-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
1. நீடிய வேதம் தேடிய பாதம்
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 058. கொடைமட விண்ணப்பம் koṭaimaṭa viṇṇappam
1. நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 040. கண்கொளாக் காட்சி kaṇkoḷāk kāṭsi
2. விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 068. பழமலையோ கிழமலையோ paḻamalaiyō kiḻamalaiyō
2. சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 063. வீரராகவர் போற்றிப் பஞ்சகம் vīrarākavar pōṟṟip pañsakam
2. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 003. கணேசத் திருஅருள் மாலை kaṇēsat tiruaruḷ mālai
2. சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ் ஞான நாடக நாயக நான்கெனும்
வேதம் நாடிய மெய்பொரு ளேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 069. பெரியநாயகியார் தோத்திரம் periyanāyakiyār tōttiram
3. தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 101. உய்வகை கூறல் uyvakai kūṟal
4. நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 043. இறை திருக்காட்சி iṟai tirukkāṭsi
5. புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 006. திருவருள் வழக்க விளக்கம் tiruvaruḷ vaḻakka viḷakkam
5. நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 058. கைம்மாறின்மை kaimmāṟiṉmai
6. துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 022. திருப்புகழ் விலாசம் tiruppukaḻ vilāsam
6. ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
-
பேருபதேசம்
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 053. திருவருட் பெருமை tiruvaruṭ perumai
9. என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
துதியவா அம்பலத் தமுதம்
அன்னவா அறிவால் அறியரி வறிவா
ஆனந்த நாடகம் புரியும்
மன்னவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 046. செல்வச் சீர்த்தி மாலை selvach sīrtti mālai
9. ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
10. அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 088. நெஞ்சொடு நெகிழ்தல் neñsoṭu nekiḻtal
12. மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
ஆசிரியத் துறை
-
நடந்தவண்ணம் உரைத்தல்
"மனத்திற்கு அகோசரமென்பது, மனத்திற்கு விஷயப்படாததென்று பொருள் படுமேயல்லாது சிறிது விஷயமாகிப் பெரிது விஷயமாகாதென்று பொருள்படாதென்றும் அவ்வாறு பொருள் கொள்வது லட்சண உபலட்சண விதியல்லவென்றும் ஒரு காலத்தில் ஒரு பொருள் சிறிது விஷயமானால், மற்றொரு காலத்தில் சிறிது விஷயமாகும், பிறிதொரு காலத்தில் சிறிது விஷயமாகும். இவ்வாறு முழுவதும் விஷயமாகுமென்றும், அவாங் மனோகோசரமென்றதில் மனத்திற்குச் சிறிது விஷயமான படி வாக்குக்கும் சிறிது விஷயமாதல் வேண்டும் என்றும், இங்ஙனம் மனவாக்குகளுக்குச் சிறிது விஷயமாகுமென்று கொண்டபோது கண், காது, மூக்கு, மெய், வாய், கை, முதலிய மற்ற இந்திரியங்களுக்கும் விஷயமாகுமென்பது தானே விளங்குதலால் பிரம்ம லட்சணத்தோடு விரோதப்படுமென்றும் மன முதலான அந்தக்கரணங்களுக்கும் கண் முதலான இந்திரியங்களுக்கும் நாம ரூபக்கிரியைகள் விஷயமாகுமல்லது தத்துவாதீதமாகிய பிரமம் விஷயமாகுமென்பது விபரீத உணர்ச்சி என்றும் மனோலயம் கிடைத்த