணராப்புணர்க்கையாய் நின்றதாகலின், இங்ஙனம் ஆனந்த வடிவராகிய பிள்ளையாரும் தாம் கொண்டருளி மானிடத் திருவுருவோடு புணராப்புணர்க்கையாய் நின்றனர் எனக் குறித்தற் கென்பதுமாம் என்க. அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறில் எண்டாக நிற்பவும் ஈற்றில் அவ்வெண்டின்றி ஒற்று நிற்பவும் தொடர்ந்த மொழியாகலின் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும் அதிபக்குவர்க்கு அனுபவப் பொருளாயும் இவ்விரண்டிலும் கலவாது அதீதப் பொருளாயும் நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. இங்ஙனம் குருராயன் என்பதில் குவ்வென்பது இருள், ரு வ்வென்பது அருள், ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம். இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்க என்க. எழுத்தாதிப் பல்வகைக் குறிப்பிற் பொருள்நெறி பற்றி நின்ற நோக்கம் செறிவு நுட்பம் இங்கிதம் இன்பம் கம்பீரம் சிறப்பு உறுதி முதலிய நற்குணந் தழீஇய சொற்புணரீதென்றே, ஆசிரியரும் "சரிதாதி நான்கினுக்கும்"8 என்னும் திருவெண்பாவின் இடைக்கண் குருராயன் என்று இதன் பெருமை தோன்றவைத்தனர் என்க. இஃது இன்னும் விரிக்கிற் பெருகு மென்க. 7. 92வது திருப்பாட்டு (பெரிய புராணம் - 1995) 8. சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி வருமா றெனக்களித்த வள்ளல் - குருராயன் ஞானத்திற் பக்குவர்க ணால்வர்க் குபதேச மானத் தையுநிகழ்த்தி னான். வாது வென்ற சம்பந்தன் என்பதில் பொதுவானே வாதுவென்ற என்றது என்குறித்தோ எனின், எண்வகைக் குன்றத்து எண்ணாயிரவராய பயுடுக்கைப் பறிதலைச் சமணர்கள் ஒருங்கே கூடித் தென்மதுரைக்கண் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற் செய்த சுரவாதம் அனல்வாதம் புனல்வாதங்கள் பிற்படத் திருநீற்றானும் திருவாக்கானும் வென்று திறல்கொண்டமை யன்றியும், பரசமய கோளரி என்று தானே ஒலித்த திருச்சின்னத்தின் தெய்வப்பே ரொலி கேட்டு உளம்பொறாது எதிரிட்டுமறித்த போதமங்கைப் புத்தநந்தியின் பொய்த்தருக்கமும் புழுத்தலையும் பொடிபட்டழியவும், பின்னர் உள்ளது போன் றில்லதைப் பற்றிச் சாக்கியக் குழுவுள் தலைவனாய சாரிப்புத்தன் சிற்சில வகையாற் செய்த சமயவாதந் தலைதடுமாறவும், செந்தமிழ் வேதத் திருமுறை தாங்கி மேம்படும் அறிஞரான் வெற்றிகொண்டமையும், திருவோத்தூரின்கண் அரனுக்கிடுபனை ஆண்பனையாயிற்றே என்று அசதியாடிய அமணக்குழூஉக்களின் வாய்வாதங்கள் மண்பட்டொழியத் தாம் திருவாய்மலர்ந்த திருக்கடைக்காப்புள் ஓர்மொழியானே அவ்வாண்பனை பெண்பனையாகச் செய்து விறல்கொண்டமையும் குறித்ததென்க. அல்லதூஉம், வாது என்பது இலக்கணையாகக் கொண்டு பெருமண நல்லூரின்கண் திருமண நல்விழாவைத் தரிசிப்பான் வந்த மக்கட்கெல்லாம் தொன்று தொட்டு இடைவிடாது உடல்நிழல் போல் சூழ்ந்துள பிறவிப் பெருவாதுகள் அனைத்தும் வென்றதூஉம், திருப்பாச்சில் ஆச்சிராமத்தின்கண் மழவன் மகளார்க்கு அடுத்த முயலக வாது வென்றதூஉம், மருகற்கண் ஓர் வைசியனுக்கு அடுத்த விடவாது வென்றதூஉம், இவை முதலியவும் குறித்த தெனினுமாம் என்க. வெற்றிகொண்ட பொருட்டிறன் முதலியவற்றுள் ஒன்றேனும் தோன்றக் கூறாது இலேசானே வாது என்றது என்குறித்தோ எனின், பிறர்க்கு இங்ஙனம் வேறல் தம்மானும் துணைமையானும் பற்பல நாள் பற்பல வகையில் முயற்சி செயினும் முற்றாதெனினும், பிள்ளையார்க்குச் செந்தமிழ் பொழியும் திருவாக்கானே ஆண்டாண்டு அவ்வேறல் முற்றியதென்பது குறித்தென்க. வாது என்பது குருராயன் என்பதனோடும் சம்பந்தன் என்பதனோடும் சாராது நடுநின்றமையின், அத்துவித நெறியினும் சேராது துவிதநெறியினும் சாராதுநின்ற பதிதவாதிகளது பயனில்வாதம் எனினும் அமையும் என்க. எதிரேற்கப்பட்டு எதிர்வினைக் கீழ்ப்பட மேற்கொள் வினையெழுச்சிப் பொருளின் வந்த வெல் என்னும் பிறவினைப் பகுதியால் அடுத்த வென்ற என்னும் பெயரெச்சம் சம்பந்தன் என்னும் பெயர் கொண்டு முடிந்து, இங்ஙனம் வெற்றி கொண்ட பருவம் பிள்ளையார்க்கு இளங்குமாரப்பருவம் எனக் குறித்ததென்க. என்னை? எச்சம் என்பது இளஞ்சேய் மேற்றாகலின். சம்பந்தன் என்பது பிள்ளையார்க்கு மூவகைக்கண் மூவுலகம் புகழப் பொற் பொடு புணர்ந்த அற்புதத் திருப்பெயராகலின் ஆண்டுப் பெருமான் அருளப் பிராட்டியார் அளித்த சிவஞானத் தெள்ளமுதருந்தி அச்சிவஞானத்திற்கு உரிமை பூண்டமை குறித்ததென்று உணர்க. ஆயின் சிவஞானசம்பந்தன் என்னாது சம்பந்தன் என வைத்தது என்கொலோ எனின்:- சிவஞானமுமன்றிச் சிவானந்தம் ஆனந்தாதீதம் என்பவைக்கும் உரிமை பூண்ட தலைமை பற்றியும் அவற்றை உலகுயிர்க்கு இங்ஙனமென் றுணர்த்தி உரிமை செய்விக்கும் மாட்சி பற்றியும் அங்ஙனம் வைத்த தென்க. அல்லதூஉம், சுருங்கச் சொல்லுதல் வனப்பினால் சம்பந்தன் எனவே சிவஞானசம்பந்தன் என உரிமைச்சிறப்பு வழக்கால்தானே தோன்றும் என வைத்த தெனினுமாம் என்க. எங்ஙனம் எனின், இந்திரன் என்பது இறைமைச் சிறப்பு வழக்கால் தேவேந்திரனையும், உடையானென்பது பொருட்சிறப்பு வழக்கால் பொன்னுடையானையும் குறிக்குமாகலின் என்க. வள்ளல் மலர்த்தாள் என்னும் ஒருவகைவனப்பு இருவகைச் சந்தி மூவகை மொழித்தொகைச் சொற்றொடர்க்கண் வள்ளல் என்னும் குணப் பெயர் வினைமுதற்றொழிற் பயனறப்படு முடைமைக் குணப்பெயராய் நின்று பிள்ளையாரது திருவடிகள் தம்மை அடைந்தோர்க்கு வரையாது ஆனந்தப் பேற்றை அளித்து அவரைத் தாங்கிக்கோடலைக் குறித்த தென்று உணர்க. அஃதேல் ஆனந்தப்பேற்றைத் தருதற்குந் தாங்கிக் கோடற்குங் கருத்தர் பிள்ளையாரன்றோ? அங்ஙனம் இருப்பத் திருவடிகட்கு இங்ஙனங்கூறல் எங்ஙனமெனில்:- திருவடிகள் தம்மை வழிபடுவோர்க்கு இரங்கி இன்பமீதற் பொருட்டு எழுந்தருளும் பிள்ளையாரது படர்ச்சி நிகழ்ச்சிக் கருவியாய் நின்று அவரை அவ்வழிபடுவோர்பால் வருவித்தலானும், ஞானதீக்கை பண்ணுங்கால் அவர் சென்னியிற் சூட்டப்பட்டு ஐக்கியம் வருவித்தலானும், நித்தியானந்தப் பேறுவாய்க்கு மாகலின் இங்ஙனமென்க. அல்லதூஉம், வாட்டமில் அருளும், கோட்டமில் குணனும், அசையா நிலையும், நசையா மனனும், வெகுளாப் பண்பும், விடாப் பேரன்பும் செவ்வியின்மரீஇ எவ்வௌர் எவ்வகை வேட்டனர் அவ்வகை விருப்பொடு குறிப்பின் வரையாதீதல் வள்ளற்றன்மை என்பவாகலின், இவ்வள்ளற் றன்மையைத் தம்பால் அடைந்தோரிடை அடைவித்தருளும் கருணைபற்றி அங்ஙனங் கூறியதெனினும் அமையும் என்க. அஃதேல் வள்ளற் றன்மை வழங்கு மலர்போலுந் திருவடி யென்றன்றோ உரை விரித்தல் வேண்டும், அங்ஙனமன்றி வள்ளற்றன்மை யுடைய மலர்போலுந் தாளென விரித்திருக்கின்றதே எனின்; அங்ஙன மடைவித்தலும் வள்ளற் றன்மையே யாகலினும் உடைய தொன்றன்றே உதவப்படு மாகலினும் இங்ஙனம் விரித்தல் அங்ஙனம் கூறற்கும் அமைதியாம் என்க. அல்லதூஉம், அருளின்றி அமையாத வள்ளற் றன்மைக்கு அவ்வருளே முதற்காரணமா மாகலின், ஆனந்த வடிவராகிய பிள்ளையார் அவ்வானந்தப் பேற்றை அளிக்கும் வள்ளற் றன்மைக்கு முதற் காரணமாகிய திருவருட்சத்தியே திருவடி என்று குறித்தற்குக் காரணத்தைக் காரியமாக ஈண்டு உபசரித்த தெனினும் அமையுமென்க. அல்லதூஉம், எமது திருவடிகளை வழிபடின் வீட்டின்பம் எளிதில் தருவேம் என்று பிள்ளையார் விதித்தருளிய அருள் விதிப்படி அறிந்து வழிபடின், அவ்வழிபட்டால் அவ்வீட்டின்பந்தரப் பெறுதல் உண்மையாகலின், அவ்வுண்மை நோக்கி ஈண்டுக் கூறியதெனினும், பிள்ளையார் திருமேனி முற்றுந் தெய்வத்தன்மை பூரணமாகலின் அதனை யறிவிக்க ஈண்டுக் கூறியதெனினும் அமையுமென்க. திருவடிகட்கு அடையாய வள்ளல் என்பதூஉம் ஆசிரியர் பெயராய வள்ளல் என்பதூஉம், அடிஇணை எதுகைத் தொடையாய் எழுத்து அசை சீர் ஒலி பொருளாதிகளால் ஒற்றுமை கொண்டு நின்று பிள்ளையாரது திருவடித் தீக்கைக்கும் ஆசிரியர் அதிபக்குவத் தன்மைக்கும் உள்ள ஒற்றுமைப் பொருத்தம் விளக்கின என்க. வள்ளல் என்பது பிள்ளையார்க்குக் காரணச் சிறப்புப் பெயராகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின், இத்துணைச் சிறப்பின்று என்று மறுக்க, என்னெனின், அவயவச் சிறப்பால் அவயவிக் குணம் வெளிப்படுத்தலே பெரும்பாலும் இன்பமாகலில் என்க. இதனைப் "போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம்"9 என்பதனாற் காண்க என்க. வள்ள மலர்த்தாளெனப் பாடமோதி வள்ளம் போலுங் குவிந்த வாய்மலரென மலர்க்கடையாக உரை விரிப்பாரும் உளர். அங்ஙனம் விரித்தலின் இத்துணைப் பெரும்பயனின்றென மறுக்க. இங்ஙனம் இன்னும் விரிக்கிற் பெருகும் என்க. மலர் என்பது வள்ளற் றன்மையின் அருகு வைத்தமையின், ஈண்டு நிறைதலுங் குறைதலுமாய் உள்ள நீர்நிலைக்கண் தோன்றியும் அழிந்தும் விரிந்தும் குவிந்தும் வாடியும் நின்று, வண்ணமும் நறையும் வாசமும் சிறிதே சிறுபோது கொண்டு பறித்தலாதிய சிறு தொழிற்படும் மலர்களை நீக்கி, ஆண்டுத் திரிபிலாத் தெய்வத் தெண்ர் நிலைக்கண் ஒழியாமலர்ச்சியும் அழியாமணமும் பொன்னிறப்பொலிவும் இன்னறவொழுக்கும் மென்மையுந் தண்மையும் வியப்புறுமுருவும் கண்டோர் கண்கவர்காட்சியும் மாட்சியுங் கொண்டு முக்காலமுங் குன்றா மலரைக் குறித்தமை காண்க. என்னெனில் பிள்ளையார் திருவடிகள் மெய்ஞ்ஞான விளக்கமாய் அருண்மணம் வீசிப் பொன்னிறம்பொலிந்து ஆனந்தமொழுக்கி மெல்லெனவுற்றுத் தண்ணெனக் குளிர்ந்து தரிசிக்கின்றோர் வியப்புறுமுருவாய் அவரது விருப்பநோக்கம் பரவ என்றும் ஒரு தன்மையவாய் இருக்கின்றமையின் என்க. ஆயின் மலர் போலுந் தாளென்று உவமை விரிந்தபடி நிற்றற்கு இடங்கொடாது மலர்த்தாளென்றது என் னென்னின், அத்தெய்வத் திருமலர்தனைக் கண்டோர்க்குச் சிறிய விடயானந்தந் தருதலேயன்றித் திருவடிபோற் சிவானந்தந் தரமாட்டாச் சிறுமை நோக்கி என்க. அல்லதூஉம், சுபவடிவாய் எவ்வகைச் சுபங்கட்கும் முன்னின்று அதனை விளங்குறச் செய்வதாய் மகிழ்வுடையோர் யாரும் மேற்கொண்டணியப்படுவதாய் நிற்கும் நன்மலர் போலும் எனக் கூறினும் அமையும்; என்னெனின் திருவடிகள் அருள் வடிவாய் ஆனந்தப் பேற்றிற்கு முன்னின் றளிப்பதாய் அளிவுடையோர் தம் தலைமேற்கொண்டு அணியப்படுவதாய் நிற்றலின் என்க. அல்லதூஉம் மலரை அடைந்த வண்டுகள் அதனது தேனுண்டு களி கொள்ளுதல் போல் திருவடிகளை அடைந்தோரும் அருளானந்தம் பெற்று இறுமாத்தலின் இங்ஙனம் கூறிய தெனினும் அமையும் என்க. இதனைத் தொகையுவமை அணியாகக் கூறலின்றி வள்ளன் மலர்த்தாளெனக் கூட்டி அற்புதத் தொகையுவமை யணியாகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அவர் கூறுங் கூற்றிற் பெரும் பயனின்றென மறுக்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகு மென்க. தாள் என்பது அடிகட்கன்றியும் முயலுதற்கும் உண்ணின்ற பொருள் வெளிப்படாமைக்கும் அதனை வெளிநின்றோர் உட்சென்று கவரப்படாமைக்கும் காப்பாகக் காப்பினிற்குங் கருவிக்கும் அணிதற்கணியின் இருகடையும் இணைத்து நிற்கும் இடைப்பூட்டிற்கும் இடனாகி வந்த பலபொரு ளொரு சொல் லாகலின், திருவடிகள் தம்மை அடைந்தோரை ஆனந்த நிலையுட் சேர்த்தலும் அங்ஙனஞ் 9. திருவாசகம், திருவெம்பாவை, 20. சேர்ந்தோர் மீட்டும் அவ்வானந்த நிலையினின்றும் போத அசைவு தோற்றி வெளிப்படாமைக்கும் அவத்தைகளுள் சென்று தாக்கிக் கவரப்படாமைக்கும் காப்பாக அருளுருவாய் அதன் முன்னிற்றலும் சிவத்துடன் சீவனை இடைநின்று கூட்டுவித்தலும் குறித்தது காண்க. இக்குறிப்புணர்த்த வன்றே மலர்க்கால் என்னாது மலர்த்தாள் என்ற தென்றுணர்க. தலைமேல் வைத்து என்பது ஆசிரியர் தம் ஆசாரியராகிய பிள்ளையார் திருவடி தீக்கை செய்யத் தாம் பெற்றமை குறித்தது காண்க. அஃதேல் வைக்கப்பட்டு எனச் செயப்பாட்டு வினையெச்சத்தால் இருத்தற் பாலதன்றோ எனின், ஆசிரியர்க்கு அத்திருவடிக்கண்ணே உள்ள பிரியத் தொடர்ச்சியின் பெருமை தோன்ற இங்ஙனம் நின்று அங்ஙனங் குறித்தது என்க. இதற்கு இவ்வாறன்றித் தலைமேல் பாவனையால் வைத்தெனக் குறித்ததென்று கூறுவாரும் உளராலோ எனின், அவ்வாறு கூறிற் பிள்ளையார் இந்நூலாசிரியர்க்கு ஞானாசிரியர் என்பதும் இவர் ஞானதீக்கை யுடையார் என்பதும் விளங்குதலின்றி மற்றை ஆசிரியர்போல் எடுத்த நூல் இனிது முடிதற்பொருட்டுப் பாவனையால் வழிபடு கடவுட் பழிச்சினர் என்று இலேசிற் கருதப்படுமாகலின் அங்ஙனங் கூறல் மரபன்றென்க. தலையில் வைத்து என்னாது தலைமேல் வைத்து என்றமையால், மறைமுடிக்கண்ணே வயங்காநின்ற அச்செல்வத் திருவடியின் சீர்மை தோன்றிற்று என்க. ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை, அறிவு தனக்கெதிரிட்ட உணர்ச்சிப் பொருட்கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப் பொருட்டிறன் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியும் எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியுங் கோடலின் கருவித்திறனும் தன்திறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறிநின்றமையைக் குறித்து காண்க. இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவநாயனாரும் "ஓர்த்துள்ள முள்ளதுணரின்"10 என்றா ரென்று அறிக. உள்ளத் தழிவில் என்பதில் உள்ளம் என்பதன் பகாப்பதவியீற்றுப் பகுபதப் பொருளின் இடவாகு பெயராய் அணுப் பொருட்கண் வந்த உள் என்னும் பகுதி உட்புறத்தும் அப்போதம் எழுஞ் சிற்றசைவும் பேரசைவுங் குறித்தது காண்க. உள்ளம் என்பது வாதனையால் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது. வள்ளலென்பது போன்று ஒழுகிசையாய் வர உள்ள வழிவில் என்னாது பொறுத்திசையாய் வர உள்ளத் தழிவில் என்றது என்கொலோ எனின்:- வேற்றுமை வழியாகலினும், போதவசைவு சார்பின்றி யமையாமை குறிக்கவேண்டு மாகலினும், சாரியையோடு புணர்த்தி அங்ஙனங் கூறியதென்க. அழிவு என்பதில் அழி என்னும் பொதுவினைப்பகுதி முன்னர்த்தோற்ற நிகழ்ச்சிப் பின்னர் ஓர் காலத்தும் ஓரிடத்துமன்றிக் கெடுதற் பெயர்ச்சிக்கண் வந்ததாகலின், அப்போத நிகழ்ச்சி பின்னரெக்காலத்தும் உட்புறமென்னு மெவ்விடத்துந் தோற்ற நிகழ்ச்சியின்றி ஒடுங்கியவாறு குறித்ததென்று உணர்க. இங்ஙனமன்றி உள்ளத்தழிவில் என்பதற்கு 10. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. மனத்தின் அசைவற்ற இடத்தெனப் பொருள் கூறுவாரும் உளராலோ எனின், மனத்தின் அசைவு போதவசைவறில் தானேயறும் ஆகலினும் அஃதறாதவிடத்து இஃதெவ்வாற்றானும் அறாதாகலினும் அது பொருந்தாதென்க. இதனை ஆசிரியர் கூறிய "பற்றாத போதும் பதறும்"11 என்னும் திருவெண்பாவாற் காண்க என்க. அடுக்குந் தேன் என்பதில் அடுக்கும் என்பது அடுத்தல் என்னும் தொழிற் பெயர்க்கண் தல் விகுதி தன்னொற்றுச் சந்தியொடு நீங்க எதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை ககரமெய்ச் சாரியை யூர்ந்து தன்னொற்றுச் சந்தி பெற்று ஆண்டு நின்று இறையும் இடைப்பாடு தோற்றாது செறிதற் பெயர்ச்சியும், அடுக்கல் என்னும் தொழிற்பெயர்க் கண் அல் விகுதி நீங்க அவ்வெதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை விகுதி நீங்க நின்று தன் வரவு கண்டோடிய குற்றுகரமூர்ந்த மெய்க்கண்ணேறி நின்று இறையும் இடைப்போதின்மை படாது பன்முறை மேன்மேலுறுதற் பெயர்ச்சியும் பொருளாகக் கொண்டு இருவகைப் பகுதி யொருவகை யெச்சமாக நிற்றலின், சிறிதும் இடத்தானும் காலத்தானும் பிரிவு தோன்றாது செறிந்து பன்முறை மேன்மேலெழும் ஆனந்தத் தேனென்று குறித்ததென் றுணர்க. உள்ளத் தழிவி லடுப்பது ஆனந்த மாகலின் தேனென்பதை உவமக் குறிப்பால் சிவானந்தத்தேன் என்ற தென்று உணர்க. தேனுண்ட வண்டு அசைவின்றி அத்தேன்மயமாயிருத்தல் போல, ஆனந்தானுபவத்தர் போத அசைவின்றி இவ்வானந்த மயமா யிருத்தலின் உவமையாகக் குறிக்கப்பட்ட தென்று உணர்க. இதனை யொப்புமைக் கூட்ட மொட்டாதிகளாகக் கூறுவாறும் உளராலோ எனின், அவ்வாறு கூறினும் பொருள் சிதையாமையின் ஒருவாறு அமையும் என்க. போத அசைவின்கண் தோற்றல் விடயானந்த மாகலில், போத ஒழிவின் கண் தோற்றல் சிவானந்த மெனக் குறித்தற்கு, உள்ளத் தழிவில் அடுக்குந் தேன் என்ற தென்று உணர்க. எங்ஙன மெனின், உள்ளத் தழியாமையின் அடாத் தேனென்று எதிர்மறுக்கப் படுதலின் என்க. மதுரம் பற்றித் தேனை ஆனந்தத்திற்கு உவமை கூறுவாரும் உளராலோ எனின் அது நா விடயமாய் இறைப்போது நிற்றலின் இத்துணைச் சிறப்பின்று என்க. அன்பரெலா முண்ண என்பதில், அன்பர் என்பது பொருள் புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதும் என்று இடைவிடாது அதனையே விரும்பிப் பயில்வோரைக் குறித்ததென்று உணர்க. எலாம் என்பது சரிதாதி கன்ம மார்க்கங்களைக் கூறும் பிற நூல்களெல்லாம் பருவம் நோக்காது சாதி சமயாசார விகற்பங்களை நோக்கிச் சிலரை நீக்கியும் சிலரை நிறுவியும் அதிகரித்தல் போலாது அச்சாதிசமயாதிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரேனும் பருவத்தராயின் இந்நூற்கு உரியராவர் என்பது குறித்தது என்று உணர்க. 11. பற்றாத போதும் பதறும் பழக்கமறைக் கற்றா லென்னாகக் கலக்காது - சற்றேநீ தீண்டிவிடிற் றான்காண் செனன மரணமது மாண்டுவிடி னீசிவமா வை. உட்கொள என்னும் பொருளுட்கொண்டு பொருட்டுப் பொருளிற் போந்த உண்ண என்னும் வினையெச்சம் ஆனந்தானுபவத்திற்கு விடாத இலக்கணை யாயிற்று என்று உணர்க. என்னை எனில், உண்ணலில் பசி நீங்கல் போல் ஆனந்தானுபவத்திற் பசுத்துவ நீங்கலின் என்க. பயன் காரணம் பற்றி வந்த ஒழிவிலொடுக்கநூல் என்பது ஒழிவிலொடுக்க மென்னும் நூல் ஒழிவிலொடுக்கந் தரு நூல் என இரு வழிக்கும் பொதுவாய சந்தியால் வந்தமையில், தன்னை வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பொது வென்று குறித்த தென்று உணர்க. ஒழிவிலொடுக்க நூலுரைத்தான் என்பதில் வேற்றுமை சாரியை உருபு முதலிய ஒன்றும் விரியாது நிற்றலின், ஞானாசார மன்றிக் கருமாசார மொன்றும் விரியாத இந்நூலின் நின்மலத் தன்மை தோன்றிற்றென்று உணர்க, உரைத்தான் என்பது ஒருவர் மதி நுட்பத்தால் தாம் கண்டறிந்த மாற்றுயர்ந்த பொன்னின் தன்மையைப் பிறரும் அறிந்து பயன் கோடற்குக் கட்டளைக்கல்லில் உரைத்துக் காட்டல் போல், சுருதி குரு அனுபவத்தால் தாம் அனுபவித் தறிந்த சிவானந்தப் பேற்றின் தன்மையைப் பக்குவரும் அறிந்து பயன் கோடற் பொருட்டு நூற்கண் உரைத்துக் காட்டினார் என்று குறிப்புறுத்திற்று என்று உணர்க. என்னெனில் உரை என்பது பொன்னுரையும் பொருளாகக் கோடலின் என்க. உரைத்தான் என்னும் பயனிலை செயப்படு பொருளின் இறுதியில் இயையாது செயப்படு பொருட்கும் கருவிப் பொருட்கு மேல் தாடலை மேல் வைத்து என்பதன் இறுதியில் தொடர்ந்து நின்றது என்னெனின், சிவஞானத் தீக்கையுடையராய் உரைத்தாரென்பது மன்றித் தமதாசாரியர் திருவடி சான்றாகத் தாம் கண்ட அனுபவத்தை விளங்க உரைத்தாரென்பதும் குறித்தற்கு என்க. என்னை? தாடலை மேல்வைத்து எனவே சான்றாக வைத்து என்பது தானே அமையுமாகலின். தலைமேல் வைத்து என்பதன்பின் நிற்கக் கடவதாய ஓர்ந்து என்பது செயப்படு பொருட்பின் இறுதி நிலையாய் நின்றது என்னெனின் இந்நூல் கற்றோர்க்குக் கருமங்குறைந்து ஞானமேலிடுதலுண்மை குறித்தற்கு என்க. எங்ஙனம் எனின், அவ்வோர்ந்து என்பது வினைக்குறையாகலின் என்க. 'உள்ளத்தழிவி லடுக்குந் தேனை யன்பரெலா முண்ண வொழிவிலொடுக்கநூ லோர்ந்துரைத்தான்' எனக் கொண்டு போத ஒழிவின்கண் அடுப்பதாய ஆனந்தத்தை அன்பரெல்லாம் அனுபவிக்கும் பொருட்டு வேதாகம முடிபான ஞானநெறியை ஆராய்ந்து ஒழிவிலொடுக்கம் என்றோர் நூலை உரைத்தார் எனப் பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின் ஆசிரியர் பரஞானமுடையா ரென்பது தோற்றாது அபரஞான முடையாராகப் பொருள்படு மாகலினும், அபரஞானத்தாற் கூறப்பட்ட நூல் மிகச் சிறவாமையானும் அது பொருந்தாதென்க. இந்நூல் இயற்றற்கேற்ற நற்பொருளுடைமையுஞ் சிறப்புப்பாயிர இலக்கணத்துள் ஆக்கியோன் பெயரே என முதனிறுத்தப்பட்ட நிமித்த காரணச் சிறப்புடைமையும் இச்செய்யுள் முடிபுக்கு எழுவாயாந் தலைமையுடைமையும் பற்றி வள்ளல் என முதல் நிறுத்தியது என்க. இந்நூலாசிரியர்க்கு ஆசாரியர் இவரென்பது தோன்றற்கு அவ்வள்ளல் என்பதன் புடை குருராயன் என்பதை நிறுத்திய தென்க. இங்ஙனம் ஆசாரிய ரென்பவர் பிள்ளையார் என்பது தோன்றற்கு ஞானசம்பந்தனென வைத்தல் வேண்டுமாகலின் அந்த ஞானத்தைக் குறிக்கும் பாசவெற்றியாய 'வாது வென்ற' என்பது முன் கூட்டிச் சம்பந்தன் என அதன்புடை நிறுத்திய தென்க. இரண்டாம் அடிக்கண் பிள்ளையார் தாள்கள் நிறுத்தத் தொடங்கி முன்னர் அத்தாள்களின் இயற்கை அருளென்று குறிக்க வள்ளல் என்றும், அதன் வடிவம் ஆனந்த மென்று குறிக்க மலரென்றும் முறையே வைத்து வள்ளல் மலர்த்தாள் என நிறுத்தியதென்க. தாள்களன்றியும் பிள்ளையாரும் அருளியற்கையரே என்பது குறிக்கச் சம்பந்தனென்னுஞ் சத்தந் தோற்றியவுடன் வள்ளற் சத்தந் தோன்ற நிறுத்தியதென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொற்பொருண் முறைநிலை. தாள் என்பதற்கும் தலை என்பதற்கும் உள்ள சொற்பொருள் சம்பந்த இன்பம் பற்றித் தாடலை என்றும், தலை என்பதற்கும் மேலென்பதற்கும் உள்ள உரிமை நோக்கம் பற்றித்தலைமேலென்றும், மேலென்னும் இடப் பொருட்கு வைத்தற்றொழில் சிறந்தது பற்றி மேல்வைத்து என்றும், வைத்து என்பதற்கும் உரைத்தான் என்பதற்கும் இறுதியும் முதலும் இனமாதல் பற்றி வைத்துரைத்தான் என்றும் முறையே நிறுத்திய தென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொன்முறை நிலையும் சொற்பொருண்முறை நிலையுமாம். இங்ஙனம் முற்றும் முறை நிலை கூறப்புகின் மிகப் பெருகுமாகலின் ஒருவாறு காட்டினம். மற்றையவும் இவை கொண்டு உணர்க என்க. இச்செய்யுட் ப
-
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
2. ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
காரணமே காரியமே காரணகா ரியங்கள்
கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 084. உத்திரஞானசிதம்பர மாலை uttirañāṉasitampara mālai
2. இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
2. என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
இதயத்தி லேதயவிலே
என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
என்இயற் குணம்அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
என்செவிப் புலன்இசையிலே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்
தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
சுகமே சுகாதீதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
2. எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 041. நாள்எண்ணி வருந்தல் nāḷeṇṇi varuntal
2. ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
2. ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
சுத்தமணியே அரியநல்
துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
துலங்குமணி யேஉயர்ந்த
ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
தானந்த மானமணியே
சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
சமரச சுபாவமணியே
நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
நினைவிலமர் கடவுண்மணியே
நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
நித்யஆ னந்தமணியே
ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
கன்புதவும் இன்பமணியே
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
2. நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 006. செளந்தர மாலை seḷantara mālai
2. இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 009. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை āḷuṭaiya piḷḷaiyār aruṇmālai
2. உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 059. வேண்டுகோள் vēṇṭukōḷ
3. விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 071. அந்தோ பத்து antō pattu
3. துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 069. பெரியநாயகியார் தோத்திரம் periyanāyakiyār tōttiram
3. தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
-
சுப்பிரமணியம்
சுப்பிரமணியம் என்பது என்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும், சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 004. பதி விளக்கம் pati viḷakkam
3. சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 017. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு attuvita āṉanta aṉupava iṭaiyīṭu
3. நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 023. சிவ தரிசனம் siva tarisaṉam
3. துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
3. தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 034. இறை எளிமையை வியத்தல் iṟai eḷimaiyai viyattal
3. வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
3. இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 057. அனுபவ நிலை aṉupava nilai
3. திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
3. உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
உள்ளனஎ லாங்கலந்தே
ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
உதயாத்த மானம்இன்றி
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
ஏகமாய் ஏகபோக
இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
இலங்நிறை கின்றசுடரே
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
ககன்எலாம் கண்டபரமே
காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
கண்காண வந்தபொருளே
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
துணையாய் விளங்கும்அறிவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
3. பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
3. மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
3. கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள்என் றறைவ ராலோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 149. சத்திய அறிவிப்பு sattiya aṟivippu
3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
-
கணபதி பூஜா விதி
நித்திய கர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு, தத்துவத்திரய மந்திரத்தால் ஆசமித்து, ஹ’ருதயத்தால் தொடுமிடந் தொட்டு, பஞ்சாக்ஷரத் தியானஞ் செய்து, கணபதியைப் பீடத்தை விட்டு அபிஷேகஸ்தான பாத்திரத்தி லெழுந்தருளப் பண்ணி, பீடத்தைச் சுத்தி செய்து, திருமஞ்சனஞ் செய்ய வைத்திருக்கின்ற தீர்த்த கும்பத்தைக் கந்த புஷ்பங்களால் சூழவும் "சிவாய நம, கவசாய நம" என்று சார்த்தி, பின்பு பஞ்சாக்ஷரத்தால் பதினொரு விசை அர்ச்சித்து, அஸ்திராய படு வென்று மணியசைத்து, அஸ்திராய நம வென்று அர்க்கிய வட்டகையில் ஜலம் பூரித்து, பிரணவத்தா லேழு விசை கந்தாதிகளால் அர்ச்சித்து, பின்பு கணேசருக்கு ஆசன மூர்த்தி மந்திரத்தால் புஷ்பஞ்சாத்தி, தேவாரம், திருவாசகம் முதலியவைகளோதி அபிடேகஞ் செய்தல்.
-
செவ்வாய்க்கிழமை விரத முறை
திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ்செய்து, விபூதியைச் சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை செபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஓம் சிவ சூரியாய நம வென்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து, அதன் பின்பு அவ்விடத்திலேதானே நின்றுகொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக்கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக்கொண்டு, பின்பு ஓம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஓரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுதுபடைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவதரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை** முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும்; சிவசரித்திரங் கேட்க வேண்டும்; செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும்; சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம், சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்கவேண்டும்.
-
திருவருண் மெய்ம்மொழி
இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
இதனை மெய்ம்மொழி என்றது என்னையெனின்:- உணர்ந்தோர், இழிகுண ஆங்கார மொழியாய மனிதர் மொழியினும் சமகுண ஆங்கார மொழியாய தேவர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும் உயர்குண ஆங்கார மொழியாய முனிவர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும், இயல்புப் பிரகிருதி மொழியாய அரிபிரமாதியர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும் சுத்தாசுத்தமாயா மொழியாய உருத்திராதியர் மொழி மெய்ம்மொழி என்பர். இங்ஙனமன்றி, மொழித்திறன் தெரிந்து முடிபு முற்றுணர்ந்தோர் அபரவயிந்துவப் பிரணவமொழியாய சதாசிவாதியர் மொழியே மெய்ம்மொழி என்பர் என்னின் இவ்வபரவயிந்துவப் பிரணவமொழிக்கு உபாதான உபகரண அதிகரண வியாபக சித்தமாய் சுத்த வியோமாகாரமாய் விளங்குகின்ற திருவருட் பரவயிந்துவத் துரியத் திருவாக்கான் மொழிந்த உலகெலாம் என்னு மொழியை மெய்ம்மொழி யென்றல் இறும்பூதன் றென்க. வேறு இயைபியல் அடையொன்று வழக்கின்கண் இன்மையிற் கூறியதன்றி இஃதோ ரியைபியல் அடையுமன்றென்க.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ வெளியில், இயற்கைவிளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி செரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச்செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக்கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
4. சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 042. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் kaṇṭēṉ kaṉintēṉ kalantēṉ eṉal
4. மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
4. எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 051. பெறாப் பேறு peṟāp pēṟu
4. அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 082. அருட்பெருஞ்சோதி அடைவு aruṭperuñsōti aṭaivu
4. மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
4. மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
மேன்மேற் கலந்துபொங்க
விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
விளங்கஅறி வறிவதாகி
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
துவட்டாதுள் ஊறிஊறி
ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
உள்ளபடி உள்ளஅமுதே
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
கண்ணே கலாந்தநடுவே
கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
கணிப்பருங் கருணைநிறைவே
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
சுகபோக யோகஉருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
4. முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 116. ஆடேடி பந்து āṭēṭi pantu
4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
4. பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
போக்கிநன் னாளைமடவார்
போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
பொன்னடிக் கானபணியைச்
செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
செய்வதறி யேன்ஏழையேன்
சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
சிந்தைதனில் எண்ணிடாயோ
மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
வேண்டுமறை யாகமத்தின்
மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
மேதையர்கள் பரவிவாழ்த்தும்
ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
வம்புலியு மாடமுடிமேல்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
4. சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
இதனைத் திருவருட் பரவயிந்துவத் துரியமொழி என்றது எங்ஙனமெனின்:- சுத்தமுதலிய மாயாகாரிய ஆகாயங்களினன்றி, நாதாதீதமாய் சிதாகாசமென்று வேதாகமங்களால் மீக்கூறப்பட்ட சிற்சபைக் கண் தோன்றிய மொழியாகலின் அங்ஙனங் கூறியதென்க.
-
திருவருண் மெய்ம்மொழி
ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, "இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் - அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 117. ஞான மருந்து ñāṉa maruntu
5. சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சோதி மலையில் துலங்கு மருந்து
சித்துரு வான மருந்து - என்னைச்
சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 105. நடேசர் கொம்மி naṭēsar kommi
5. கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
கங்கைக் கருளிய கர்த்த னடி
தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
சிங்கம டியுயர் தங்க மடி. - கொம்மி
-
சுப்பிரமணியம்
மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆதாரநாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சுப்பிரமணியம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 003. அருட்பெருஞ்சோதி அட்டகம் aruṭperuñsōti aṭṭakam
5. சுத்தவே தாந்த மவுனமோ அலது
சுத்தவே தாந்த மவுனமோ அலது
சுத்தசித் தாந்தரா சியமோ
நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
புத்தமு தனைய சமரசத் ததுவோ
பொருள்இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
5. தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 047. பேரானந்தப் பெருநிலை pērāṉantap perunilai
5. உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
5. அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
சகவடிவில் தானாகி நானாகி நானும்
தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 063. திருப்பள்ளி எழுச்சி tiruppaḷḷi eḻuchsi
5. புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
5. எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
இடையிலே கடையிலேமேல்
ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
டெய்துவடி வந்தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
கருவிலே தன்மைதனிலே
கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
கலந்தோங்கு கின்றபொருளே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
சேர்ந்தனு பவித்தசுகமே
சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
திருமாளி கைத்தீபமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
சுதந்தரித் தொளிசெய்ஒளியே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 116. ஆடேடி பந்து āṭēṭi pantu
5. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
5. துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 009. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை āḷuṭaiya piḷḷaiyār aruṇmālai
5. உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 099. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் siva sitampara saṅkīrttaṉam
5. பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
பேத மாயதோர் போத வாதமும்
சுத்த முந்தெறா வித்த முந்தரும்
சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
சித்த முஞ்செலாப் பரம ராசியம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 100. அம்மை திருப்பதிகம் ammai tiruppatikam
5. பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
பதிநிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப்
பகையுந் தடாத படிஓர்
தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
சரணமே சரணம் அருள்வாய்
உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே
உயிரான ஒளியின் உணர்வே
அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
-
பேருபதேசம்
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் - ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 040. கண்கொளாக் காட்சி kaṇkoḷāk kāṭsi
6. முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 059. வேண்டுகோள் vēṇṭukōḷ
6. தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 004. பதி விளக்கம் pati viḷakkam
6. அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 021. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் sutta saṉmārkka vēṇṭukōḷ
6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
6. இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
தந்தெனை யாவரும் வந்தனை செயவே
நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 042. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் kaṇṭēṉ kaṉintēṉ kalantēṉ eṉal
6. ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
6. உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 051. பெறாப் பேறு peṟāp pēṟu
6. அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 063. திருப்பள்ளி எழுச்சி tiruppaḷḷi eḻuchsi
6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
6. அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
அம்மண்ட லந்தன்னிலே
அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
கானவடி வாதிதனிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
விளக்கும்அவை அவையாகியே
மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
மெய்ந்நிலையும் ஆனபொருளே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
தலத்திலுற வைத்தஅரசே
சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
தானாய்இ ருந்தபரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
சுகமும்ஒன் றானசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 116. ஆடேடி பந்து āṭēṭi pantu
6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
6. தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 2
மறுமையின்ப லாபமாவது:- உயர்பிறப்பைப் பெற்று இம்மையின்பலாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்களெல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமையின்ப லாபம் என்றறிய வேண்டும்.