பின்னர் பிரம்மானுபவம் கிடைக்கும் என்றும், மனம் சிறிது தோன்றினும் ஆத்மஞானம் விளங்காது என்றும் மனம், அசத்து, சடம், அநித்தியம், துக்கம், அசுத்தம் உடையது. பிரமம், சத்து, அறிவு, நித்தியம், இன்பம், சுத்தம், உடையது. ஆகலின் மனத்திற்குப் பிரம்மம் எவ்வகையினும் விஷயமாகாது என்றும் இவ்வாறே வேதம் முதலிய கலைகளினும் ஆப்த வாக்கியங்களினும் ஆணையிட்டு இருப்பதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்றும் பிரம்மம் மனத்திற்கு விஷயப்படாதென்பது அநுபவத்திற்கும், மற்ற ஹேதுக்களுக்கும் யூகங்களுக்கும் பொருந்துகின்ற பட்சமென்றும்" சுவாமிகள் சொல்லினர்.பின்னர் சிலபொழுது நாயக்கர் சும்மா விருந்தனர். அங்கிருந்தவர்களில் சிலர் நாயக்கரைப் பார்த்து, "சும்மா விருக்கப்படாது. உத்தரிக்க வேண்டும்" என்றார்கள். நாயக்கர் சற்று நேரம் சென்று மீளவும் "மனத்தினால் பிரம்மத்தை நினைக்கக்கூடும்" என்று முன் சொல்லியதையே சொல்லினர்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 113. அம்பலவாணர் வருகை ampalavāṇar varukai
13. ஆகம வேதம் அனேக முகங்கொண்
ஆகம வேதம் அனேக முகங்கொண்
டருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 094. தனித் திருவிருத்தம் taṉit tiruviruttam
14. மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
இங்ஙனம் வருணாசிரம மானத்தாற் பந்தப்பட்டு எகதேசத்தான் வழங்குகின்ற வேதம், வருணாசிரம மானத்தாற் பந்தப்படாது யாண்டும் பூரணத்தான் வழங்கும் மெய்ம்மொழிக்குப் பிரமாணமாகா வென்க. அன்றியும், வேதங்கள் ஓர் காலத்தில் உருத்திரனாலும், வேறோர் காலத்தில் விண்டுவாலும், பிறிதோர் காலத்தில் பிரமனாலும், மற்றோர் காலத்தில் பராசரன் வியாசன் முதலிய முனிவராலும் தொகுத்தும், வகுத்தும் விரித்தும் பலவாறு விகாரப்படுகின்றனவாய்; தாதுக்கள், பிரத்தியயங்கள், பிராதி பத்தியங்கள் முதலிய இயலுறுப்பும், வர்ன்னம், பதம், ஜடை முதலிய இயல் விசேடவுறுப்பும், உதாத்தம், அநுதாத்தம், சுரிதக முதலிய இசையுறுப்பும், சி€க்ஷ, கற்பம், வியாகரணம், நிருத்தம், சோதிடம், சத்தம் முதலிய அங்கவுறுப்பும் ஆயுள் நூல், தநுநூல், காந்தருவ நூல் முதலிய உபவுறுப்பும் உடையனவாய்; பஞ்சப்பிரம்ம மந்திரம், தத்துவத்திரய மந்திரம் முதலிய மந்திர சாமானிய விசேடங்களும், ஸ்நாநம், சந்தி, ஜெபம், ஓமம், தர்ப்பணம், வைசுவதேவம், இட்டி, அக்கினிட்டோமம், பசுபந்தம், திரையாக்கிநியம் முதலிய நித்திய கன்மங்களும், வருடகன்மவிசேடம், அயன கன்மவிசேடம், மாதகன்ம விசேடம், பருவகன்மவிசேடம் முதலிய நைமித்திக கன்மங்களும், அசுவ மேதம், ராஜசூயம், பௌண்டரீகம் முதலிய காமிய கன்மங்களும், சுராபானம், பரதாரகமனம், அசத்திய வாசகம் முதலிய நிஷேத கன்மங்களும், அநசநம், சாந்திராயணம், கிருச்சிரம் முதலிய பிராயச்சித்த கன்மங்களும், சூரிய உபாசனை, பிரமஉபாசனை, விண்டுஉபாசனை, ருத்திர உபாசனை, பிரணவ உபாசனை முதலிய உபாசனா கன்மங்களுமாகிய கன்ம சாமானிய விசேஷங்களும், சமயத்தார் சாதியார் பலர்க்கும் ஒத்த வண்ணம் வரைதற்கும் ஓதற்கும் உணர்தற்கும் இடங்கொடாமையும், பலவாறு விகற்பித்துக் கூறும் மயக்கமும் உடையனவாய், தாம் திருவருட் பரவயிந்துவ சத்தியான அபரவிந்துவின்கண் உற்பத்தியாய் அதனிடத்தே லயமாதலில் ஆதியும் அந்தமும் உடைத்தாயிருந்தும், அங்ஙனங் கோடலின்றி உற்பத்தியின்மையும் லயமின்மையுமாகிய அநாதியென்றும் நித்தியமென்றும் தம்மைத்தாமே விபரீதத்தான் மீக்கூறுகின்ற