-
சுப்பிரமணியம்
சுப்பிரமணியம் ஒருமுகம், மூன்றுமுகம், நான்குமுகம், ஆறுமுகம் ஆனதற்குக் காரணம்: ஒன்று மிரண்டு மில்லாத ஒப்பற்ற பரப்பிரமசொரூபம் நம் பொருட்டுக் குழூஉக்குறியாய், பாவனைக்கு ஒன்றென்று நிச்சயிக்கும், பரகாரண நிமித்தம் (?) ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள். சுத்தராஜசம், சுத்ததாமசம், சுத்தசாத்விகமாகிய மூன்று குணங்களின் கூட்ட விளக்கமாகிய முக்குண விளக்கமே மூன்றுமுகம். பசுமனம், சுத்தமனம், உள்மனம், சங்கலிதமனம் என்னும் நான்கு தத்துவங்களின் கூட்டவிளக்கமே நான்கு முகம். சத்த அறிவின் மூலம், ஒளி யறிவின் மூலம், சுவை யறிவின் மூலம், பரிசவறிவின் மூலம், வாசனை யறிவின் மூலம், ஆத்ம அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம்.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
இங்ஙனம் வாச்சிய லக்ஷியமொழி வரலாறென்னை யெனின்:- மனிதர், தேவர், முனிவர், அரிபிரமர், உருத்திராதியர் மொழியாய ஆங்காரமொழி, பிரகிருதிமொழி, மாயைமொழி என்பவை அசுத்தமும் சுத்தாசுத்தமுமாகிய சத்தார்த்தப் பிரபஞ்ச காரண வைகரியாதி நான்கு வாக்கின் காரியமொழி யாகலின் மெய்ம்மொழியன் றென்க. சதாசிவாதி மொழியாகிய பிரணவமொழி சுத்தசத்தார்த்தப் பிரபஞ்ச காரணமாகிய அபரவயிந்துவ காரியமொழி யாகலின் வாச்சிய மெய்ம்மொழி யாயிற் றென்க. பரசிவ மொழியாய திருவருள் துரிய மொழி, துரிய சத்தார்த்தப் பிரபஞ்ச காரணமாய்ச் சிற்சத்தி பரவிந்துவிற் பதிதலான் நாதமாத்திரத்தினுண்டாய மொழியாகலின், லக்ஷிய மெய்ம்மொழி யாயிற்றென்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 010. அடியார் பேறு aṭiyār pēṟu
7. அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
7. ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 051. பெறாப் பேறு peṟāp pēṟu
7. ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 070. சிவபுண்ணியப் பேறு sivapuṇṇiyap pēṟu
7. துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
விழித்திருந் திடவும்நோ வாமே
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
மன்றிலே வயங்கிய தலைமைப்
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 072. சன்மார்க்க நிலை saṉmārkka nilai
7. செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
7. நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
நிலையிலே நுண்மைதனிலே
நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
நெகிழிலே தண்மைதனிலே
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
ஒண்சுவையி லேதிரையிலே
உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
உற்றியல் உறுத்தும்ஒளியே
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
கருணைமழை பொழிமேகமே
கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
கண்ணோங்கும் ஒருதெய்வமே
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
சுகசொருப மானதருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 115. அம்பலவாணர் ஆடவருகை ampalavāṇar āṭavarukai
7. சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 052. தெய்வமணி மாலை teyvamaṇi mālai
7. நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
7. பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
பசுவான பாவிஇன்னும்
பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
படராது மறையனைத்தும்
உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
உற்றதனை யொன்றிவாழும்
உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
உய்குவேன் முடிவானநல்
தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
தன்னில்நினை நாடியெல்லாம்
தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
தற்பரர்க ளகநிறைந்தே
அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
அடியனுக் கருள்செய்குவாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 008. அபராத மன்னிப்பு மாலை aparāta maṉṉippu mālai
7. கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
-
பேருபதேசம்
மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
8. பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 041. காட்சிக் களிப்பு kāṭsik kaḷippu
8. ஆன்றானை அறிவானை அழிவி லானை
ஆன்றானை அறிவானை அழிவி லானை
அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை
முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 049. இறைவனை ஏத்தும் இன்பம் iṟaivaṉai ēttum iṉpam
8. தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
8. படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 053. திருவருட் பெருமை tiruvaruṭ perumai
8. காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
கற்பகத் தனிப்பெருந் தருவே
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
சித்தியே சுத்தசன் மார்க்க
வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 070. சிவபுண்ணியப் பேறு sivapuṇṇiyap pēṟu
8. புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
துலங்கவும் திருவருட் சோதிப்
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 072. சன்மார்க்க நிலை saṉmārkka nilai
8. செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என்மார்க்கம் நின்மார்க்க மே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 084. உத்திரஞானசிதம்பர மாலை uttirañāṉasitampara mālai
8. கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 090. உற்ற துரைத்தல் uṟṟa turaittal
8. நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
8. ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
ஒளியிலே சுடரிலேமேல்
ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
உறும்ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
செயவல்ல செய்கைதனிலே
சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
சிறக்கவளர் கின்றஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
வானமே ஞானமயமே
மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
சுகம்எனக் கீந்ததுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
8. அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 109. உலகப்பேறு ulakappēṟu
8. பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 001. சித்தி விநாயகர் பதிகம் sitti vināyakar patikam
8. சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
-
முதல் திருமுறை / First Thirumurai 001. திருவடிப் புகழ்ச்சி tiruvaṭip pukaḻchsi
8. பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்
-
சுப்பிரமணியம்
படைவீடென்ப தென்ன? அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்? ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 087. கைம்மாறின்மை kaimmāṟiṉmai
9. பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 116. ஆடேடி பந்து āṭēṭi pantu
9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 049. சிறுமை விண்ணப்பம் siṟumai viṇṇappam
9. சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
சித்தம் என்னள வன்றது சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
நித்த னேஅது நீஅறி யாயோ
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
-
சுப்பிரமணியம்
பிரமாவைச் சிறையில் வைத்த தென்பது யாது? சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலையுடைய பிரமாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க வொட்டாமல், சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்பிரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல், வளர்தல், குற்றம் நீங்கல், ஒன்றினிடத்தில் மலைவடைதல், தெளிதல் முதலிய பஞ்ச கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறையிட்டது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 009. முறையீடு muṟaiyīṭu
9. தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
9. அழகனே ஞான அமுதனே என்றன்
அழகனே ஞான அமுதனே என்றன்
அப்பனே அம்பலத் தரசே
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
கொழுநனே சுத்தசன் மார்க்கக்
கழகநேர் நின்ற கருணைமா நிதியே
கடவுளே கடவுளே எனநான்
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
பழங்கணால் அழுங்குதல் அழகோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
9. இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
9. பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 059. வேண்டுகோள் vēṇṭukōḷ
9. பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
9. அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
ஆதிநடு அந்தத்திலே
ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
ஆடும்அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
உற்றபல பெற்றிதனிலே
ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
குபகரித் தருளும்ஒளியே
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
கோடிகிர ணங்கள்வீசிக்
குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
குலாவும்ஒரு தண்மதியமே
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
சொருபமே துரியபதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 040. தரிசனை வேட்கை tarisaṉai vēṭkai
9. முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
-
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் முற்றிற்று.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 044. திருவடி நிலை tiruvaṭi nilai
10. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 004. பதி விளக்கம் pati viḷakkam
10. ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 032. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் aruṭperuñjōti eṉ āṇṭavar
10. இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 042. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் kaṇṭēṉ kaṉintēṉ kalantēṉ eṉal
10. மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 045. அச்சோப் பத்து achsōp pattu
10. சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 050. திருநடப் புகழ்ச்சி tirunaṭap pukaḻchsi
10. தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 095. பேரருள் வாய்மையை வியத்தல் pēraruḷ vāymaiyai viyattal
10. வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
10. வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
வத்திலே வான்இயலிலே
வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
வண்ணத்தி லேகலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண
வரத்திலே மற்றையதிலே
வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
வைத்தஅருள் உற்றஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
திரளிலே தித்திக்கும்ஓர்
தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
செப்பிடாத் தெள்ளமுதமே
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
சொருபமே சொருபசுகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 059. இன்ப மாலை iṉpa mālai
10. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 076. ஆனந்த நடனப் பதிகம் āṉanta naṭaṉap patikam
10. மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
மாக்களாய் ஆன்மாக்களின்
மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
வள்ளலாய் மாறாமிகத்
திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
தேவாய் அகண்டஞானச்
செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
செம்மலாய் அணையாகவெம்
பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
பரமபதி யாய்எங்கள்தம்
பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
பரமமோ க்ஷாதிக்கமாய்
அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
ஆர்ந்துமங் களவடிவமாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 039. பற்றின் திறம் பகர்தல் paṟṟiṉ tiṟam pakartal
10. நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 054. கொடி விண்ணப்பம் koṭi viṇṇappam
10. முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
முந்து றேன்அவர் முற்பட வரினும்
சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 088. நெஞ்சொடு நெகிழ்தல் neñsoṭu nekiḻtal
10. சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 112. வேட்கைக் கொத்து vēṭkaik kottu
10. தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 2
மறுமையின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை யாதென்றறிய வேண்டில்:- அன்பு தயை முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடைபடாமல் முயன்று பலநாளனுபவித்துப் புகழ்படவாழ்தலென் றறிய வேண்டும்.
-
சுப்பிரமணியம்
ஈசுவரனுக்கு உபதேசித்த தென்ன? உருத்திர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈசுவர தத்துவத்தினியற்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்திருப்பதால், கிரியாகாரண பூதமாயும் ஞானகாரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியையற்ற நிர்விஷய அனுபவம் ஈசுவர தத்துவத்திற்கு - நியதி செய்வது? - சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றித் தோன்றாது. இதுபற்றி யுபதேசஞ் செய்தாரென லாயிற்று.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 2
பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:- தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி, மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும், பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்தபூதகாரண பிரணவ தேகத்தையும் தோன்றப்படுதலுமின்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும் பெற்றவர்களா யிருப்பார்கள். உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்; புறத்தே மண் கல் முதலியவற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல. உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்; புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது. உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்; புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல. உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்; புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித் தசைக்கமாட்டாது. உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்; புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது. ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும். அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் பார்த்தல் முதலிய விஷயங்களையும் பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவனவல்ல; தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில், சுவர் மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பன வல்ல. அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்துமுள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த விடத்திருந்தே கண்டறியும். அண்ட பிண்டங்களி லெவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த விடத்திருந்தே கேட்டறியும். எவ்விடத் திருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த விடத்திருந்தே சுவைத்தறியும். எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த விடத்திருந்தே பரிசித்தறியும். எவ்விடத் திருக்கின்ற சுகந்தகங்களையும் அவர் நாசி இருந்த இடத் திருந்தே முகர்ந்தறியும். எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த விடத்திருந்தே கொடுத்தல் கூடும். எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த விடத்திருந்தே நடத்தல் கூடும். அவரது வாக்கு எவ்விடத்திலிருக்கின்ற எவ்வௌர்களோடும் இருந்த விடத்திருந்தே பேசுதல் கூடும். மற்ற இந்திரியங்கள் இருந்த விடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும். மன முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல; தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும். அவரறிவு ஒன்றையும் சுட்டியறியாது; தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும் எல்லா உயிர்களையும் எல்லாப் பண்புகளையும் எல்லா அனுபவங்களையும் எல்லா பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி யறியும். அவர்கள் நிர்க்குணத்தராவார்களல்லது, தாமச இராசத சாத்துவிக முதலிய முக்குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்; புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவனவல்ல. உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்; புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவனவல்ல. உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்; புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது. உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்; புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது. அன்றிக் காலம் வித்தை ராகம் புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை. மாயையால் பேதப்படார்கள்; சுத்தமகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள். ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்பவைகளால் தடைபடார்கள். அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு, இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல. பனி, மழை, இடி, வெயில் முதலியவற்றாலும், இராக்கதர், அசுரர், பூதம், பிசாசு முதலியவற்றாலும், தேவர், முனிவர், மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்பவைகளாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் அவர் தேகம் வாதிக்கப்படாது; வாள் கத்தி முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது. எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும், எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோற்றலும் அவர் தேகத்திற்கு உரித்து. இறந்தோரை எழுப்புதல் வார்த்திபரை வாலிபராக்கல் முதலிய கருமசித்திகளும் யோகசித்திகளும் ஞானசித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும். சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும். பஞ்சகர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள். அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும். அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும். அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும். சர்வசக்தியு முடையவர்களாய், எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய், ஆணவம், மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் அம்மலவாதனைகளும் இல்லாதவர்களாய், பேரருள்வண்ண முடையவர்களாய் விளங்குவார்கள். ஜடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்சகிருத்தியங்களும் செய்யும். அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோகாந்தம் என்கின்ற ஆறந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்குமென்று அறியவேண்டும். இவை பேரின்பலாபத்தை யடைந்தவர் பெருமை யென்று அறிய வேண்டும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 004. பதி விளக்கம் pati viḷakkam
11. வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
11. நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
11. என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
இயல்உருவி லேஅருவிலே
ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
எறிஆத பத்திரளிலே
ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
ஒளிஒளியின் ஒளிநடுவிலே
ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
ஒளியேஎன் உற்றதுணையே
அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
அய்யனே அரசனேஎன்
அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
அப்பனே அருளாளனே
துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
தூயனே என்நேயனே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 116. ஆடேடி பந்து āṭēṭi pantu
11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 135. போகம் சுகபோகம் pōkam sukapōkam
11. அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 004. பதி விளக்கம் pati viḷakkam
12. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
12. அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
அவ்வுருவின் உருவத்திலே
அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
அவ்வொளியின் ஒளிதன்னிலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
பக்கநடு அடிமுடியிலே
பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
பலித்தபர மானந்தமே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
வாழ்வே நிறைந்தமகிழ்வே
மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
வரமே வயங்குபரமே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
துரியமே பெரியபொருளே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 098. சற்குருமணி மாலை saṟkurumaṇi mālai
12. பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 001. சித்தி விநாயகர் பதிகம் sitti vināyakar patikam
12. பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
-
அருள்நெறி
வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன? தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள். அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லையென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.
-
நடந்தவண்ணம் உரைத்தல்
"மனத்திற்கு அகோசரமென்பது, மனத்திற்கு விஷயப்படாததென்று பொருள் படுமேயல்லாது சிறிது விஷயமாகிப் பெரிது விஷயமாகாதென்று பொருள்படாதென்றும் அவ்வாறு பொருள் கொள்வது லட்சண உபலட்சண விதியல்லவென்றும் ஒரு காலத்தில் ஒரு பொருள் சிறிது விஷயமானால், மற்றொரு காலத்தில் சிறிது விஷயமாகும், பிறிதொரு காலத்தில் சிறிது விஷயமாகும். இவ்வாறு முழுவதும் விஷயமாகுமென்றும், அவாங் மனோகோசரமென்றதில் மனத்திற்குச் சிறிது விஷயமான படி வாக்குக்கும் சிறிது விஷயமாதல் வேண்டும் என்றும், இங்ஙனம் மனவாக்குகளுக்குச் சிறிது விஷயமாகுமென்று கொண்டபோது கண், காது, மூக்கு, மெய், வாய், கை, முதலிய மற்ற இந்திரியங்களுக்கும் விஷயமாகுமென்பது தானே விளங்குதலால் பிரம்ம லட்சணத்தோடு விரோதப்படுமென்றும் மன முதலான அந்தக்கரணங்களுக்கும் கண் முதலான இந்திரியங்களுக்கும் நாம ரூபக்கிரியைகள் விஷயமாகுமல்லது தத்துவாதீதமாகிய பிரமம் விஷயமாகுமென்பது விபரீத உணர்ச்சி என்றும் மனோலயம் கிடைத்த பின்னர் பிரம்மானுபவம் கிடைக்கும் என்றும், மனம் சிறிது தோன்றினும் ஆத்மஞானம் விளங்காது என்றும் மனம், அசத்து, சடம், அநித்தியம், துக்கம், அசுத்தம் உடையது. பிரமம், சத்து, அறிவு, நித்தியம், இன்பம், சுத்தம், உடையது. ஆகலின் மனத்திற்குப் பிரம்மம் எவ்வகையினும் விஷயமாகாது என்றும் இவ்வாறே வேதம் முதலிய கலைகளினும் ஆப்த வாக்கியங்களினும் ஆணையிட்டு இருப்பதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்பது அநுபவத்திற்கும், மற்ற ஹேதுக்களுக்கும் யூகங்களுக்கும் பொருந்துகின்ற பட்சமென்றும்" சுவாமிகள் சொல்லினர்.பின்னர் சிலபொழுது நாயக்கர் சும்மா விருந்தனர். அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப் பார்த்து, "சும்மா விருக்கப்படாது. உத்தரிக்க வேண்டும்" என்றார்கள். நாயக்கர் சற்று நேரம் சென்று மீளவும் "மனத்தினால் பிரம்மத்தை நினைக்கக்கூடும்" என்று முன் சொல்லியதையே சொல்லினர்.
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, 'அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும், 'எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!' என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞானதேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய், சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, 'சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்நதநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, 'இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.'
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 080. திருவடிப் பெருமை tiruvaṭip perumai
13. சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
13. கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
13. அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
ஆங்காரி யப்பகுதியே
ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
அடியினொடு முடியும்அவையில்
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
கணித்தபுற நிலையும்மேன்மேல்
கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
கலந்துநிறை கின்றஒளியே
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
குறியே குறிக்கஒண்ணாக்
குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
கொண்டதனி ஞானவெளியே
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
சுகயோக அனுபோகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
13. உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 071. திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம் tiruvōttūr sivañāṉa tēsikaṉ tōttiram
13. அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்தஅறிவே
-
சுப்பிரமணியம்
சுவாமி அம்மையிடத்தில் குழந்தையைக் கொடுக்க, அம்மை குழந்தை ஆறையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கையால் தடவ, முகம் ஆறும் ஒன்றி வேறாயும், உடல் ஒன்றாயும், கால் இரண்டாயும் ஆனதென்ன? பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னும் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில்? தோன்றி விளங்கும்போது, சுத்த வாசனா தோற்றமாகிய அறுபொறியாகிய குழந்தையை யருள் வசமாக்க, அருட்சத்தி விகாரமன்றி அவிகாரமாய் அறு பொறியையும் அருட்போதக் கையால் அடக்க, விஷயங்களை அறிந்து தோயாமலிருக்க அறுபொறிகள் ஒன்றாயும், குறிஆறாயும், அனுபவவிளக்கம் சாதனவிளக்கம் இரண்டுந் திருவடியாயுந் தோன்றி, சமாதிநிலை விளங்குவதே.
-
திருவருண் மெய்ம்மொழி
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
14. ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
அடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், முடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், அடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலை ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், அது அதுவாகி நிறைந்தும் அதுஅதுவாகி விளங்கியும், அதுஅதுவாகி இனித்தும், ஆங்காங்கு ஆதீதமாகிக் கலந்தும், இவை அனைத்துமாகி ஒருமித்தும், அதீதா தீதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் கருணைப் பெரும்பதியாய கடவுளே! எல்லாச் சத்திகளுக்கும், எல்லாச் சத்தர்களுக்கும் எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத் தேவிகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் எல்லாச் சாதனர்களுக்கும் எல்லாச் சாத்தியர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் எல்லாத் தத்துவங்களுக்கும் எல்லா பொருட்களுக்கும் எல்லாக் குணங்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் எல்லா அனுபவங்களுக்கும் மற்றெல்லாவற்றிற்கும் முதற்காரணமாயும் நிமித்த காரணமாயும் துணைக் காரணமாயும் இவை அல்லவாயும் விளங்குகின்ற திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 052. பொதுநடம் potunaṭam
14. அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
அருள்வடி வெடுத்தெழுந் தருளி
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
நிலைஎலாம் அளித்தமா நிதியே
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
வயங்கநல் வரந்தந்த வாழ்வே
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
14. பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 012. கருணை மாலை karuṇai mālai
14. அத்த னேதணி காச லத்தருள்
அத்த னேதணி காச லத்தருள்
வித்த னேமயில் மேற்கொள் வேலனே
பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
14. பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
15. போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
தூயர்கள் மனம்அது துளங்கித்
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
தனிஅருட் சோதியால் அந்த
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
வழங்குவித் தருளுக விரைந்தே.
-
சுப்பிரமணியம்
உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது. அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், சுப்பிரமணிய உண்மையாகிய விளக்க மென்னும் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் - தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.
-
திருவருண் மெய்ம்மொழி
நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் - வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.
-
தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை
இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
16. சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி
எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
17. சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
17. சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
நன்மையும் நரைதிரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
சுகவடி வம்பெறும் பேறும்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
17. நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
நண்ணுறு கலாந்தம்உடனே
நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
ஞானமெய்க் கொடிநாட்டியே
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
முன்னிப் படைத்தல்முதலாம்
முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
வாய்ந்துபணி செய்யஇன்ப
மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
வளத்தொடு செலுத்துமரசே
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
துரியநடு நின்றசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
ஆயின் ஓரிடத்தே மொழியாது அகத்தும் புறத்தும் மொழிந்தது என்னை யெனின்:- அக்காலை அருட்பொதுவின்கண் நின்ற அந்தணர் அறவோர் முதலிய பலரும் அவர்வழி மற்றையோரும் சேக்கிழாரென்னும் பேரிற் சிறந்த பேரறிவுடைய பெரியர் திருவருட்டுணையால் இப்பெருங் காப்பிய முடித்தனர். இஃது மாயைத் துணையால் தேவர் முனிவர் மனிதர் இயற்றிய மற்றைக் காப்பியங்கள் போல் எளிதன்று என்று அன்புகொண்டு அனுபவித்து உய்தற்பொருட்டும் அம் மெய்ம் மொழியைக் கேட்டுச் சேக்கிழாரது புறக்கரணங்கள் சுத்தியாதற் பொருட்டும், புறத்தே உலகெலாம் என்றெழுந்து தத்துவ படலத்தால் மயங்கிய அவரது ஆன்மதிருட்டியைப் படல நீக்கி அறிவு விளக்கிச் சுத்தி செய்தற் பொருட்டு அகத்தே உணர்ந்தோதற் கரியவன் என்று முடிந்த தென்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
18. தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
18. மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி - குரு
துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
ஆயின் அகத்தும் புறத்தும் மொழிதற்கு அளவை எங்ஙனமெனின்:- திருவருட் பரவயிந்துவத் துரியமொழி புறத்தே எழுந்து அகத்தே நிறைந்தது சுத்திசெய்தற் கருணையான் வாயுப்போல என்னுஞ் சுதன்மியமாகிய இக்கருதல் வியாத்தியால் அறிகவென்க. என்னையெனின்:- பொருட்புலப்பாட்டின்கண் சிற்சத்தியானது பரவிந்துவிற் பதிதலும் அதனால் அதன்கண் நாதமுண்டாதலும் உண்மையாதலின் பக்கமும் பக்கத் தன்மையும் பெறப்பட்டன. வரலாற்றுப் புலப்பாட்டின்கண் அகத்தும் புறத்தும் சுத்திசெய்தற் கருணையானன்றி அம்மொழி தோன்றாதாகலின் சிதைக்கப்படா அளவைத்திறன் பெறப்பட்டது. உறழ்ச்சிப் புலப்பாட்டின்கண் நேர்ச்சிப்பொருள் வான்புறத்தெழுந்து அகத்து நிரம்புதல் எங்ஙனம் அங்ஙனந் திருவருட் பரவயிந்துவப் புறத்தெழுந்து வாக் ககத்து நிரம்புதல் கூடுமாகலின் அளக்கப்படுகை மாறுபடாமை பெறப்பட்டது. ஆகலில் அசம்பவம் அவ்வியாத்தி அதிவியாத்திகளு மின்று. இதனால் வியாத்திமுறை காண்கவென்க. இனி இம் மெய்ம்மொழிக்குப் பொருள் விளக்கஞ் செய்யுமிடத்துக் காட்சியும் கருதலும் இன்றியும் உரையளவையும் வேண்டுங்கால் வேதாகம முதலிய குறித்தல் வேண்டுமா லெனின், குறித்தல் வேண்டா. என்னை யெனின்:-
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
18. சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
18. தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
-
முதல் திருமுறை / First Thirumurai 001. திருவடிப் புகழ்ச்சி tiruvaṭip pukaḻchsi
18. வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
சுத்த சன்மார்க்க லக்ஷிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்தறியப்படாத பெரிய உலகின்கண்ணே, பேராசை பெருங்கோபம் பெருமோகம் பெருமதம் பெருலோபம் பேரழுக்காறு பேரகங்காரம் பெருவயிரம் பெருமடம் பெருமயக்கம் முதலிய முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய மற்றை இடங்களிற் பிறப்பியாமல், குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய இவ்விடத்தே, உறுப்பில் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னை பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
19. சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 098. சற்குருமணி மாலை saṟkurumaṇi mālai
19. நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 117. ஞான மருந்து ñāṉa maruntu
19. மேலை வெளியா மருந்து - நான்
மேலை வெளியா மருந்து - நான்
வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
சாலை விளக்கு மருந்து - சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
19. அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்"
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
20. துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 013. திருவருள் விழைதல் tiruvaruḷ viḻaital
20. வந்தருள் புரிக விரைந்திது தருணம்
வந்தருள் புரிக விரைந்திது தருணம்
மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
செய்வித் தருள்கசெய் வகையே.
-
உபதேசக் குறிப்புகள்
16. பிண்ட இலக்கணம்
தலை அண்டம், மார்பு முதலானவை பிண்டம். அண்டத்தில் பிண்டம் புருவமத்தி, அண்டத்தி லண்டம் பிரமரந்திரம். இதில் சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம். இதில் பிரகாசமாயும் அறிவாயும் பிராணவாயு வாயும்...... இருக்கின்றது. பிண்டத்தில் பிண்டம் இடுப்புக்குங்கீழ் பாதபரியந்தம். பிண்டத்தி லண்டம் பீசம். பிண்டம் வயிறு..... மேற்படி பிண்ட ஸ்தானத்தில் கர்த்தாக்களிருக்கு மிடம் கோசம், தொப்புள், மார்பு; இவர்கள் வண்ணம், நாடி, உஷ்ணம், காற்று, குறி முதலிய பேதங்களாம். ஆதலால், பிரம விஷ்ணு ருத்திர பேதங்கள் அனந்த கோடி. அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இது போலவே பிரமாண்ட நியாயம்.
இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை? கண்டம், சிரம் சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
பிண்டத்தில் பூர்வமென்பது தலை, உத்தரமென்பது கால். பூர்வமென்பது பூர்வசம்பந்தத்தால் வந்த பெயர். பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல். பிண்டத்திற்குக் கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடதுகை; கொடிமரம் தொப்புளடி, மேற்படி மரத்தின் அளவு உண்ணாக்கு, கொடி புருவ மத்திக்குள்ளிருக்கும் வபை, பலிபீடம் தொப்புள், நந்தி என்பது பசு ஆணவமலம், மூலாதாரத்தினது உள்ளங்கமே சிவலிங்கம், வாய் வாசல், புருவமத்தி சபை, அறிவே பதி; ஆதிகால், அநாதிதலை; கீழ் தலை, மேல் கால். ஆதலால், பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் என நான்கு. இதில் பூர்வமென்பது புறப்புறமாகிய நக்ஷத்திரம் போன்ற இந்திரியக் காட்சி. பூர்வபூர்வம் புறமாகிய சசி போன்ற கரணக்காட்சி. உத்தரம் அகப்புறமாகிய பரிதி போன்ற ஜீவக்காட்சி. உத்தரோத்தரம் அகமாகிய அக்கினி போன்ற ஆன்மக்காட்சி. ஆதலால் அகம், அகப்புறம் புறம், புறப்புறம் என்னும் நான்குமே மேற்குறித்த பூர்வாதி உத்தரோத்தரமென வழங்குவது.
பிண்ட நியாயம் பிண்ட நியாயம். அண்டமென்பது கழுத்துக்கு மேல் சிரம். பிண்டமென்பது கழுத்துக்குக் கீழ் பாதம் வரையில். அண்டத்தில் சோமன் சூரியன் அக்கினி பிரமா விஷ்ணு ருத்திரன் இருக்குமிடம் நெற்றி. பிண்டத்தில் பிரமா, விஷ்ணு, ருத்திரன் இருக்குமிடம் பிரஜாபதி, தொப்புள், மார்பு. இவர்கள் வாயு வடிவம். இதிற் பிரம பேத மனந்தம். விஷ்ணு ருத்திர பேத மனந்தம். அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இதுபோலவே பிரமாண்ட நியாயம். ஜீவஸ்தானம்
ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2. அவை சிரசு. கண்டம். சிரத்திலிருக்கிற ஜீவன் இறக்கிற தில்லை, கண்டத்திலிருக்கிற ஜீவன் இறக்கும்.
சுவர்க்க நரகம்
மனித தேகமே சுவர்க்கம் நரகம் இருக்கிற இடம். பிரமபதம் விட்டுணுபதம் ருத்திரபதம் மயேசுரபதம் சதாசிவபத முதலிய பதங்களின் இடம் இந்த மனிததேகத்தில் கண்டம் முதல் உச்சி வரையில். இந்தப் பதங்களுக்குச் சுவர்க்கம் என்று பெயர். நரகம் நரகாதிகளுக்கிடம் உந்தி முதல் குத பரியந்தம். இயமனிருக்குமிடம் குதத்திற்கு இடது பாகம்.
ஆன்மாவும் ஜீவனும்
ஆன்மா தனித்தே யிருக்கும். ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
பூர்வோத்தரம்
பூர்வம் என்பது தலை, உத்தரம் என்பது கால். பூர்வம் என்பது பூர்வ சம்பந்தத்தால் வந்த பெயர்.
பெருங்கோயில்
கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடது கை, கொடிமரம் தொப்புள், கொடி மரத்தின் அளவு உள் நாக்கு, பலி பீடம் வயிற்றின் மேடு, நந்தி ஆணவம் முதலிய மலங்கள் உள்ள பசு, சிவலிங்கமே மூலாதாரத்தின் உள்ளங்கம்.
ஆதி அநாதி
ஆதி அநாதி, கீழ் மேல் என்பவை கால் - தலை.
காட்சி
பூர்வம் - புறப்புறம், இந்திரியக் காட்சி. பூர்வ பூர்வம் - புறம், கரணக் காட்சி. உத்தரம் - அகப்புறம், ஜீவக் காட்சி. உத்தரோத்தரம் - அகம், ஆன்மக் காட்சி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 019. பிள்ளைச் சிறு விண்ணப்பம் piḷḷaich siṟu viṇṇappam
21. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
21. சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
-
உபதேசக் குறிப்புகள்
17. பிண்டானுபவ இலக்கணம்
மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்குமேல் நாற்சதுரமான ஒரு பையுண்டு. அதில் 16 வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது. அதைத்தான் மானசதடாக மென்று சொல்லுகின்றது. 16-க்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகிறது. அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன்வர்ணமாக இருக்கும். அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும். அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றுக்கு நூற்றிலொரு பங்காக வெகு நேர்மையாக இருக்கும். அதன் வண்ணம் பொன்மயமாயிருக்கும். அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமனென்று சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் அடங்குங் காலம் கேவலகாலம் என்றும் சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலத்தில் செயற்கையானால் கருத்தரிக்கும். அது சிருட்டியென்று சொல்லப்படும்.
அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது மூலாக்கினி என்று சொல்லப்படும். அது தொப்புளிலிருந்து உண்டாவதால் விஷ்ணு தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் ருத்திர பாகத்திலுள்ள ஆவி பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது. அதை க்ஷீராப்தி என்று சொல்லுகிறது. அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது. அதைச் சேஷனென்று சொல்லுகின்றது. அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற பச்சை மேனியா யொரு சத்தியுண்டு. அதை விஷ்ணுவென்றும், அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும் மூன்று உள்ளன. அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவியெனச் சொல்லுகின்றது. மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை வைத்தாரென்பது.
குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது. இந்த நாடிகளின் மூலமாய் அந்தச் சத்து மேலே செல்லும்போது பசுமைவண்ணமாகவும் கீழ்ச் செல்லும்போது பீதவண்ணமாகவும் செல்லுகின்றது. மேலே செல்லுவதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பும் அதின் சாரம் கெட்டுக் கீழே செல்வதினால் ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது. மேலே செல்வதில் ஜீவிப்புண்டாகுவதால் காத்தல் தொழிலை உணர்த்துகின்றது. மேலும் மேலே செல்லுகின்றதை விஷ்ணு வைகுந்தம்போகின்றா ரென்றும் கீழே செல்லுகின்றபோது க்ஷீராப்தியில் இருக்கின்றாரென்றும் சொல்லுகின்றது. கீழே செல்லும் நாடி முன் சொன்ன தொப்புள் நாடியுடன் கலப்புண்டாய் பிரமனுக்கு உஷ்ணத்தைத் தருகின்றது.
அன்றியும் இந்தச் சதுரமான பையின் வலப் பாகத்தில் ஒரு பையுண்டு. அந்தப் பையில் அக்கினி நிரம்பிக் காரணமாயிருக்கின்றது. அது புசித்த வஸ்துக்களின் சத்தைக் கிரகித்துக்கொண்டு அந்தசத்தை மலமாக இடது பாகத்தில் சேர்த்து விடுகின்றது. கிரகித்த சத்தை முன்சொன்ன க்ஷீராப்திப் பையில் சேர்க்கின்றது. இதை வடவாக்கினி என்று சொல்லுகின்றது. மேலும் இந்த வெள்ளை ஜலத்தை அக்கிரமமின்றிச் சமப்படுத்திப் பிரளயம் வாராது காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த உதராக்கினி குறைவுபட்டு க்ஷீராப்தியின் ஜலத்தின் தரங்கெடுமானால் நோயுண்டு.
இந்தப் பையாகிய ஸ்தானத்திற்குமேல் இரண்டரை அங்குலத்தில் இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.
இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்கு இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.
இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.
இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள. மகேசுவர ஸ்தானம் முதல் விந்துஸ்தானம் வரையிலும் முன் போல் இடம் நாடி தொழில் வண்ணம் முதலியவு முள்ளன. நாதஸ்தானந்தொட்டுத் துவாதசாந்தம் வரையில் அனுபவவெளியாகிய ஆகாச பேதமயமா யிருக்கும். அதற்குமேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில் விளங்கும்.
மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும். இதற்குச் சிவாகார பூரண ஸ்தம்பம் என்று பெயர்.
முன் சொன்ன இருதயாக்கினிப் பை அக்கிரமமாய் விரிந்து, விசேஷ அக்கினி ஜ்வாலை விசிரிம்பித்துக் கீழிருக்கும் க்ஷீராப்திப் பையிலிருக்கும் ஜலத்தைச் சுருட்டிக்கொள்ள, ஜீவனுக்கு மரண காலம் நேரிடும். மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் அருந்தல் பொருந்தல். இவை சமமானால் மிருத்தியு வராது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
22. எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 078. தலைவி வருந்தல் talaivi varuntal
22. பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
-
உபதேசக் குறிப்புகள்
18. மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
இந்த மனிததேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றா திருப்பதற்கு நியாயம் யாதெனில்: இத்தேகம் பாதாதி பிரமாந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். ஆதலால், வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. தேகத்தில் பிருதிவி வாயு இரண்டும் முக்கிய காரணமானதால், செம்மையும் கருமையுமாகிய உரோமம் உண்டாயிற்று. இது நிற்க. நரை உண்டாவது தத்துவக் கெடுதியால். இத்தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்கும். அவசியம் மேற்படி இடங்களில் ஆண்பாலுக்கு உரோமம் தோன்றும். மேற்படி இடங்கள் எவை எனில்:- கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 2, மேலிமை 2, நாசிக்கு உட்புறம் 2, மீசை 1, மோவாய் கன்னம் 2, காதுக்குட்புறம் 1, இருதயம் 1, கைம்மூலம் 2, உந்தியின் மேல் ரேகை 1, அடிவயிறு 1, லிங்கத்தடி 1, புட்டத்தின் கீழ்ப்புறம் 1, தொடை 2, முழந்தாள் 1, பாதத்தின் மேலிடம் ஒன்று, மேற்படி விரலின் மேலிடம் பலவும் 1, முதுகு 2, விலாப்புறம் 2, முழங்கைக்குங் கீழ் 2, கைவிரலின் மேற்புறம் 1 ஆக 27. இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.
திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் - இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.
மேலும் பெண்களுக்கு உரோமம் தோன்றாதிருப்பதற்குக் காரணம் ஆணிடத்தில் 3-ம் பெண்ணிடத்தில் 4-ம் ஆக இருப்பதால், மேற்படி பெண்களுக்குத் தலை, புருவம், இமைக்கீழ் மேல், மூக்கினுட்புறம், கைம்மூலம், லிங்கத்தடி - இவைகள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். உரோமம் விசேஷம் மற்ற இடங்களில் உண்டாவது தத்துவக்கெடுதி. மேலும் உரோமம் தோன்றாதிருக்கிற இடங்க ளெல்லாம் விந்துவாகிய பிரகாசம் ஜாஸ்தியா யிருக்கும். மேற்படி விந்துக்கள் மோவாய், மார்பு ஸ்தனத்தின் கீழ்ப்புறம் - இவைகளில் நிரம்பி யிருக்கின்றன. அதனால் பெண்பாகம் உரோமம் இல்லை.
பரமாத்மா ஜீவாத்மா வென்னும் இரண்டின் நித்தியாநித்தியங்களையும் பிண்ட பேதத்தில் உயர்வுதாழ்வையும் காரியகாரண சம்பந்தங்களையும் தெரிவித்தல் யாதெனில்: சாமானியம் விசேடமென்று ஜீவன் இரண்டு. இவற்றில் சிறந்தது சாமானியம். தாழ்ந்தது விசேடம். ஜீவன் இரண்டென்ப தெவ்வாறெனில்: ஆன்ம காரணம் சாமானியம், ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேட மென்பது மன அறிவு. இவை பூர்வோத்தரமா யிருக்கின்றன. பூர்வமென்பது லிங்கஸ்தானம். உத்தரமென்பது பிந்துஸ்தானம். ஆதலால் சிருட்டிக்குக் காரணம் லிங்கம். ஆதலால், சாமானிய ஜீவன் காரணப் பட விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்தமில்லாத பக்ஷத்தில் சிருஷ்டி காரியப்படாது. இது சாதாரண பாகம். அசாதாரண சம்புபக்ஷ சிருஷ்டியில் சாமானியத்தைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். சாமானியம் சந்தானம், விசேட மதற்குள் ளடங்கியிருக்கும். பிரமாணம் யாதெனில்: அங்குலிகளில் நகத்திற்கு அடி சந்தானமும், வளர்ச்சி விசேடமும் போல.
மேலும், நெற்றியில் உரோமம் உண்டாகாத வஸ்துக்களெல்லாம் ஆன்மகாரணஅறிவு காரியப்பட்டது. மிருகாதிகளுக்கு உரோமம் உண்டான படியால் ஆன்மகாரண அறிவு காரணகாரணமாய் அருகியிருக்கின்றது. எப்படி எனில்: சர்வேசுரனென்னும் நாமத்தின் பிரத்தியேக ஆத்ம சைதந்நியமாகிய வஸ்து எங்கும் பூரணமாய் இருப்பது இயற்கையுண்மை ஏகதேசம்... ஆதலால், கடவுளை - அறிவதற்கு - ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும். மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவது உத்தமம்.