மதமும் அகங்காரமும் பெற்றிருத்தலு மன்றியும், கருமை, கடினம், எளிதின் உருகாமை, புலால் நாற்றமுடைமை முதலிய வன்மைக் குணங்களான் வெளிப்பட்டு மண்வெட்டி, கோடரி, அரிவாள் முதலிய அற்பக் கருவியை விரும்பினோர் எளிதிற் பெறத் தான் பரிணமித்தலேயன்றி, மகுடம் குண்டலம் முதலிய விசேடக் கருவிகளை விரும்பினோர்க்குத் தன்னுண்மைக் குணமாய சுவர்ணத் தன்மையை நெடுஞ் சேய்மைக்கண் மறைத்து அரிதிற் பெறவிருந்த அயலோக நியாயம்போல் மாயாசத்தார்த்தப் பிரபஞ்ச காரிய சித்தவிருத்தியாகிய வன்மைக் குணங்களான் வெளிப்பட்டு, பூலோகபோகம் சுவர்க்கலோகபோகம் முதலிய அநித்திய போகங்களை விரும்பினோர் எளிதிற் பெறத் தாம் மந்திர தந்திரங்களாற் பரிணமித்தலேயன்றி, அருட்போகம் ஆனந்தபோகம் சிவபோகம் முதலிய நித்திய போகங்களை விரும்பினோர்க்குத் தமதுண்மைக் குணமாகிய உபதேச லக்ஷியத்தன்மையை நெடுஞ்சேய்மைக்கண் மறைத்து அரிதிற்பெற விருத்தலானும்; தன் பலத்தை விரும்பினோர்க்கு நின்று கர நீட்டித்தலினானும் வேற்றுக்கருவி முதலியவற்றானுங் கைகூடுதலின்றி, மேலிவர்ந்தரிதிற் றலைக்க நின்று தன் காய்களைக் கவர்ந்தும் அந்நிலைக்கண் அனுபவித்தற்கும் வேறோர் கருவி வேண்ட நின்ற இலாங்கலி விருக்ஷ* நியாயம் போல், உபதேச லக்ஷியத் தன்மையைப் பெறத் தொடங்கிய சாதகர்க்குத் தத்தம் பருவத்திற் கடுத்த உணர்வானும் பல்வகைச் சாதகத்தானுங் கைகூடுதலின்றித் தெய்வகதியான் முடிபுநோக்கி அத்தலைக்கண் அமைந்த பொருளைக் கவர்ந்தும் அந்நிலைக்கண் அனுபவித்தற்கும் வேதாந்தவிசார முதலிய வேறோர் கருவி வேண்ட விருத்தலானும், மனிதர்மொழி, தேவர்மொழி, முனிவர்மொழி, அரிபிரமாதியர்மொழி, உருத்திராதியர்மொழி என்பவைக்குப் பெரும்பாலும் பிரமாணமாகி நிற்பனவன்றித் திருவருட் பரவயிந்துவத் துரியமொழிக்கு ஒருவாற்றானும் பிரமாணமாகா வென்க.
-
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
ஆகமங்களுள் சில ருக்குவேதம் போல் மந்திரகலையைக் குறித்தும், சில தயித்திரீய வேதம் போல் தந்திரகலையைக் குறித்தும், சில சாம வேதம் போல் உபயமுங் குறித்தும், சில அதர்வண வேதம் போல் உலகியலைக் குறித்தும் வருதலின் வேத சம்மதமாகியும், சில ஏகான்ம விரோதஞ் சாதித்தலின் வேத விரோதமாகியும், உபய மாயா காரியங்களைப் பெரும்பாலும் விரித்து விளக்கலான் மயேசுர சதாசிவாதி மொழிக்குப் பெரும்பாலும் பிரமாணமாமன்றி இத்துரிய மொழிக்குப் பிரமாணமாகா வென்க.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
24. ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
-
உபதேசக் குறிப்புகள்
42. வேதம்
அப்பு தத்துவத்தின் குணம் நான்கில் இருந்துண்டானவையே நான்கு வேதமும்.
-
உபதேசக் குறிப்புகள்
43. வேதம் ஆகமம் முதலிய நூல்கள்
வேதம் பதி லக்ஷணத்தை விளக்கும். ஆகமம் பசு லக்ஷணத்தை விளக்கும். புராணம் பாச லக்ஷணத்தை விளக்கும். இதிகாசம் பத்தியை விளக்கும். ஸ்மிருதி கர்மத்தை விளக்கும். மேலும் வேதம் பதி பசு பாசத்தைச் சொல்லும். அதுபோல் ஆகமமும் சொல்லும். வேதம் என்பது நான்கு மகாவாக்கியந்தான். மற்றவை அங்க உபாங்கசாங்கப் பிரத்தியாங்கங்கள். இவைகள் யாவும் மனமடங்கும் துவாரமாம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
-
முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai
55. பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
57. சபாபதி பாதம் தபோப்ர சாதம்
சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.