இதன்றி, சமய மத ஏற்பாட்டில் மகான்கள் குழுக்குறி - அடையாளங் - களாகப் பெயரிட்ட விக்கிரக பேதமாகிய சிலா, லோக, தாரு, தந்த, இஷ்டி முதலியவைகளில் கடவுள் காரியப்படுவது சரியை கிரியாதி பேதம் எட்டில் சரியையில் சரியை கிரியையில் சரியை - இவ்விரண்டையும் செய்கின்ற மந்தர்களினது நியாயம். மேலும் அதில் தோன்றி அனுக்கிரகிப்பதுஞ் சாலம். அருளுருவமான அறிவே உருவங்கொண்ட சிவத்தை அறிவாலே அறிவது உண்மை. மேலும் அனலுக்குச் சரியான கர்ப்பூரம், பஞ்சு, கரி, கட்டை முதலிய வஸ்துக்களில் அக்கினி சீக்கிரம் காரியப்படும். கதலி முதலிய வஸ்துக்களில் காரியப் படுவது தாமசம். அதுபோல், பக்குவான்மாக்க ளிடத்தில் கடவுளருள் வெளிப்பட்டால் சுத்தமாதி மூன்று தேகமும் அத்தருணமே வரும். பக்கவமில்லாதவர்களுக்கு அருள் செய்தால் வாழையினிடத்தில் அக்கினி காரியப்படுவது போலாம். ஆதலால், கடவுளருள் வெளிப்பவதற்கு அபக்குவிகள் தங்கள் செயற்கைக் குணங்களாகிய ராகத் துவேஷாதிகளை நீக்கல் வேண்டும். சினம் வெகுளி முதலியவற்றையும் நீக்கல் வேண்டும்.
சினமென்பது யாது? உள்வேக்காடு, புடநியாயம்போல், இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டம் பண்ணும். வெகுளி யென்பது மீசை துடித்தல், கண்சிவத்தல், கைமுதலிய உறுப்புகள் துடித்தல், வாய் குழறி மேல் விழுந்து கூவுதல் - இஃது ஆயுளை நஷ்டம் பண்ணும். ஆகையால், எவ்வகையிலும் கோபத்தின் பூர்வோத்தரமாகிய சினம் வெகுளி என்னும் கூற்றை ஒழித்தல் அவசியம்.
இதுபோல் மற்றக் கெடுதியாகிய காமக் குரோதாதி சம்பந்தங்களையும் நீக்கல் வேண்டும். காரணமென்பது கரண சம்பந்த முடையது. கரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழிற் றன்மை உடையது, மட்குடத்தைப்போல். மேலும், இலக்ஷணம் அடையாளம், இலக்ஷியம் அடையாளத்தை யுடையது. அங்கம் இலக்ஷணம். ஆதலால், இலக்ஷணம் இலக்ஷியம் அங்கம் காரணம் கரணம் முதலிய சம்பந்தங்களுமொன்று மில்லாது, கெடுதியாகிய தத்துவங்களை அடக்கல்வேண்டும்.
உரோமதத்துவமும் பிந்துஸ்தானமும்
மனித தேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றியும், நெற்றி முதலாகிய இடங்களில் தோன்றாமலுமிருப்பதற்கு நியாயம்: இந்தத் தேகம் பாதாதி பிரமரந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். ஆதலால் அதனுடைய பிருதிவி காரியமே தேகவடிவம். ஆதலால் வாயுவின் கூறு செம்மை. கருமயிர் பிருதிவியின் கூறு. இந்த நியாயத்தால் தேகத்தில் செம்மையும் கருமையும் கூடிய உரோமம் உண்டாயிற்று. நரை தத்துவக் கெடுதியால் நேரிட்ட ஆபாசம்.
இந்தத் தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்குகின்ற இடமாதலால் அவசியம் உரோமம் இருக்கும், மேற்படி இடங்களின் விவரம்: கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 3, மேல் இமை 4, நாசிக்குட்புறம் 5, மீசை 6, கன்னம் 7, காதுக்குட்புறம் 8, இருதயம் 9, கைம் மூலம் 10, உந்தியின் மேல்ரேகை 11, அடிவயிறு 12, லிங்கத்தடி 13, புட்டத்தின் கீழ்ப்புறம் 14, தொடை 15, முழந்தாள் 16, பாதத்தின் மேலிடம் 17, மேற்படி விரலின் மேலிடம் 18, முதுகு 19, 20, 21, விலாப்புறம் 22, 23, முழங்கையின் கீழ் 24, கணுக்கைக்கு மேல் 25, கைவிரலின் மேற்புறம் 26, இந்த இடங்களில் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றுவது தத்துவ ஆபாசம். தத்துவங்களினது உட்புற மலங்களே வாயுவின் பிருதிவியாதலாலும், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரியமில்லாததினாலும் உரோமம் தோன்றுகிறது.
அக்கினி காரியப்பட்ட இடங்களில் உரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கும் நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதனாலதற்குப் பிந்துஸ்தான மென்றும், அறிவென்றும், பாலமென்றும், முச்சுடரென்றும், முச்சந்தியென்றும், முப்பாழென்றும், நெற்றிக்கண் என்றும், கபாடஸ்தானமென்றும், சபாத்துவாரமென்றும், மகம்மேருவென்றும், புருவமத்திய மூலமென்றும், சிற்சபை யென்றும் பெயராம். ஆதலால் பிந்துவென்பதே ஆன்மா. பிந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம். ஆதலால் உரோமம் அருகியிருக்கிறது.
பிந்து நாதங்கள்
பூர்வத்தில் பிந்துவும் உத்தரத்தில் நாதமுமிருக்கின்றன. பிந்து ஆன்மா; நாதம் பரமான்மா. நாதத்தோடு பிந்து சேர்ந்தால் பிந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. பிந்துவுக்கு இது உத்தரநியாயம். பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்கித் தத்துவங்களைத் தன்வசப் படுத்தியும், தொழில்களைச் செய்வித்தும், தனித்தும், தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கிறபடியால், பிந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும்.
பாலஸ்தானம்
நாம் இருப்பது பாலஸ்தான மாதலால், பாலம் சிறந்தது. இதற்கு அனுபவ சித்திகள் திரயோசாந்தம் வரையில் உண்டு.
பெண் பிறவியும் பிந்து விளக்கமும்
ஆணிடத்தில் பிந்து விளக்கம் மூன்று பங்கும், பெண்ணிடத்தில் பிந்து விளக்கம் நான்கு பங்கும் இருப்பதால், பெண்களுக்குத் தலை, புருவம், இமைக் கீழ் மேல், மூக்கு உட்புறம், கைம்மூலம், லிங்கஸ்தானம் - இவை 7 ஸ்தானங்கள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். பெண்களுக்கு உரோமம் தோன்றாமல் இருக்கிற இடங்களெல்லாம் பிந்து விளக்கமாகிய பிரகாசம் ஜாஸ்தியாக இருக்கும். பெண்களுக்குப் பிந்து இருக்கிற ஸ்தானம் மூன்று: வாய், மார்பு, ஸ்தனத்தின் கீழ். உரோமம் விசேஷம் தோன்றுவது தத்துவ ஆபாசம்.
சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன் சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன் ஆக 2. இவற்றில் சிறந்தது சாமானியம்; தாழ்ந்தது விசேஷம். ஜீவன் இரண்டென்பதற்கு விவரம்: ஆன்மகாரணம் சாமானியம்; ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேஷ மென்பது மனஅறிவு. இது பூர்வோத்தரமாய் இருக்கின்றது. பூர்வமென்பது லிங்க ஸ்தானம். உத்தரமென்பது விந்து ஸ்தானம். சிருட்டி முதலியவைகளுக்குக் காரணம் லிங்க ஸ்தானம். ஆகையால், சாமானிய ஜீவனே காரணப்பட்டு, விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்த மில்லாத பக்ஷத்தில் சிருட்டி நடவாது; இது சாதாரணம். அசாதாரணத்தில், சம்புபக்ஷ சிருட்டியில் சாமானிய ஜீவனைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்வது. சாமானியம் சந்தான மாதலால் விசேடம் உள்ளடங்கி யிருக்கின்றது. நகத்துக்குச் சந்தானம் அடியும் விசேஷம் வளர்ச்சியும் போலவாம். மிருகாதிகளுக்குச் சாமானியம் காரியப்படாததனால் சாமானியம் இல்லையென்று சொல்லப்பட்டது. கடவுள் காரியப்படுவது
கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க, சிலாவிக்கிரக பூத தாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது மந்த நியாயம். அதில் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்லுவது ஜாலம். காய்ந்த கட்டையினிடத்தில் அக்கினி அதி சீக்கிரம் பற்றுதல்போல், பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும். பக்குவ மில்லாதவர்க்கு அருள் செய்தாலும், வாழையினிடத்தில் அக்கினி செல்வது போலவாம். ஆதலால், கடவுள் அருள் வெளிப்படுவதற்குமுன் அபக்குவர்கள் தங்கள் செயற்கையாகிய ராகத்துவேஷாதி அசுத்தங்களைப் போக்கிக்கொள்வது உத்தமம்.
கோபம்
சினம் வெகுளி யென்பவற்றின் பொருள்: சினம் உள்வேக்காடு, புடநியாயம் போல். இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும். வெகுளி மீசை துடித்தல், கண் சிவத்தல், கைகால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல். இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும். ஆகையால் எந்த வகையிலுங் கோபங் கூடாது. அதை அவசியம் ஒழிக்க வேண்டியது.
காமக் குரோதங்கள் காமக் குரோதாதிகள் முதலிய பெருங் குறைகளை அவசியம் நீக்க வேண்டியது. காரணம்
காரணமென்பது கரண சம்பந்தமுடையது. காரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழில் தன்மை யுடையது, மட்குடத்தைப்போல்.
இலக்ஷணம்
இலக்ஷணம் அடையாளம்; இலக்ஷியம் அடையாளத்தை உடையது; அங்கம் இலக்ஷணம்.
-
உபதேசக் குறிப்புகள்
19. சமய நூல்களின் உண்மை
பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.
* சௌராதி சண்டை பரியந்தம் - சூரிய பூசை முதல் சண்டேசுவர பூசை முடிய.
புராண ஹ’ருதயம் பெரியபுராணத்திற் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். சமய நூல் உண்மை மாணிக்கவாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர். தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்துக் கற்பனையாய்ச் செய்த சரித்திரம்; அதற்கு மேற்கொள் வேண்டுவதின் பொருட்டுச் சில பாடலுஞ் செய்து, புராணத்தில் மேற்குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிச்சயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்க்கத்தில் பகிரங்கமாய் இனி வெளிப்படும். (வேறொரு குறிப்பு) சூரபத்மனுடைய யுத்தம் முழுமையும் தத்துவ சம்மாரமே. சுப்பிரமணியர் விநாயகர் மயிலின் மேலும் பெருச்சாளியின் மேலும் ஏறினார்களென்கிற தாத்பர்யம் வேறு. அது தெரியாம லந்தச் சுவாமிகளைத் திருவிழாக் காலத்தில் வாகனங்களின் மேல் ஏற்றுதல் தெரியாமை. 20. சமய நூல்களில் பிழை சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும். 21. கற்பமும் பிரளயமும்
மகா கற்பம் - மூலப்பிரகிருதியினின்று உண்டாம் சிருஷ்டி முதல் பிரமாவின் ஆயுள்வரையில் ஏற்பட்டுள்ள காலம்.
அவாந்தர கற்பம் - சதுர்முகப் பிரமனுடைய ஒரு நாட்குரிய காலம்.
இந்த இரண்டு கற்பத்தின் நடுவே ஒவ்வொரு ஒடுக்கமுண்டாகிறது. அது 1. நித்தியம், 2. நைமித்திகம், 3. பிராகிருதிகம், 4. ஆதியந்தகம் என நால்வகைத்தாம்.
நித்தியப் பிரளயம் - மரணமே நித்தியப் பிரளயம்.
நைமித்திகப் பிரளயம் - பிரமனுடைய கற்பமுடிவிலுண்டாகின்ற ஒடுக்கம்.
பிராகிருதிகப் பிரளயம் - மகத்துவ முதல் விசேட பரியந்தம் ஒடுக்கத்தை யடைவது.
ஆதியந்திகப் பிரளயம் - தத்துவஞானத்தால் யோகிக்கு உண்டாகும் ஒடுக்கம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
23. பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.
-
மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
சத்தியக் கியானானந்த சொரூப சாக்ஷாத்கார சுத்த சிவகுல சிவாசார சிவானுபவ சிவப் பிராமணோத்தம சிவத்துவ போதக சிகாமணிகளாகிய சுவாமி யவர்கள் பரம கருணாம்பர பத்ம பாத யுகள சந்நிதிக்கு அடிமை பக்தி பூர்வகமாக அனந்த முறை தண்டனிட்டுச் செய்து கொள்ளும் விண்ணப்பம்: சுவாமிகள் கடாக்ஷித்தருளிய நிருபத்தைப் பூசித்து வாசித் தறிந்தேன். அந்த நிருபத்திற் குறித்தபடி சிவபுண்ணியத் திருவிழாவைத் தரிசிக்கும்படி பிரயாண சித்தனாயிருந்தேன். இத் தருணத்தில் இந்த பார்வதிபுரத்தில் பிராமணர் இருவர்களுக்கு இராஜாங்க விவகார வழியில் ஒரு பெரிய ஆபத்து நேரிட்டு அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கின்றார்கள். அவர்கள் இத்தருணத்தில் சிறிது சகாய் செய்தால் உயிர் வாழ்வோம் இல்லாவிடில் உயிரிழந்து விடுவோ மென்று பரதபித்து எழுதிய கடிதம் வந்து சேர்ந்தபின் நான் அவ்விடம் வரும் பிரயாணம் ஆலசியப்பட்டது. இங்கு கூடியவரையில் அவர்கள் விஷயத்தில் சகாய் செய்ய வேண்டுவது கருணைக்கு இலக்ஷிய மாகலில், என் மனது இவ்விடம் வருவதற்கும் அவ்விடம் போவதற்கும் துணிவு தோற்றாமல் ஊசலாடுகின்றது. இது சிறிது துணிவு பெற்றபின் நான் வருகின்றேன். தற்காலம் அடிமை வந்திருப்பதாகவே சாமிகள் திருவுளங்கொண்டு மேற்குறித்த சிவபுண்ணியத் திருவிழாவை சிறப்பாக நடத்துவிக்க வேண்டுமென்றும் சுவாமிகள் திருவடிகளைச் சிந்தித்துப் பிரார்த்திக்கின்றேன். மற்றவைகளை நான் சந்நிதியில் வந்து விண்ணப்பஞ் செய்துகொள்ளுகிறேன். அடிமையின்மேல் கருணாநிதியாகிய சாமிகள் திருவுள்ளம் வேறுபடா தென்கிற துணிவுபற்றி இங்ஙனம் விண்ணப்பம் செய்துகொண்டேன். சாஷ்டாங்க தெண்டன்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
24. நித்த பரானந்த ஜோதி - சுத்த
நித்த பரானந்த ஜோதி - சுத்த
நிரதிச யானந்த நித்திய ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - எல்லா
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
25. பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
செல்வமே நான்பெற்ற சிறப்பே
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
வாழ்வித்த என்பெரு வாழ்வே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர். வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
26. துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம தானதுலகில்
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
வாழ்வெலாம் பெற்றுமிகவும்
மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
மனநினைப் பின்படிக்கே
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
யாடுக அருட்சோதியாம்
ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணைநம் ஆணைஎன்றே
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
திசைவுடன் இருந்தகுருவே
எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
இலங்குநட ராஜபதியே.
-
பேருபதேசம்
மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.
-
மனு முறைகண்ட வாசகம்
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ! கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூசிநின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ! பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ! ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ! வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ! தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ! தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும், தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
27. பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 001. அன்பு மாலை aṉpu mālai
27. ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
-
உபதேசக் குறிப்புகள்
28. சரஸ்வதியை மூக்கறுத்தது பிரமதேவன் பத்தினியாகிய சரஸ்வதியை மூக்கறுத்தது யாதெனில் பிரமதேவனது சிரசில் ஒரு முகமாகிய அகங்கார தத்துவத்திற்கு உபகருவியாவன. அவரது பத்தினியாகிய சரஸ்வதி. மேற்படி கல்வியின் முகப்பை அல்லது முகத்தலையாகிய மூக்கை அறுத்தது என்பது அடக்கியது. இல்லாவிட்டால், அபரஞானமே ஒழியப் பரஞானம் வராது. 29. சந்திர சாபம் சந்திரனுக்கு இரண்டு தண்டனை என்பது யாதெனில்: கணபதியாகிய அவாவை உல்லங்கனம் பண்ணினதால் சண்டாளத்துவம் நேரிட்டது. சந்திரனுக்குக் கலைகுறைந்ததும் சிவன் சிரசில் தரித்துக் கொண்டதும் யாதெனில்: தக்கனாகிய ஜீவபோதத்திற்குப் பெண்கள் என்னும் உபகரணங்கள் 27. இவற்றை மனமாகிய சந்திரனுக்குக் கல்யாணம் என்னும் செயற்கையைச் செய்து, சமமாகப் பார்க்கும்படித் தக்கன் சொன்னதைத் தடுத்து, கிருத்திகை உரோகிணியாகிய ஆசை மோகம் இரண்டையும் பாராட்டி, மற்றப் பெண்களைச் சந்திரன் அலக்ஷியம் செய்தான்.செய்யவே, தக்கனது சாபத்தால் பதினாறு கலையின் கண்ணியங்கெட்டு ஒவ்வொன்றாய்க் குறைய பயங் கொண்டு பிரமாவாகிய பாச அறிவினிடத்துச் சொன்னான். பிரமன் தக்கனது பலத்தை எண்ணித் தன்னால் முடியாது என்று பதியாகிய சுத்த அறிவினிடத்தில் சொல்லும்படிச் செய்தான். அங்ஙனம் சொல்லலும், சிவமானது சந்திரனாகிய மனத்தின் வியாபார கலைகளை ஒடுக்கி, ஒரு கலையான சுத்த மனத்தைத் தானாகிய அறிவின் சிரம் என்னும் பிரஞ்ஞையில் தரித்து, சாபம் வீண் போகாமல் ஏறியும் குறைந்தும் இருக்கும்படி செய்தது. இப்படிச் செய்யாவிட்டால் அனுபவம் வராது. 30. தக்ஷ யாகம் தக்கன் என்பது யான் எனது என்று அகங்கரிக்கும் ஜீவபோதம், தக்கன் யாகத்தை அழித்தது என்பது ஜீவபோதத்தை அழித்தது. 31. சூரபத்ம சம்ஹாரம் பதுமாசுரன் என்பது: பதுமம் - நாபி, அ - அவா, சுரன் - சுழித்து எழுதல். நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும் தடைபடாதது பத்மாசுரனாகிய அவா. கஜமுகம் என்பது மதம். சிங்கமுகம் என்பது மோகம். இவைகளை வெல்வது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்ச சத்தியாலுங் கூடாது. ஆதலால் சிவத்தால் தடைப்பட்டது. சுப்பிரமணியம் என்னும் ஷண்முகரால் சம்மரிக்க வேண்டியது எப்படி எனில்: பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய சம்வேதனை என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறி வென்னும் முகங்களோடு, சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன், கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால், தயாவடிவாய் அவா மோக மதங்களை நாசஞ் செய்வது சூரசம்மாரம். மயில் என்பது மேற்படி தத்துவங்கள் நஷ்டமானாலும் அவற்றின் அக்கிரமம் அதிக்கிரமம் கெட்டுக் கிரமம் மாத்திரம் இருப்பது. பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாதலால், அவற்றை அசைய வொட்டாது மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே ஷண்முகம். விகல்ப ஜாலமே மயில். இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு. மேலும், நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் மணிபோல் ஓர் ஜோதி யிருக்கிறது. அந்த ஜோதியே ஷண்முகம். 32. குண்டோதரனுக்கு அன்னமிட்டது
குண்டோதரனுக்கு அன்னமிட்டார் என்பதற்குப் பொருள்: குண்டோதரம் என்பது துத்தநாகக் குடாக்கு, ஓதனமென்பது அன்னம், தரன் என்பது பசியில்லாதவன். மேற்படி நாகத்தைச் சுண்ணஞ்செய்து பசியில்லாதவனுக் களிக்க விசேஷ பசி உண்டாகும். எப்படியெனில்: நாகக்கொட்டையை மைபோலாட்டி, நாகத்திற்குப் பிடிப்பித்துச் சிறுபுடமாய்ப் பத்திட்டு எடுத்து, நாலிலொன்று சூதஞ்சேர்த்து, வட்டாக்கிக் கருந்துளசியால் கவசித்துச் சீலைமண் செய்து, புடமிடச் சுண்ணமாம். இதுபோல் மற்ற விளையாடல் முழுமையும் ஒருவாறு,
கல்ப நியாயம் நாகக்கொட்டையை அரைத்து நாகத்துக்குக் கவசம் செய்து, சிறுபுடம் 10 போட்டுச் சுறுக்கிட்டு, அதற்கு நாலிலொன்று சூதம் தொந்தித்து, துளிசியிலை அரைத்துக் கவசம் செய்து புடம் போட்டால் சுண்ணமாகும். அதை எடுத்துப் பசியில்லாதவனுக்கு நவநீதத்தில் கொடுக்க இரண்டரை நாழிகையில் பசி உண்டாகும். இதுதான் குண்டோதரனுக் கன்னமிட்ட தென்பது. கல்ப நியாயம். 33. பாற்கடல் கடைந்தது திருப்பாற்கடல் கடைந்து அமுதபானம் தேவர்கள் செய்யும் பொருட்டு விஷத்தை ருத்திரர் உட்கொண்டா ரென்பதற்குப் பொருள்:- திருப்பாற்கட லென்பது தேங்காய். அமுதமென்பது அதன் ஜலம். தேங்காயின் பாலிலுள்ள எண்ணெயே விஷம். மேற்படி எண்ணெயாகிய விஷத்தைப் போக்குவது முப்பூவாகிய ருத்திரன். ஆதலால், தேங்காய்ப் பாலிலுள்ள விஷமாகிய எண்ணெயை முப்பூவால் போக்குவது ருத்திரன் விஷம் சாப்பிட்டது. மற்றக் கடல்கள் யாவும் இட்சு, மது முதலிய வஸ்துக்களே. இவ்வாறு, அண்டத்தினும் பிண்டத்தினும் பௌதிகத்தினும் தாதுக்களினும் ஓஷதியினும் கடல்கள் உள. திருப்பாற்கடல் திருப்பாற்கட லென்பது தேங்காய். அமுத மென்பது ஜலம். தேங்காய்ப் பாலைப் பிழிந்து முப்பூவைப் போட அமுதமாம். விஷமுண்டா ரென்பது தேங்காயிலுள்ள எண்ணெயை முப்பூவால் போக்குவதே விஷஞ் சாப்பிடுவ தென்பதற்குப் பொருளாம். கருப்பஞ்சாற்றுக்கட லென்பது கரும்பு, மதுக்கட லென்பது தேன். 34. பாற்கடலில் பள்ளிகொண்டது
ஆகாரம் உண்டவுடனே ஜீரணமாய்ப் பால்வண்ணமாக ஆகாரப் பையில் வெண்மை நிறமாக இருப்பது திருப்பாற்கடல் என்றும், அதனடியில் உண்டாம் பசி - தீவிர சத்தியாகிய உஷ்ணம் - வடவா முகாக்கினி என்றும், இரண்டிற்கும் மத்தியில் உண்டாகிய சீதளம் விஷ்ணு பள்ளிகொண்டது என்றும் சொல்வது. திருப்பாற்கடலில் விஷ்ணு பள்ளிகொண்டது இது தான்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
28. உத்தர ஞான சித்திமா புரத்தின்
உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
28. சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
29. தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி. சிவசிவ
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 117. ஞான மருந்து ñāṉa maruntu
29. உன்னற் கரிதா மருந்து - எனக்
உன்னற் கரிதா மருந்து - எனக்
குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
சாக்கிரா தீதச் சபேச மருந்து. ஞான
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 102. ஆனந்த களிப்பு āṉanta kaḷippu
29. அணிமணி கண்ட மருந்து - அருள்
அணிமணி கண்ட மருந்து - அருள்
ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
பேசா மருந்தென்று பேசு மருந்து. - நல்ல
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 119. ஜோதியுள் ஜோதி jōtiyuḷ jōti
31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
31. தத்துவமே தத்துவா தீத மேசிற்
தத்துவமே தத்துவா தீத மேசிற்
சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
-
வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை
துயர் தொலையும் - துன்பமாகிய சகல கேவலங்கள் நீங்கும். சுத்த னாவோம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
32. சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 097. நடராஜபதி மாலை naṭarājapati mālai
32. எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
எல்லாஞ்செய் வல்லசித்தாய்
என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
எழுமையும் விடாதநட்பே
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
கட்டியே கருணைஅமுதே
கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
கண்காண வந்தகதியே
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
வினைஎலாந் தீர்த்தபதியே
மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
விளைவேஎன் மெய்ம்மைஉறவே
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
சுத்தசன் மார்க்கநிலையே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
சோதிநட ராஜகுருவே.
-
நித்திய கரும விதி
8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை, புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் - இவைகளில் யாதாயினும் ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 118. சிவசிவ ஜோதி sivasiva jōti
33. சுத்த சிவமய ஜோதி - என்னை
சுத்த சிவமய ஜோதி - என்னை
ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
33. காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
மாமிச ஆகாரம் புலி முதலாகிய துட்ட மிருகங்களுக்கு நியதி ஆகார மல்லவோ என்றறிய வேண்டில்:- அது அவ்வுயிர்களுக்குச் சிருஷ்டி நியதி ஆகார மல்ல; பரம்பரை வழக்கத்தாற் பெற்ற ஆகாரமாமென் றறியவேண்டும். ஆகலில், அதை நிவர்த்தி செய்வித்துச் சத்துவ ஆகாரங்களைப் புசிக்கும்படி செய்யவுங் கூடும்; ஒரு சீலமுடையவன் கிரகத்தில் வழங்குகின்ற பூனைக்கும் நாய்க்கும் வேறிடங்களிற் போய் அசுத்த ஆகாரங்கொள்ளாமல் காவல் செய்து அடிநாள் தொடங்கிச் சுத்த ஆகார வழக்கமே செய்விக்கின்றான்; அவைகள் அவைகளைப் புசித்து உயிர் வழங்கி வருகின்றன. அப்படியே புலி சிங்கம் முதலிய துட்டவர்க்கங்களையும் மேல்நின்று சுத்த ஆகாரத்தில் பழக்குவாரில்லாமையால் அசுத்தாகாரங்களைப் பழக்கத்தாற் புசிக்கின்றனவென் றறியலாம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
36. அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
37. தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
வைத்துவழி காட்டு மறைப்புலவன் - சுத்தன்
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்
-
மனு முறைகண்ட வாசகம்
அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் "மந்திரி! நீர் சொன்னது பால்வேண்டி யழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்குக் காட்டுவது போலிருக்கின்றது, விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்ற தென்று சொன்னீர். அந்த மனுநு‘ல் அநித்தயமாகிய தேகத்தில் அபிமானமும் அசுத்தமாகிய பிரபஞ்சபோகத்தில் ஆசையும் வைத்த கர்மிகளுக்கே அவ்விதி கூறிய தல்லது, நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும் சுத்தமாகிய சிவபோகத்தி லாசையும் வைத்த என்பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல. உயிர்க்கொலை நேரிட்டால் உயிர்விடக் கடவரென்றே குறிப்பினாற் கூறியிருக்கின்றது. என் பிதா மூதாதைக்கு எவ்விதியோ அவ்விதியே எனக்கும் என் புத்திரனுக்கும் வேண்டத்தக்கது. ஆதலால் விதிமாறாட்ட மாகாது. இந்த நியாயத்தால் என் புத்திரனை யிழந்து விடுவதே முடிவு" என்று சொன்னார்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
-
உபதேசக் குறிப்புகள்
49. சிவம் என்பதன் பொருள் சிவம்
சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம். சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம்; சிகரம் எல்லா முள்ளதாய் விளங்குவது, வகரம் எல்லாம் விளங்குவதா யுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய வின்பம்.
சிவம்
சிவம் என்பதற்குப் பொருள் ஸச்சிதானந்தம். ஸச்சிதானந்த மென்பது ஸத்து சித்து ஆனந்தம். சி சத்து, வ சித்து, ம் ஆனந்தம். சி எல்லாம் உள்ளதாய் விளங்குவது, வ எல்லாம் விளங்குவதாயுள்ளது, ம் இந்த இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.
சிவ
சிவ என்பதற்குப் பொருள் அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லமை யுடையது. சி என்பதற்குப் பொருள் அனாதியாய் மலமில்லாதது; வ என்பதற்குப் பொருள் சர்வவல்லமை யுடையது.
சிவ
சிவ என்பதன் பொருள் அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லப முடையது. சி என்பது அனாதியாய் மலமில்லாதது, வ என்பது சர்வ வல்லப முடையது.
சி
மேலும் சி என்னு மெழுத்துக்குப் பொருள் ஒருவாறு: இதிலடங்கிய பீஜம் 5. அவையாவன: தோன்றி அசைதலாகிய விந்து ஒன்று, அதன் புடைபெயர்ச்சி ஒலியாகிய நாதம் 2, அதன் வண்ண வடிவமாகிய வரி அக்கரத்தின் சகரமெய் யென்னும் ச் 3, அதனது குணங்களை வெளிப்படுத்தும் ஆதி அக்கரமாகிய பிரணவ மூல அகரம் 4, இதைத் தன் வண்ணச் சுபாவத்தோடு வெளியில் தோன்றச் செய்வித்து விளக்கும் அருட்பிரணவமாகிய இகரம் 5, ஆகக் கூடிய விந்துக்களைந்தும் ஓருருவமாய்ச் சிகரமாயிற்று. இதன் இலக்கணம் விரிக்கிற் பெருகும். அனுபவத்தா லறிக.
சி
சி என்னு மெழுத்துக்குப் பொருள்: இதன் பீஜாக்ஷரம் 5. அவையாவன: பிந்து, நாதம். சகரஒற்று, அகரம், இகரம். இவை கூடியது சிகரமாகிய ஓர் உருவம் இதற்குப் பொருள் சுத்த சன்மார்க்க காலத்தில் வெளிப்படும்.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
வஸ்திரம், இடம், நிலம், பெண், பொருள் முதலானவைகள் இல்லாமல் துன்பப்படுகின்றவர்கள், அத்துன்பங்களை மனஎழுச்சியால் சகித்துக்கொண்டு உயிர்தரித்துத் தங்களாற் செய்யக்கூடிய முயற்சியைச் செய்யக்கூடும். பசியினால் துன்பம் நேரிட்டபோது மனஎழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள். பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வர்களென்பது சொல்லவேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசிநேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது, என்ன செய்வது!' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான். பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!' என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராதபோது நிலை கலங்குகின்றார்கள். சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள். இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள். நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங்கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியானால் ஒருவகை ஆதாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்! அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
52. பஞ்சாக்கரம்
சமய சூக்கும பஞ்சாக்கரத்தின் தாத்பரியம் நான்கு, மேற்படி அக்ஷரம் 5: சிவாயநம - இதற்குத் தாத்பரியம் நான்காவன. பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் ஆக 4. இதில் பூர்வத்திற்கு அர்த்தம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன். பூர்வபூர்வத்திற்குத் தாத்பரியம்: அனாதியில் மலமில்லாது எல்லாமுடைய சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கின்றேன். மற்ற இரண்டிற்கும் அர்த்தம் அனுபவத்தால் தெரியலாம். இதுபோல் மத சன்மார்க்கத்திற்கும் மேற்படி அக்ஷரமே. அதற்கும் முன்போலவே நான்கு தாத்பரிய முள்ளது. அதில் பூர்வத்திற்குத் தாத்பரியம்: சி என்பது பதி, வா என்பது சத்தி, ய வென்பது ஜீவன், ந வென்பது திரோதை, ம வென்பது மாமாயை; ஆதலால், மாமாயை திரோதை நீங்கி, ஜீவ போத மற்று, அருள் வடிவாய்ச் சிவமாவது. பூர்வபூர்வத்தின் தாத்பரியம்: சி என்பது எல்லாமுடையது, வா என்பது அபிந்நமாகிய அருள், ய வென்பது ஆன்ம சிற்சபை, ந வென்பது சீவன், ம வென்பது பசு; ஆதலால் பசுத்தன்மை கெட்டு, ஜீவபோதம் போய், ஆன்ம வியற்கை வடிவாய்ச் சத்துவமயமாய் எல்லாமுடையதுவாய்ப் பூரணமாய் நிற்றல்; ஒருவாறு. அனுபவத்தில், பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் செபமூலமாய்க் கரண சுத்தி வந்து, அக்ஷர முன்னுதலை விட்டு, அறிவாகிருதியாய், கருணையும் சிவமுமே பொருளெனும்படி நிற்றற்கு முதற்றுவாரமாம். மற்ற உத்தரத்தில் ஏம சித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லும். இஃது மத சன்மார்க்க அனுஷ்டானம். இதுபோல் சமயத்திலும் தேகசித்தியும் ஏமசித்தியு முள. மேற்குறித்த சமய மதங்களின் விரிவு அனந்தகோடி. அந்த சித்திகள் யாவும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்தி தலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும். ஆதலால் மேற்குறித்த இரண்டு சித்தியும் எக்காலத்தும் அழிவுறா திருப்பதாகச் சொல்லுவது சுத்த சன்மார்க்க பூர்வோத்தரம். ஏமசித்தி1 தேகசித்தி ஆகிய இவற்றை மேற்குறித்த சூக்கும பஞ்சாக்கரத்தில் சொல்லுவதற்குப் பிரமாணம்:- "சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்"2 "சிவாயநமவெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாய மொருநாளு மில்லை."3 ஆதலால், மேற்குறித்த அக்கரத்தை மகான்கள் குழுக்குறியாக - வரிவடிவாய் - சுட்டினார்கள். இதை அக அனுபவிகள் தத்துவங்களை அறிந்து, அனுசந்தானஞ் செய்வார்கள். சாதகிகளுக்கு நாவினாலுன்னிக் கரண மோய்ந்தால், தத்துவானுசந்தானஞ் செய்யக்கூடும். உலகிகள் நாவினாலுன்னத் தங்கள் மனோரதம் சித்திக்கும். வகர வித்தை4 யுடையவர்கள் மேற்படி அக்கரத்தின் உண்மையைப் பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம், முதலியவற்றிற் சேர்த்து வகரத்தை முடிப்பார்கள். தகர வித்தை5 யுடையவர்கள் அதுபோலவே அமைத்துக்கொண்டு தேகத்தை நீடிக்கச் செய்வார்கள். ஆதலால் மேற்குறித்த அக்கரங்கள் பரிபாஷை. இதனது உண்மை யாவும் சுத்த சன்மார்க்க சகஜசாத்திய ஞானானுபவிக்கு விளங்கும்.
-
சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்
சமரச வேத சன்மார்க்க சங்கத்தார்களி லொருவராகிய மகாராஜராஜஸ்ரீ சண்முக பிள்ளையவர்களுக்கு வந்தனம். இவ்விடத்தில் குருகடாக்ஷத்தால் இன்றை வரையில் யானும் மேற்படி சங்கத்தை யபிமானித்த மற்றவர்களும் க்ஷேமம். அவ்விடத்தில் தங்களுடைய க்ஷேமங்களையும் சாலையைச் சார்ந்த மற்றவர்களுடைய சுபசரித்திரங்களையும் அடிக்கடி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் விருத்தாசலத்திலிருந்து சித்திரை மாதம் . . . அனுப்பிய கடிதம் . . . . . . . . . . முடித்தார். இன்னம் அச் . . . வேறே சுத்த பிரதியாக இன்னம் எழுதவில்லை, எழு . . . . . ளவர்கள் இ . . . . . . . செய்துக் கொள்வதற்கு யாதொரு தடையுமில்லை. மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியார் . . . . . ‘ன் எழுதிக் குறித்து விட்டார் . . . திருக்கிறார். . . . . அவருடன் நானும் வருவேன். மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியார் பல்லாரியிலிருந்து இன்னம் வரவில்லை. எனக்கு வைகாசி மாதம் 10ஆம் தேதி முதல் ஆனி மாதம் 12 வரையில் சுமார் 32 நாளைக்கு விடுமுறை . . . . ஆறுமுக முதலியார் வந்தால் அவருடன் அவசியம் வந்துவிடுவேன். நாவலருக்கு சூலை நோய் லகுவாயிருப்பதாக சமாசாரம். அது எப்போதோ ஒரு . . . . . கிறார் . . . மாதத்துக் கொருவிசை அந்த . . . . . கஞ்செய்கிறது வழக்கம். அவருக்கு . . . . ருந்த பல . . . . . . . . . கட்டுக்கோப்புக்காக பிரித்த நிலத் . . . . ய மரங்கள் சேர்ந்திருக்கிறதா. ரோட்டுவரையில் தெருவின் நீளம் . . . ருக்கிறதா. அந்தக் கட்டடங்கள் சத்திரங்கள் . . . . . தெரியப்படுத்தவும். மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியாருக்கு அவ்விடத்தில் தானே சமுசாரத்தோடு இன்னஞ் சில தினங்களுக்குள்ளாக வந்து விடவேண்டுமென்கிற கருத்திருக்கிறது. ஆகையால் அவருக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் நல்ல கட்டடம் செய்து கொள்வார். அதற்கு தடையிராது. மகாராஜராஜஸ்ரீ அப்பாசாமி செட்டியாரவர்கள் தவிர மற்றவர்களின்னாரென்று விபரமாய் தெரிவிக்கவும். வீடு கட்ட உத்தேசஞ் செய்தவர்களாவர்.
-
உபதேசக் குறிப்புகள்
1. ஏமசித்தி - பொன் செய்யும் வல்லபம்.2. திருமந்திரம் 9033. நல்வழி 15 (ஔவையார்)4. வகரவித்தை - பொன் செய்தல்.5. தகரவித்தை - தேகசித்தி செய்துகொள்ளல்.
சிவாய நம
சமயத்தில் சிவாயநம வென்னும் வாக்கியத்திற்குத் தாத்பரியம் 4 வகைப்படும்: பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். பூர்வம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன் என்பது. பூர்வ பூர்வம்: அனாதியில் மல மில்லாததையும் எல்லாமுடையதாயும் உள்ள சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கிறேன் என்பது. உத்தரம் உத்தரோத்தர மென்னும் பொருளுக்கு விவரம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும்.
பஞ்சாக்ஷரமும் சித்தியும்
சிவாயநம வென்னும் மந்திரத்துக்குப் பொருள் முன்போல் 4 வகை. அதில் பூர்வமாவது: சி என்பது பதி, வா சத்தி, ய ஜீவன், ந திரோதை, ம மாயை. பூர்வ பூர்வமாவது: சி யென்பது எல்லாமுடையது, வ என்பது அபின்னமாகிய அருள், ய ஆன்மாவாகிய சபை, ந ஜீவன், ம பசு, உத்தரத்தின் பொருள்: பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் சிவத் தியானமல்ல. தத்துவ அனுசந்தானமே. உத்தரத்தில் ஏமசித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லுவது மத சன்மார்க்க அனுஷ்டானமாம். பஞ்சாக்ஷரத்தில் ஏமசித்தியும் தேகசித்தியும் சொல்வதற்குப் பிரமாணம்: "சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்" "சிவாயநம வெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளுமில்லை". ஆதலால் பரிபாஷையால் மறுத்தது. மேற்குறித்த ஏமசித்தியும் தேகசித்தியும் எக்காலத்தும் இருக்கும்படியாகச் சொல்வது சுத்த சன்மார்க்கப் பூர்வோத்தரம்.