-
முதல் திருமுறை / First Thirumurai 006. திருவருண் முறையீடு tiruvaruṇ muṟaiyīṭu
95. வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
-
முதல் திருமுறை / First Thirumurai 008. இங்கித மாலை iṅkita mālai
101. விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
அருட் குணங்களனைத்து மமைந்தென்னற்றுணையாய் விளங்கிய தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேல் விளைக. வரைந்து விடுத்த நல் வாசகத்தைக் கண்ணுற்றறிந்தனன். குடும்ப கோடம், பொது வேதம், மெய்ம் மொழிப்பொருள் விளக்கம், சன்மார்க்க விளக்கம் என்பவைகளை நூதனமாக ஏற்படுத்தக் கருதியபடி வரையாக் கடிதப் புத்தகம் மூன்றென்னிடத்திருக்கின்றன. அவை அமையும். ஆகலில் அது விடயத்திலுழத்தல் வேண்டா. நான் வருமதிக் கடையில் அங்ஙனம் போதுதற்குளங் கொண்டிருக்கின்றனன். இஃதுபாய மன்றுண்மை. அருநெறி செல்வோர்க்கு மச்சுறுத்தத் தக்க விவ்வெய்ய பருவத்தின்கண் வான் பெயலறியா வன்னெறிப்பட்டு மெய்வருத்தங் கோட லொன்றோ. எவ்வகையானுங் களைகணின்றிப் பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளாற் கிடைக்கும் பொருட்கருவியை அங்ஙனஞ் செலுத்தலின்றி யிங்ஙனஞ் செலுத்தும் வெறுஞ் செயற்பாட்டிற் கொருப்படுங் குறைமையுங் கோடற்கிடனாம். ஆகலில் இது விடயத்திற் றுணிந்துரைத்தற்குச் சித்தமுநாவுஞ் செல்வனவல்ல. முன் குறித்தபடி வரற்குத் தடை நேரின் அன்று துணிந்து வரைவல். இஃதென் கருத்து. பின்னர் தங்கள் கருத்தின்படி செய்க. இஃதுலகியற் பிழைத்த சிலர்க்கு வரைதல்போல் வரைந்த தன்று. உள்ளமொத்து வரைந்ததென்க. இதனை நமது உள்ளன்பர் செல்வராய முதலியாரவர்கட்குங் குறிக்க. என்னையன்றித் தன்னையுங் கருதார் அன்றிப் பொன்னையுங் கருதார் என்று கருதப்படுமன்பர் வேலு முதலியார்க்கு ஓர் உத்தர கடிதம் வரைந்தனன். தாங்கள் எனக்கு இருமையும் தொடர்ந்த துணைவராக நினைக்கின்றேன். அன்றி வேறென்னை நினைப்பேன். தங்களுக் கன்றியும் நமது செல்வராய முதலியாரவர்களுக்கும் கடனிருந்தால் திருவருளால் நீங்கிவிடும். அது குறித்துச் சலிக்க வேண்டாவென்று குறிக்க. நாயக்கர்சாமி யென்பவர் தற்கால மிவ்வுலகிலிருக்கின்ற தான்றோன்றிச் சாமிகளிற் றலைநின்ற சாமி யென்க. என்னை - அறிய வேண்டுவனவற்றை யறிய முயலாமையோடு பித்த மயக்கான் மனஞ் சென்ற வழி சென்று பித்தச்சாமியென்னும் விசேடப் பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கின்றனர். ஆகலில் சூழும் வண்ணஞ் சூழ்க. அன்றி சிவ சிந்தனையுஞ் ஜீவ கருணையுங் கைவிடாது ஓங்குக. வேறு விடயங்களைச் சந்தி செய்யும் பந்த சந்தி சத்தியாலே மாறாது விழித்திருக்க. சுபம் பெறுக.அக்ஷய வருடம் இங்ஙனம்:சிதம்பரம் இராமலிங்கம்சித்திரை மாதம் 8ஆம் நாள்
-
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
நடராஜ நிபுணம் - நடராஜ விசித்திரம் - நடராஜ மதுரம் - நடராஜ அலங்காரம் - நடராஜ ஞான நாடகம் - நடராஜ ஆனந்த நாடகம் - சிதம்பர வுபதேசம் - சிற்றம்பல நடனம் - பொன்னம்பல நடனம் - பொது நடனம் - தத்துவ நடனம் - ஆனந்த நடனம் - அதீத நிலை அருள் விளக்கம் - மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் - சன்மார்க்க விளக்கம் - சாதன விளக்கம் - கலாந்த விளக்கம் - யோகாந்த விளக்கம் - நாதாந்த விளக்கம் - போதாந்த விளக்கம் - வேதாந்த விளக்கம் - சித்தாந்த விளக்கம் - அண்ட விளக்கம் - பிண்ட விளக்கம் - பிரகிருதி விளக்கம் - தத்துவ விருத்தி - சுத்த சிவ ராசியம் - பரசிவராசியம் - மந்திரக் கொத்து - மகாவாக்கிய வகை - பொது வேதம் - குடும்ப கோஷம் - இயல்வகை - அளவை வகை - ஞாய வகை - இலக்கண விருத்தி - தர்க்க விருத்தி - தென்மொழி விளக்கம் - வடமொழி விளக்கம் - உலகியல் விளக்கம் - கலைமரபு.