சிவ சிந்தனை
ஓம் சிவாயநம என்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட்சத்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோக சத்தி, ஞானசத்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்தல் வேண்டுவதில்லை. அதில் அழுந்தி விட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை. மூடம் உண்டாகும். உண்மை.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறில் எண்டாக நிற்பவும் ஈற்றில் அவ்வெண்டின்றி ஒற்று நிற்பவும் தொடர்ந்த மொழியாகலின் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும் அதிபக்குவர்க்கு அனுபவப் பொருளாயும் இவ்விரண்டிலும் கலவாது அதீதப் பொருளாயும் நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. இங்ஙனம் குருராயன் என்பதில் குவ்வென்பது இருள், ரு வ்வென்பது அருள், ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம். இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்க என்க.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
48. சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
-
நித்திய கரும விதி
புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும் சுத்த நரம்பினறற் றூய்மையுறும் - பித்தொழியும் தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி காலை விழிப்பின் குணம் - பதார்த்தகுண சிந்தாமணி
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 094. தனித் திருவிருத்தம் taṉit tiruviruttam
52. தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
தயவு தான்நினக் கில்லை உயிரையும்
விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
-
மனு முறைகண்ட வாசகம்
அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் சிவத்தியானஞ் செய்துகொண்டு, தியாகேசர் சந்நிதியை நோக்கி "அடியேனை யாட்கொண்ட ஆண்டவனே! இவ் வீதிவிடங்கனென்பவன் பசுங்கன்றைக் கொலை செய்தானென்பது பிரத்தியட்சமாக உண்மையென்று வெளிப்பட்டபடியால், இந்தக் குற்றவாளியின் கொலைப் பாதகந் தீரத் தக்க தண்டனை செய்வதற்குச் சக்தியில்லாத அடியேன், தேவரீர் திருவுளப்பாங்கின்படி மேலோர் ஏற்படுத்திய தரும நு‘ல்களில் கொலை செய்தவனைக் கொலை செய்யக் கடவரென்று விதித்திருக்கின்ற விதியின்படி, விதி மாறாட்ட முதலான குற்றங்களுக்குச் சிறிது மிடங்கொடாமல், இவனைக் கொலை செய்யும்படித் திரிகரண சுத்தியாகத் தீர்ப்பிட்டுக் கொண்டு, இதோ தேர்க்காலிலு‘ர்ந்து கொலை செய்யத் தொடங்குகின்றேன், இத் தீர்ப்பினிடத்துத் தேவரீர் திருவடி சாட்சியாக என் மனமறிந்து யாதொருபிசகும் நேரிட்டதில்லை. என்னையுமறியாது ஏதாகிலுங் குறை நேரிட்டிருக்குமானால் அதைத் தேவரீர் மன்னித்துக்கொள்ள வேண்டும். இந்தக் குற்றவாளியின் பாவாத்மாவை அப்பாவத்தினின்று நீங்கும் வண்ணந் தக்க தண்டனை செய்வித் தருளி, மறுபிறப்பிலாயினும் கடைத்தேறும் வழியைத் கடாக்ஷக்கவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு, தேரிற்கட்டிய குதிரைகளை விழுந்து கிடக்கின்ற வீதிவிடங்கன் கழுத்தடியிற் சக்கரமழுந்தும்படி நேராக முடுக்கித் தேரை நடத்தினார்.
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
57. சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
-
உபதேசக் குறிப்புகள்
55. காயத்ரி காயத்ரி: கா-ய-த்ரி. க ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.
மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.
56 தத்துவம் தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை. 57. குடிலை குடிலை என்பது மூலப் பிரகிருதி. 58. பூதம்
பூதம் என்பது: பூ-த-ம். பூ அலர்ந்தது, த தடித்தது, ம் கலத்தல், ஆதலால், எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் பூதம்.
பூதம் என்பதன் சப்தார்த்தம் பூதமென்பது யாது? அதனது சொரூப ரூப சுபாவங்களென்ன? பூதம் என்பதற்குச் சப்தார்த்தம்: பூ மலர்ந்தது, பிரகாசம்; த தடித்தது, காரியம்; ம் ஊன்றியது, நிலை. இதற்குத் தாத்பரியம்: நிலை பெற்ற காரியம் பிரகாசம். பூத அக்கினித் தோற்றமென்றும் பெயர். பூதகாரிய அக்கினி என்றும் பெயர். பூ என்பதில் உகர உயிரும் தம் என்பதில் அகர உயிரும் எண்ணில் அ - ம், உ - ம் ஆயின, ஆக தொகை 10. இந்தப் பத்து இடத்திலும் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு. கல்லுக்குள்ளிருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம். பத்துப் பொது ஸ்தானங்களாவன: மண், ஜலம், அக்கினி, காற்று, வெளி, பிரகிருதி, மாயை, சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் ஆக இடம் 10. 59. பௌதிகம்
பௌதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பௌ+தீ+அகம் = பௌதீகம். பௌ - மூடல், அகம் - உள், தீ - அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பௌதீகம். தீ என்பது காரண உஷ்ணம்.
பௌதிகங்கள் பௌதிகங்க ளென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள். 60. நினைப்பு மறைப்பு நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்: சந்திரன் அக்கினியோடு கூடி, சூரியபாகத்திலுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும் போது, உண்டாகும் நினைப்பு; சூரியன் அக்கினியோடு கூடி, சந்திர பாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும்போது உண்டாகின்றது மறைப்பு. நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது யாது? ஜனனம், மன அசைவு, ஒன்றை நினைத்தல், சகலகாலம், மேற்படி தத்துவம் வேறொன்றில் பற்றல், தத்துவத்தின் அசைவாகிய ஆவி மேலேறுதல், மேற்படி ஆவி ஏறின இடத்தில் நில்லாது அக்கிரமித்தல். மறைப்பென்பது யாது? மரணம், தூக்கம், மனம் ஒன்றைப்பற்றி உடனே மறைதல், கேவலகாலம், மேற்படி தத்துவத்தின் கூர்மை கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை இல்லாதிருத்தல், மேற்படி ஆவி அக்கிரமித்தல், மனம் ஆபாசப்பட்டுச் சூனியமாதல். மேற்குறித்த நினைப்பு மறைப் பற்று நிரதிசயானந்தமாய் அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்க சாதனம். நினைப்பு மறைப்பு இந்த ஜீவன் அக்கினியின் சூரியபாகத்தி லுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும்போது நினைப்பும், அக்கினியின் சந்திரபாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும் போது மறைப்பும் உண்டாகின்றன. இதுதான் நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம். நினைப்பு மறைப்பு
நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது ஜனனம், மனம் நினைத்தல், சகலம், தத்துவத்தின் ஆவி அதிக்கிரமிக்கிறது. மறைப்பென்பதற்குப் பொருள்: மரணம், கேவலம், தூக்கம், தத்துவத்தின் கூறுபாடு கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை யில்லாதிருத்தல், அதனது உஷ்ணம் அதிக்கிரமிக்கிறது, மனம் ஆபாசப்பட்டுக் கீழ்ச்செல்லுதல். ஆதலால், நினைப்பு மறைப்பு அற்று, நிரதிசயானந்தமாய் அருள்வடிவமாவதே சுத்தசன்மார்க்க சாதனம் இது ஒருவாறு.
-
உபதேசக் குறிப்புகள்
61. விருப்பு வெறுப்பு விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்: விருப்பென்பது யாது? ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு, பூரண லக்ஷியத்தை விட்டு, அதிசயமாகப் பார்த்து நிற்றல். இந்த விருப்பால் தானுங் கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, சாதனமுந் தடைப்பட்டுவிடும். எவ்வகையிலும் விருப்பென்பது கூடாது. வெறுப்பென்பது யாது? வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதரவஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவோபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்புங் கூடாது. மேற்குறித்த இரண்டு மற்று, சத்துவமயமாய் நிற்றல்வேண்டும். விருப்பு வெறுப்பு விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்: விருப்பென்பது வேண்டுதல், பந்தம். பூர்ணபாவனையை விட்டு அதிசயமாகப் பார்த்து விரும்புதலால் பூர்ணபாவனை தடைப்பட்டுத் தான் கெடுவன். ஆதலால் விருப்பென்பது எவ்வளவும் கூடாது. வெறுப்பென்பது வேண்டாமை, துவேஷம், எதிர்கண்ட வஸ்துவைப் பற்றாதிருத்தல். இதரவஸ்துவைக் கெடுதலென்று நினைப்பதால் வெறுப்பென்பதும் கூடாது. விருப்பு வெறுப்பு அற்று அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்கம். 62. சங்கல்பம் சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்:- விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்ப மென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்; ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்ப மென்பது பிரம சதாசிவ கால அளவைக் குறிக்கிறது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
மேற்குறித்த சங்கல்ப மயமா யிருந்தால் சிவானுபவம் பெறலாம். "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றி னதுதான் வந்துமுற்றும்"* என்றபடி.
* தாயுமானவர் பாடல், கருணாக்கரக் கடவுள், 7.
சங்கல்பம்
சங்கல்ப மென்பது 5 வகை. அதாவது நிர்விகல்பம் 1, சவிகல்பம் 2, சங்கல்பம் 3, விகல்பம் 4, கல்பம் 5. நிர்விகல்பமென்பது கடவுளறிவு. சவிகல்பமென்பது அதினது வியாபகம். சங்கல்பமென்பது யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவாகிய நினைப்பே, முன் அசைவின்றி அசைந்த அசைவாகிய மேலசை வென்னும் புடைபெயர்ச்சியே, எக்காலத்தும் மரணமடைய மாட்டோமென்கிற பிரக்ஞையே. விகல்பம் என்பது பிரம சதாசிவ கால அளவைக் குறித்தது. கல்பம் என்பது மேற் குறித்தவைகளுக்கு அனுசந்தானங்கள். சங்கல்ப விகல்ப கல்பமென்பவை 3 வகை. உள் அழுந்தல் ஆன்ம திருஷ்டி, அதைச் சிந்தித்தல் ஜீவ திருஷ்டி, அதை விசாரித்தல் மனதிருஷ்டி. இந்த மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம். ஆதலால், மனத்தில் யாதொன்றும் இல்லாமல் சுத்த மனமாக, நாம் நஷ்டமடையமாட்டோ மென்று உள்ளழுந்தி நிச்சயித்தலே சங்கல்பம்.
பற்று மனத்தின் கூறுபாடு 4 வகை: அதாவது ஜீவப்பற்று, பந்துப் பற்று, களத்திரப்பற்று, தேகப்பற்று. தேகப்பற்றாகிய அகப்பற்றுப் போயிருத்தல் சங்கல்பம். சங்கல்பம்
சங்கல்பமாவது: சம் - முடிவு; கல்பம் - காலபேதம்; கால முடிவு.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
63. இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
-
உபதேசக் குறிப்புகள்
64. கூடஸ்த பிரம ஐக்கியம்
கேவல வேதாந்தத்தில் கூடஸ்த பிரம ஐக்கியத்தின் பொருள். ஜீவசைதன்யம், ஈசுரசைதன்யம், பிரமசைதன்யம், கூடஸ்தசைதன்யம், சர்வசாக்ஷி. இவற்றிற்குப் பிரதிநாமம் மேகாகாசம், ஜலாகாசம், கடாகாசம், தத்துவாகாசம், மஹாகாசம் ஆக ஐந்து. தம்பலப்பூச்சி முதல் மனுஷர்களில் மூடர் பரியந்தம் பரதந்திரர்கள், ஜீவசைதன்யம். சுராசுரர் அறிவுடைய ஜீவர்கள் சுதந்திரர்கள், இவர்கள் ஈசுரசைதன்யம். காரியம் ரூபம் முதலியவற்றோடு கூடிய சுத்ததேகி பிரமசைதன்யம். காரணகாரியம் ரூபாரூபம் முதலியவற்றுடனின்ற பிரணவதேகி கூடஸ்தசைதன்யம். காரணம் அரூபம் முதலியவாக நின்ற ஞானதேகி சர்வசாக்ஷியெனக் கொள்க.
சைதன்னியம் ஜீவ சைதன்னியம் - மேகாகாசம்
ஈசுர சைதன்னியம் - ஐலாகாசம்
பிரம சைதன்னியம் - கடாகாசம்
கூடஸ்த சைதன்னியம் - தத்துவாகாசம்
சர்வசாக்ஷி - மகாகாசம்
ஜீவ சைதன்னியம் - தம்பலப்பூச்சி முதல் மனிதரில் மூடர் பரியந்தம், பரதந்திரர்கள்
ஈசுர சைதன்னியம் - அசுரர் ராக்ஷசர் உயரறிவுடைய ஜீவர்கள், சுதந்திரர்கள்
பிரம சைதன்னியம் காரிய ரூபத்தோடு கூடிய சுத்ததேகி
கூடஸ்த சைதன்னியம் - காரிய காரண அரூபத்தோடு கூடிய பிரணவதேகி
சர்வசாக்ஷி - காரண அரூபத்தோடு கூடிய ஞானதேகி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
65. நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
65. மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
-
உபதேசக் குறிப்புகள்
65. கடவுள் ஏகம் அனேகம் கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குப் பொருள்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், ஜீவர்கள் அனேகம்; சாதாரணத்தில் கடவுள் ஏகம், பசுக்கள் அனேகம்; சுத்த சன்மார்க்கத்தில் தனிக்கடவுள் ஏகம், அவ்வருளால் சுத்தமாதி ஞான தேகம் வேறாகப் பெற்ற ஞானிகள் அனேகம் எனக் கொள்க. கடவுள் ஏகம் அனேகம்
கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குத் தாத்பரியம்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம். சமயாதீதத்தில் சொல்லிய பிரமம் முதல் சுத்தப் பிரமம் வரையிலும் ஏகம், அதைப் பெற்றவர்களனேகம். சாதாரண பாகத்தில் கடவுள் ஏகம், ஜீவர்கள் அனேகம். சத்த சன்மார்க்கத்தில் கடவுள் ஏகம். கடவுளருளால் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானிகளனேகம்.
-
உபதேசக் குறிப்புகள்
66. கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல் கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம்: ஒன்றல - கடவுளானவர் ஒன்றாகிய ஞானதேகியும் அல்ல. இரண்டல - சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார் - கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் உணர்க. 67. மூவகை உயிர்கள்
சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆக 3. சகலர் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை. செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்மூன்று முள்ளவர். பிரளயாகல இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டு முள்ளவர். விஞ்ஞானகலர் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர். சகலர் ஜீவர்கள். பிரளயாகலர் கல்ப தேகிகள். விஞ்ஞானகலர் காலாதீதர்கள். சுத்தம் 9, அசுத்தம் 9, ஆக 18.
-
உபதேசக் குறிப்புகள்
68. முக்குணம் தானாக நிற்றல் சத்துவகுணம், ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம், சோம்பலாதி ஜீவ இம்சைக் கிடனாவது தாமசம். ஆன்மாவின் செயற்கை ராஜோதமங்கள், இயற்கை சத்துவம். ஜனன மரண ஏது செயற்கையாலுண்டாம்; இயற்கையால் சிவானுபவம் பெறலாம். இதை விரிக்கில், ஒவ்வொன்றும் மும்மூன்றாகும், அனந்தமுமாம். சத்துவம் ராஜசம் தாமசம் தானாக நிற்றல் சத்துவம். இராகத் துவேஷாதிகளோடு கூடியது இராஜசம். ஜீவஹ’ம்சை செய்தல், சோம்பல், நித்திரை முதலியன தாமசம். ஆகையா லியற்கையாகிய சத்துவத்தோடு கூடிச் செயற்கையாகிய ராஜச தாமசத்தைச் சிறுகச் சிறுக நீக்க வேண்டியதில் சதா ஞாபகம் செய்யவேண்டியது. குணவகை சத்துவம், ராஜஸம், தாமசம் என்று குணங்கள் 3. ஒவ்வொன்றிலும் 3 சேர்ந்து 9 ஆயின. இந்த 9-ம் சுத்தம் அசுத்தம் என்னும் பேதத்தால் 18 ஆயின. 69. மூன்றாசை
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
68. தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
68. பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
70. கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
74. இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
அன்னியனே அல்லேன் அறிந்து.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
75. நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
80. அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
81. சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
-
உபதேசக் குறிப்புகள்
87. ஆணவ மல நிவர்த்தி
மனுஷ்ய வல்லபத்தால் தனக்கிருக்கிற அசுத்தங்களை நிவர்த்தி செய்துகொள்ளக் கூடுமா வென்றால்: இது நல்லது இது கெட்டது என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய வாசனையில் கரணங்களைச் செல்ல வொட்டாமல் தடுக்கக்கூடுமே ஒழிய, நிவர்த்திக்கக் கூடாது. அது ஆண்டவரருளால் சுத்ததேகம் பெற்றவர்களால்தான் முடியும். அது அருளொளி கிடைத்தால் அத்தருணமே சுத்தக்கரணமாய் நிற்கும். அசுத்தம் வருவதற்குக் காரணம் யாதெனில் செம்பிற் களிம்பு இயற்கை. அதுபோல் ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை. செம்பிலே களிம்பு இயற்கையா யுள்ளதைப் பரிசனவேதியினால் நிவர்த்தித்து ஏமமாக்குவது போல், மாயாகாரியமான இந்தத் தேகத்தின்கண் உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவமலம் ஆண்டவரருளினால் நீங்கப்பெற்றுச் சுத்த உடம்பாக்கிக் கொள்ளலாம். ஆண்டவர் அருள் அடைவதற்கு, நாம் இடைவிடாது நம்முயற்சியின்கண் பழகுதல் வேண்டும்.
"ஓடாது மாயைநீ ஊடாது நன்னெறி
வீடா தெனச் சொன்னீர் வாரீர்
வாடா திருவென்றீர் வாரீர்*
* திருஅருட்பா 4449
-
முதல் திருமுறை / First Thirumurai 007. வடிவுடை மாணிக்க மாலை vaṭivuṭai māṇikka mālai
84. பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
85. உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
88. பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
-
உபதேசக் குறிப்புகள்
93. கலை அறிவும் அருள் அறிவும்
பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்.
-
உபதேசக் குறிப்புகள்
94. ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.
ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.
இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.
மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.
இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் - எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?.... சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.
சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.
மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.
மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.
சன்மார்க்க சங்கம்
சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.
சத்திய மார்க்கம்
ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.
சமரசம்
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
சத்துவகுண லட்சியம்
சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.
சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மத சன்மார்க்கம் - நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.
சுத்தம்
சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
சத்மார்க்கம்
சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.
சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.
சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.
சர்வ சித்தி
சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.
சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.
பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
சாத்திய நிலை
சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
89. பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 020. பிள்ளைப் பெரு விண்ணப்பம் piḷḷaip peru viṇṇappam
90. அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
90. தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
90. வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
எனக்கும் உனக்கும்
-
உபதேசக் குறிப்புகள்
95. சுத்த சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
இதற்குப் பிரமாணம்: "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், "அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் "இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்" என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.
* திருஅருட்பா 5452, 5695
சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.
ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" "அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை" என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
91. ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
-
உபதேசக் குறிப்புகள்
96. சுத்த சன்மார்க்க முடிபு
சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
92. சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
-
உபதேசக் குறிப்புகள்
98. சாகாக்கல்விக்கு ஏது
தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.
(வேறுகுறிப்பு)
ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.
-
உபதேசக் குறிப்புகள்
99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். அடிகள் அங்கிருந்த காலத்திற் செய்த உபதேசம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
94. தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
96. சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
எனக்கும் உனக்கும்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
96. தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 037. அருள்விளக்க மாலை aruḷviḷakka mālai
97. எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
98. புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
-
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
தான் தனிச்சொல் பெற்று நான்கடியுடன் நடந்ததாகலின், இக்குறிப்பான் இந்நூல் கூறும் ஒப்பற்ற ஞானமும் சுத்தச்சரியை, சுத்தக் கிரியை, சுத்தயோகம், சுத்த ஞானம் என நான்கு பாதத்தோடு நடப்பதெனக் குறித்தது என்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
101. சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
-
மூலிகை குண அட்டவணை
101. மேற்படி பூ - விந்து கட்டி, தாம்பர சுத்தி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
106. ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
107. பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.
-
உபதேசக் குறிப்புகள்
101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)
பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.
சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.
கடவுள் தயவும் ஜீவ தயவும்
கடவுள் தயை, ஜீவதயை யென்பது: கடவுள்தயை யென்பது இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும். ஜீவதயை யென்பது தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அன்னிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் முதலியவாம்.
சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"*
* திருஅருட்பா 3503
சன்மார்க்க சாதனம்
சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.
-
உபதேசக் குறிப்புகள்
102. சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.
பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட் சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*
என்பதே என் பிரார்த்தனை யாகும்.
* திருஅருட்பா 3630
-
உபதேசக் குறிப்புகள்
103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.
கடவுள் மயமாவது
ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.
தயவும் கடவுளும்
கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.
பத்தி
பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.
(வேறு குறிப்பு)
தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்க ளேற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.
சத்திய ஞானாசாரம்
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
104. ஆன்ம இயற்கையாகிய தயாமூலதன்மம்
தர்மமென்பதற்குப்பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரம தர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும். இதில் அதிணுண்மை அதின் தன்மை... தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது இயற்கைக் குணம். அதுவென்பது ஆன்மா. ஆதலால், ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை. ஆன்மாவின் இயற்கையென்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்ம இயற்கையோடு இருந்தால் சிவமாகலாம். இதைப் பலவாகத் தர்மமென்று பெயரிட்டார்கள். அருள்வெளியாகிய ஆன்ம இயற்கையால் சிவானுபவத்தைப் பெறுவது உண்மை. இதற்கு வேதாகமங்களில் பலபட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில் சில:- அருட்சத்தி, அருள்வெளி, விருஷபம், தர்மதேவதை, அனாதியியற்கைக்குணம், பரஞானம், அகரவுகரம், அருள்நடம், அன்பு, ஆன்மநெகிழ்ச்சி, ஆன்மஅசைவு, சுத்ததத்துவம், ஆன்மஅறிவின்பேதம் - என இதை விரித்தார்கள். அருள்வடிவாய்ச் சிவமாகிப் பின்னமன்றிப் பூரணமாயிருப்பது நிரதிசயானந்தம். ஆனந்தமென்பது சந்தோஷம். நிரதிசயமென்பது ஆனந்தமின்மை(?). சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.
தருமம்
தர்மமாவது ஜீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரமதருமம், ஜாதிதருமம் முதலாகப் பலவகையாம். இதனது உண்மை ஆன்மாவின் தன்மை. தன்மை என்பது ஆன்மாவின் சுபாவம். சுபாவமென்பது ஆன்மாவின் சுபாவகுணம். சுபாவகுணமென்பது ஆன்மாவின் இயற்கைக்குணம் தயை. ஆன்மாவினியற்கை என்பதே தருமத்துக்குப் பொருள். தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான்.
அருளொளி
அருள்வெளியில் சன்மார்க்கத்திலுள்ள அனுபவங்களைப் பெறலாம். இதற்கு அருட்சத்தி என்றும், அருள்வெளி என்றும், ரிஷப மென்றும், அதின் தன்மை என்றும், அனாதி இயற்கை என்றும், பரஞான மென்றும், பூர்ண நிஷ்டை என்றும், அகர உகர மென்றும், அருள்நடன மென்றும், ஆன்ம நெகிழ்ச்சி என்றும், ஆன்ம அசைவென்றும் பலபட விரிந்த நாமங்கள் உண்டு. அருள்வெளியின் வடிவாய் உண்மை என்னும் சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்தி லிருப்பதே உண்மை.
ஆனந்தம்
ஆனந்தமென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷ’ப்பித்துத் தானதிசயமின்றி நிற்றல்.
-
உபதேசக் குறிப்புகள்
106. ஞானசித்தியும் ஒளிநிலையும்
இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.
ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.
மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.
ஜீவனும் தீபமும்
இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால், அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும். ஆகையால் நாம் வாழ்கிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் தீபம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இருளிருக்கப்படாது. ஒரு வீட்டில் தீபம் வைத்தால் அந்த வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிச்சேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால், அவசியம் தீபம் இருக்க வேண்டியது.
தயா வடிவம்
பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணாற் பார்த்தல். ஒருவன் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணைப் பெற்றுக் கொள்வானானால் அவனுக்கு எல்லாம் பட்டப் பகலைப் போற்றெரியும். அவன்தான் சுத்தஞானி. அந்த நடுக்கண்ணைப் பெற்றுக்கொண்ட சுத்தஞானி தயவோடு ஓர் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில், அந்தப் பிணம் உயிர் பெற்று மீளவெழுந்திருக்கும். ஒருவனைக் கோபித்துப் பார்த்தால், உடனே அவன் பஸ்பமாய் விடுவான். இதுதான் நடுக்கண் பெற்ற சுத்தஞானிக் கடையாளம். இந்த நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணுக் கொரு கதவும் பூட்டுமிருக்கின்றது. அந்தக் கதவின் பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்கவேண்டும். அருளென்பது பெருந்தயவு. ஆகவே தயவே வடிவமாக இருக்க வேண்டியது.
கடவுள் அனுக்கிரகம்
தீபத்தில் ஒளி, சோபை, பிரகாசம் என்னும் 3-ல் பிரகாசம் காரண அக்கினி, சோபை காரியகாரண அக்கினி, ஒளி காரிய அக்கினி. பிரகாச மயத்தில் கடவுள் காரியமாய் சொர்ணதேகி ஆனாலும், பிரகாசத்தைப் போல் அதிதூரத்திலிருக்கிற இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது.
ஒளியெப்படி அடங்கிச் சோபை காரியகாரணமா யிருக்கிறதோ அதுபோல, ஜீவர்கள் இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில், விளக்கினிடத்து லட்சியம் அதிகரித்த தருணம், ஒளியைக் கண்டால் அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளினது சோபையைக் கண்டால், சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களும் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல் இறந்த ஜீவர்களை ஆண்டவருக்குச் சமீபத்தில் சேர்த்தால் உடனே ஜீவிப்பார்கள். ஆண்டவரது பிரகாசம் எங்கும் உள்ளதால், எந்த இடத்தில் புலை கொலையில்லாமல் ஜீவர்கள் முயற்சி செய்கிறார்களோ, அந்த இடத்தில் கடவுள் வந்து காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்றும் காரிய உருவமாகிய ஒளியாகித் தோன்றி அனுக்கிரகிப்பது சுபாவம். இதற்குப் பிரமாணம்: துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் நனைத்து, அதிக நீளமுள்ள நூலின் ஒரு தலைப்பைச் சுண்ணத்தில் படும்படி நனைத்த உடனே, அந்நூல் முழுமையும் சிவப்பேறுவது போலாம்.
-
உபதேசக் குறிப்புகள்
107. தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்
தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ’கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.
அதிதீவிர பக்குவி
சீவன் என்கிற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய் விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் எடுத்துவிட வேண்டியது. அதாவது 16 தினத்திற்கு ஒருதரம் தேகசம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்தி விட வேண்டும். ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல.
-
உபதேசக் குறிப்புகள்
108. நம்மை நஷ்டஞ் செய்யும் நான்கு
நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன: ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தாலதையடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.
ஜாக்கிரதை
ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் - இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின் அதி சீக்கிரத்தில் மரண மடைவான்; சந்தேகமில்லை. இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.
தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்
இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்: பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் - இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் - இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு. பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
114. சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென
-
உபதேசக் குறிப்புகள்
111. சந்நியாசமும் காவி உடையும்
மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை. குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...
தயவு
தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.
காவிவேஷ்டி
காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்.
-
உபதேசக் குறிப்புகள்
114. வந்தன முறை
ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-
வந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.
இதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா?
இவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய - சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக் கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு - அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் - ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.
சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.
ஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் - இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.
ஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.
-
உபதேசக் குறிப்புகள்
115. சுத்த சன்மார்க்க ஆகாரம்
சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாவெனில்:- சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை பரியாயத்தில் சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்.
சன்மார்க்க ஆகாரம்
நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் - இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.
உப்பு
தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.
சர்க்கரை
சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.
சன்மார்க்க ஆகார விலக்கு
சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்....ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.
சாதம்
சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல... மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
122. செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
-
உபதேசக் குறிப்புகள்
116. வெந்நீர்
அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் - இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு - இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி - மற்றப்படி - சொல்வது தெரியாமை.
வெந்நீர்
சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.
குளிர்ந்த ஜலம்
காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.
-
உபதேசக் குறிப்புகள்
118. பஞ்ச கவ்யம்
பஞ்சகவ்வியத்தின் உண்மை யாதெனில்:- கோமயம், மேற்படி ஜலம், கிருதம், ததி, க்ஷீரம் இவை ஐந்து. இவற்றின் குணம்: மேற்படி மயத்தால் பிருதிவி சுத்தி, ஜலத்தால் ஜலசுத்தி, கிருதத்தால் அக்னி சுத்தி, ததியால் வாயுசுத்தி, பயசால் ஆகாசசுத்தி. இதுபோல் பிண்டத்தில் பிருதிவியாகிய தேகத்திலுள்ள குருக்களையும் அசுத்த மலங்களையும் மேற்படி மயம் போக்கும்; நீர்க்கட்டு கோவை முதலியவற்றை மேற்படி ஜலம் போக்கும்; உஷ்ண ஆபாசம் முதலியவற்றை மேற்படி கிருதம் போக்கும்; அதுபோல் வாயுவின் கெடுதியாகிய மலபந்த முதலியவற்றை மேற்படி ததிபோக்கும். ஆன்மாவாகிய பிராணச் சோர்வை மேற்படி க்ஷீரம் போக்கும்; மேலும் பசு மிருகத்தின் நக்ஷத்திர (?) விருக்ஷத்தின் மூலாதி பலங்களே பஞ்ச கவ்வியங்களாம்.
-
உபதேசக் குறிப்புகள்
120. பஞ்ச அமுத ஸ்தானங்கள்
சுத்த அமுத ஸ்தானங்கள் 5.
1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.
2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.
3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.
4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.
5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.
இந்த 5-வது அமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.
பஞ்ச அமுத ஸ்தானங்கள்
யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.
1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவ ஞானத்தால். சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.
2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி பிரஞ்ஞை யுணர்ச்சியால்.
3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவ இச்சை, சம்சார உணர்ச்சியால்.
4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவ திரோபவம்.
5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம். அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
131. உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
-
உபதேசக் குறிப்புகள்
1. விந்து 2. நாதம். 3. பரவிந்து 4. பரநாதம் 5. திக்கிராந்தம் 6. அதிக்கிராந்தம் 7. சம்மௌனம் 8. சுத்தம் 9. அதீதம்
-
உபதேசக் குறிப்புகள்
1. பூதநிலை 2. கரணநிலை 3. பிரகிருதி நிலை 4. மோகினிநிலை 5. அசுத்தமாயாநிலை 6. அசுத்தமகாமாயாநிலை 7. சுத்தமாயாநிலை 8. சுத்தமகாமாயாநிலை 9. சர்வமகாமாயாநிலை 10. குண்டலிநிலை 11. பிரணவநிலை 12. பரிக்கிரகநிலை 13. திருவருள்நிலை
ஆக 13. இதற்கதீதத்தில் சுத்த சிவநிலை. இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.
மேலும், வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகிய பெயராலும் அனந்தமாக விரியும். இவை யாவும் ராகமென்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
6. சுத்தநடனம்
இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.
-
உபதேசக் குறிப்புகள்
127. சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்
சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.
-
உபதேசக் குறிப்புகள்
129. சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.
மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்... மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். (?) ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.
ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5ஆம் நாள்.
வேதாகமச் சிறப்பு
இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.
பொன்னும் மகத்துவமும்
ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட பொன்னால் செய்த விக்கிரகங்கள் வைத்திருக்கும் தேவாலயங்களில் மகத்துவங்க ளுண்டாகும். மகத்துவத்தின் உயர்வு தாழ்வு பொன்னினது மாற்றுயர்வு தாழ்வாகவேயிருக்கும். மாற்றுயர்ந்த தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தை அடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க மகத்துவங்களுண்டாகும். இது ரகசியம்.
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்
சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம். போகாப்புனல் என்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறியவேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
130. மூவகைச் சித்தி
கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்.
கர்மசித்தியாவது:-
அணிமா - துரும்பை மேருவாக்குகிறது
மகிமா - மேருவைத் துரும்பாக்குகிறது
கரிமா - மேருவை ஒன்றுமில்லாமல் செய்கிறது
லகிமா - ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது
பிராத்தி - வேண்டுவன அடைதல்
ஈசத்துவம் - குளிகை வல்லபத்தாலெங்கும் செல்லுகிறது
பிராகாமியம் - பரகாயப்பிரவேசம்
வசித்துவம் எழுவகைத் தோற்றமாகிய தேவமானுஷ்ய நரக மிருக பக்ஷி ஊர்வன விருக்ஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.
தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்ப்பித்தல்; சித்தி காலம் 3 3/4 நாழிகை முதல் 3 3/4 வருஷத்திற்குள்.
யோக சித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்பகுளிகை; பிராணகல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்ப்பித்தல்.
ஞானசித்திகளின் விவரம் - அறுபத்து நாலாயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடியாகிய*, 688 கோடி (?) பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம்போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை முடிநிலை சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது.
* ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவுமெய்ப்பொருளே - அருட்பெருஞ்ஜோதி அகவல் 911-2
-
உபதேசக் குறிப்புகள்
131. சுத்தமாகி தேகங்கள்
சுத்தமாதி மூன்று தேக விவரம்: சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம்.
சுவர்ண தேகம் பிரணவ தேகம் ஞானதேகம்
காரிய ரூபம் காரிய காரண ரூபம் காரண ரூபம்பரதேகம் பரம்பர தேகம் எங்கும் பூரணபர உணர்ச்சி பரம்பர உணர்ச்சி வியாபகம்பர அறிவு பரம்பர அறிவு பராபர அறிவுபரத்துவம் பரம்பர தத்துவம் பராபர தத்துவம்பொன் வண்ணம் 16 முதல் 108 வரையில் அளவு கடந்த மாற்றுஅபரஞ்சி மாற்று மாற்று, உரைபடாதது12 வயது பருவம் 5 முதல் 8 வயது சப்த மயதரிசனம்நரை, திரை, பிணி, தேகம் தோற்றும், உருவம் தோற்றியும்மூப்பு, மலம், ஜலம், பிடிபடாது. தோற்றாமலும் இருக்கும்வியர்வை, ஆகாரம்,நித்திரை, தாகம்,சாயை முதலியனஇல்லாமைரோம வளர்ச்சிதாழ்ச்சி இல்லாமைகர்மசித்தி சர்வ சித்தி சர்வ மகாசக்தி, சர்வகல்பதேகி பிராண கல்பதேகி சுதந்தரம்அபரமார்க்கி பர அபர மார்க்கம் காலாதீதன்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
157. சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
-
உபதேசக் குறிப்புகள்
133. அணுபக்ஷ சம்புபக்ஷ அனுபவ விவரம்
ஐந்து மாற்றுள்ள சுவர்ணதேகி பிரமன் வயசு - நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.
ஆறு மாற்றுள்ள சுவர்ணதேகி விண்டு வயசு - எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.
ஏழு மாற்றுள்ள சுவர்ணதேகி ருத்திரன் வயசு - பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்று ஆறாயிரம்.
எட்டு மாற்றுள்ள சுவர்ணதேகி மயேசுரன் வயசு - பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.
ஒன்பது மாற்றுள்ள சுவர்ணதேகி சதாசிவன் வயசு - நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம்.
இவர் அணுபக்ஷத்தார்.
அணுபக்ஷத்தில் நாற்பத்து மூவாயிரத்து இருநூறு லக்ஷங்கோடி விந்து சத்தியின் அளவு; அளவிறந்த கோடி நாதத்தின் அளவு.
அணுபக்ஷத்தில் பரவிந்து சுத்தமாயையைக் கடந்தது; பரநாதம் சுத்தமகாமாயையைக் கடந்தது.
சம்பு பக்ஷத்தில் பிரமன், விண்டு, ருத்திரன், மயேசுரன், சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்பவற்றில்:
பிரமன், விண்டு - சுத்த மகா மாயையைக் கடந்த ஞான அனுபவ பேதம். ருத்திரன் - சித் அனுபவம் மயேசுரன் - ஆனந்த அனுபவம் சதாசிவன் - சத் அனுபவம் விந்து - சிதானந்த அனுபவம் நாதம் - சதானந்த அனுபவம் பரவிந்து - சச்சிதானந்த அனுபவம் பரநாதம் - சிவானுபவம். இவை ஒருவாறு.
உபதேசக் குறிப்புகள் முற்றிற்று.
No audios found!
Oct,12/2014: please check back again.
$(function () {
// Setup the player to autoplay the next track
var a = audiojs.createAll({
trackEnded: function () {
var next = $('ol li.playing').next();
if (!next.length) next = $('ol li').first();
next.addClass('playing').siblings().removeClass('playing');
audio.load($('a', next).attr('data-src'));
audio.play();
}
});
// Load in the first track
var audio = a[0];
first = $('.playitem').attr('data-src');
$('.playitem').first().addClass('playing');
// audio.load(first);
// Load in a track on click
$('.playitem').click(function (e) {
e.preventDefault();
$(this).parent().addClass('playing').siblings().removeClass('playing');
audio.load($(this).attr('data-src'));
audio.play();
});
// Keyboard shortcuts
$(document).keydown(function (e) {
var unicode = e.charCode ? e.charCode : e.keyCode;
// right arrow
if (unicode == 39) {
var next = $('li.playing').next();
if (!next.length) next = $('li.playitem').first();
$('a', next).click();
// back arrow
} else if (unicode == 37) {
var prev = $('li.playing').prev();
if (!prev.length) prev = $('li.playitem').last();
$('a', prev).click();
// spacebar
} else if (unicode == 32) {
audio.playPause();
}
})
});
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
158. ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
183. புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
-
முதல் திருமுறை / First Thirumurai 006. திருவருண் முறையீடு tiruvaruṇ muṟaiyīṭu
205. மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
சுபம் உண்டாகுக. கல்வி கேள்விகளிற் பயின்று அன்பறிவொழுக்கங்களிற் சிறந்து அருளொடு கிளர்ந்த வாக்கத்தி னுயர்ந்து குணமணியாக விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாகுக. தங்களுடைய சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். அரி பிரமாதிக ளெத்துணையும் பெறுதற்கு அரியதாகிய சிவ சம்பந்தத்தை முன் செய்த தவப் பயனாற் பெற்றனம். அங்ஙனம் பெற்ற நாம் சிவானந்த போக சாத்தியத்தை காலமுண்டாக அடைதல் வேண்டும். அதனை அடைதற்கு சிவபஞ்சாக்ஷர தியானமன்றி வேறு ஏதுக்கள் ஒன்றுமின்று. இஃது திருவருளாணை. என்னின், நாம் செல்லுங் காலமெல்லாம் சித்த சுத்தியோடு சிவபஞ்சாக்ஷர தியானத்தில் சர்வசாக்கிரதையாகப் பெற்று வரவிற்கு ஒத்த செலவோடு வாழ்தல் வேண்டும். இஃதே நமது கடமை. இனி இங்ஙனம் ஒருவர் பிணியாளர் வேறு கதியின்றி என்பாற் புகலடைந்திருக்கின்றனர். அப்பிணி சிறிது சாந்தப்பட்டவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வர நிச்சயித்திருக்கிறேன். சிவபெருமான் திருவுள்ளக் கருத்தறியேன். நமக்குரிய நேயர் முன்னவராகிய மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் முதலானவர்கட்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். வரதாசாரியா ரவர்கள் தற்காலம் எவ்வித நிலையிலிருக்கின்றனர். அந்நிலையும் தெரிதல் வேண்டும். நேயர் மகாராஜராஜஸ்ரீ கந்தசாமி முதலியார்க்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
280. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
281. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
-
மூலிகை குண அட்டவணை
283. தாழை - சூத சுத்தி
-
மூலிகை குண அட்டவணை
287. வெற்றிலை - நாகநீற்றி, ஜீர்ணகாரி, சூத சுத்தி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
289. துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நடராஜ நிபுணம் - நடராஜ விசித்திரம் - நடராஜ மதுரம் - நடராஜ அலங்காரம் - நடராஜ ஞான நாடகம் - நடராஜ ஆனந்த நாடகம் - சிதம்பர வுபதேசம் - சிற்றம்பல நடனம் - பொன்னம்பல நடனம் - பொது நடனம் - தத்துவ நடனம் - ஆனந்த நடனம் - அதீத நிலை அருள் விளக்கம் - மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் - சன்மார்க்க விளக்கம் - சாதன விளக்கம் - கலாந்த விளக்கம் - யோகாந்த விளக்கம் - நாதாந்த விளக்கம் - போதாந்த விளக்கம் - வேதாந்த விளக்கம் - சித்தாந்த விளக்கம் - அண்ட விளக்கம் - பிண்ட விளக்கம் - பிரகிருதி விளக்கம் - தத்துவ விருத்தி - சுத்த சிவ ராசியம் - பரசிவராசியம் - மந்திரக் கொத்து - மகாவாக்கிய வகை - பொது வேதம் - குடும்ப கோஷம் - இயல்வகை - அளவை வகை - ஞாய வகை - இலக்கண விருத்தி - தர்க்க விருத்தி - தென்மொழி விளக்கம் - வடமொழி விளக்கம் - உலகியல் விளக்கம் - கலைமரபு.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
389. சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
390. வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
400. சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
406. சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
512. சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
774. வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 002. அருட்பெருஞ்ஜோதி அகவல் aruṭperuñjōti akaval
796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை