-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
1. நீடிய வேதம் தேடிய பாதம்
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 051. தனித் திருத்தொடை taṉit tiruttoṭai
1. என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
பன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி
மின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி
நின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
1. தேடிய துண்டு நினதுரு வுண்மை
தேடிய துண்டு நினதுரு வுண்மை
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறியநான் அறியேன்
அம்பலத் தரும்பெருஞ் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவுங் கூசும்என் நாவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
1. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
-
பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை
திருச்சிற்றம்பலம்கட்டளைக் கலித்துறைவேதியன் பாதம் பணிந்தேன்பணிந்துமெய்ஞ் ஞானமென்னுஞ்சோதியென் பாலுற வுற்றுநின்றேற்கின்று தொட்டிதுவேநீதியென் றான்செல்வ மாவதென்றேன்மே னினைப்புவண்டாரோதிநின் போல்வகைத் தேயிருபாலு மொழித்ததுவே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
2. மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
வள்ளலே நின்திரு வரவுக்
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
இறையும்வே றெண்ணிய துண்டோ
நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
நான்செயும் வகையினி நன்றே
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 003. கணேசத் திருஅருள் மாலை kaṇēsat tiruaruḷ mālai
2. சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ் ஞான நாடக நாயக நான்கெனும்
வேதம் நாடிய மெய்பொரு ளேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
2. பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்294 நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
3. ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
3. நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நின்றதே அன்றிநின் அளவில்
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
நோக்கிய திறையும் இங்குண்டோ
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
3. தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 144. நீடிய வேதம் nīṭiya vētam
4. சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 101. உய்வகை கூறல் uyvakai kūṟal
4. நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
4. ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
அன்றிவே றெண்ணிய துண்டோ
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
உறுகணிங் காற்றலேன் சிறிதும்
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
நன்றருள் புரிவதுன் கடனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
4. ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
-
சுப்பிரமணியம்
மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆதாரநாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சுப்பிரமணியம்.
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 010. ஆளுடைய அரசுகள் அருண்மாலை āḷuṭaiya arasukaḷ aruṇmālai
5. கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
உத்தமனே191 சித்தமகிழ்ந் துதவு வோனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
5. மாயையாற் கலங்கி வருந்திய போதும்
மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே245 றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
5. நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
6. எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
6. வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 060. உலப்பில் இன்பம் ulappil iṉpam
6. கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 020. புன்மை நினைந் திரங்கல் puṉmai niṉain tiraṅkal
7. ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 018. பணித்திறம் வேட்டல் paṇittiṟam vēṭṭal
7. சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 057. அனுபவ நிலை aṉupava nilai
7. கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
7. தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
7. ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்ததிங் குண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
8. அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
எனக்கும் உனக்கும்
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 057. அனுபவ நிலை aṉupava nilai
8. ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
8. துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
8. உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
ஒருசிவ மயமென உணர்ந்தேன்
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
கருத்தயல் கருதிய துண்டோ
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
9. எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன் எந்தாய்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
9. சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
10. ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 068. பிரிவாற்றாமை pirivāṟṟāmai
10. அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
அடுத்திடும் புறப்புறம் நான்கில்
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
இறையும்இங் கெண்ணிய துண்டோ
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
உறுகணிங் கினிச்சிறி துந்தான்
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
கென்னைஆண் டருள்வ துன்கடனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
11. ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
12. ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 050. போற்றித் திருவிருத்தம் pōṟṟit tiruviruttam
13. முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
-
பேருபதேசம்
* மாயையாற் கலங்கி வருந்திய போதும் வள்ளல்உன் தன்னையே மதித்துன் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவவே றெண்ணிய துண்டோ தூயபொற் பாதம் அறியநான் அறியேன் துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன் நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே நன்றருள் புரிவதுன் கடனே. - திருஅருட்பா 3635
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
13. தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 050. போற்றித் திருவிருத்தம் pōṟṟit tiruviruttam
14. கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
14. எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
15. ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 050. போற்றித் திருவிருத்தம் pōṟṟit tiruviruttam
15. வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
16. அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
17. நாரண னாதியர் நாடரும் பாதம்
நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
-
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்
அகண்ட பூரணானந்தராகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே! ஜீவனை ஆதரிப்பிக்கும் பூதப் பிருதிவித் தோற்றமும், ஜீவனை விருத்தி செய்விக்கும் பூத நீர்த் தோற்றமும், ஜீவனை விளக்கஞ் செய்விக்கும் பூதாக்கினித் தோற்றமும், ஜீவனை அதிகரிப்பிக்கும் பூத வாயுத் தோற்றமும், ஜீவனை வியாபகஞ் செய்விக்கும் பூத வெளித் தோற்றமும், உபப்பிருதிவி உபநீர் உபாக்கினி உபவாயு முதலிய தோற்றங்களும், அவைகள் இருக்கும் இடங்களும், தொழிலிடம் முதலிய இடங்களும், ஒலி அறிவு, உருவ அறிவு, சுவை அறிவு, நாற்ற அறிவு, பரிச அறிவு, என்னும் ஐவகைக் குணஅறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய செவி கண் நாக்கு மூக்கு மெய் என்னும் உள்ளிடப் பொறிகளும், அவைகள் உத்தியோகித்தற்குரிய வெளியிடப் பொறிகளும், வசனித்தறிதல் நடந்தறிதல் கொடுத்தெடுத் தறிதல் மலம் விடுத்தறிதல் சலம் விடுத்தறிதல் என்னும் ஐவகைத் தொழிலறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய வாக்கு பாதம் கை நீர்வாயில் அபானவாயில் என்னும் கரும உள்ளிடப் பொறிகளும், அவைகள் தொழிற்படற் குரிய கருமப் புறவிடப்பொறிகளும், நினைத்தல் விசாரித்தல் நிச்சயித்தல் அகங்கரித்தல் என்னும் சூக்குமக் கரணத் தொழில்களும், அவைகளை இயற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் சூக்கும கரணங்களும், அவைகளை இயற்றுவிக்கும் அதிசூக்கும கரணங்களும் அக்கரணங்களின் உபகரணங்களாகிப் பலபல பேதப்பட்டு விரிந்த சத்துவம், ராஜசம், தாமச முதலிய குணங்களும், பருவஞ்செய்தல் தகுதிசெய்தல் இச்சைசெய்தல் தெரிவுசெய்தல் அதிகாராஞ்செய்தல் காரணஞ்செய்தல் காரியஞ்செய்தல் முதலிய இடைப்பாட்டுத் தொழில்களும், அவைகளை இயற்றும்பொழுது இயையு இச்சை அறிவு முதலிய கருவிகளும், அக்கருவிகளுக்குரிய இடங்களும், அவைகள் உத்தியோகித்தற்குரிய இடங்களும், துரிசு நீக்குவித்தல் சுகம் விழைவித்தல் தூய்மை செவித்தல் இன்பமடைதற்கு வழியாயிருத்தல் துணையாயிருத்தல் முதலிய பரத்துவத் தொழில்களும், அவைகளை இயற்றுதற்குரிய தத்துவங்களும், அவைகளிருத்தற்குரிய இடங்களும், பிரேரித்தற்குரிய இடங்களும், அறிதல் அறிவித்தல் அனுபவித்தல் அனுபவிப்பித்தல் முதலிய முக்கியத் தொழில்களும், அவைகளை இயற்றுகின்ற சத்தி சத்தர்களும், அவர்கள் இருத்தற்குரிய இடங்களும், அவர்கள் அதிகரித்தற்குரிய இடங்களும், வாதவிருத்தி பித்தவிருத்தி சிலேட்டும விருத்திகளும், அவைகள் இருக்குமிடங்களும், உத்தியேகிக்குமிடங்களும், சூரியசத்தி சந்திரசத்தி அக்கினிசத்தி தாரகைசத்தி பிரமசத்தி மாயாசத்தி ருத்திரசத்தி முதலிய சத்திகளும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், அச்சத்திகளை நடத்தும் சத்தர்களும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், நனவு கனவு சுழுத்தி முதலிய அவத்தைகளும் அவைகள் இருத்தற்குரிய இடங்களும் இங்ஙனம் இன்னும் பற்பல அக உறுப்புகளும் அகப்புற உறுப்புகளும், மீத்தோல் புடைத்தோல் வந்தோல் மென்தோல் தோல்வகைகளும் வெண்ணரம்பு செந்நரம்பு பசுநரம்பு சிறுநரம்பு பெருநரம்பு முதலிய நரம்பின் வகைகளும், பேரென்பு சிற்றென்பு நீட்டென்பு முடக்கென்பு முதலிய என்பின் வகைகளும், நல்லிரத்தம் புல்லிரத்தம் கலவையிரத்தம் கபிலையிரத்தம் முதலிய இரத்த வகைகளும் மெல்லிறைச்சி கல்லிறைச்சி மண்ணிறைச்சி நீரிறைச்சி முதலிய இறைச்சி வகைகளும், மேல்நிலைச்சுக்கிலம் கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும், ஓங்காரமூளை ஆங்காரமூளை முதலிய மூளைவகைகளும், தலையமுதம் இடையமுதம் முதலிய அமுதவகைகளும், வெண்மை செம்மை பசுமை கருமை பொன்மை என்னும் வண்ண வகைகளும், வெண்மையிற்செம்மை வெண்மையிற்பசுமை வெண்மையிற்கருமை வெண்மையிற்பொன்மை, செம்மையின் வெண்மை, செம்மையிற்பசுமை செம்மையிற்கருமை செம்மையிற்பொன்மை, பசுமையின் வெண்மை பசுமையிற்பொன்மை பசுமையிற்கருமை, கருமையின்வெண்மை, கருமையிற்செம்மை கருமையிற்பசுமை கருமையிற்பொன்மை, பொன்மையின்வெண்மை பொன்மையிற் செம்மை பொன்மையிற்பசுமை பொன்மையிற்கருமை என்னும் வண்ண பேதவகைகளும், இவைகள் இவைகள் இருத்தற்குரிய இடங்களும் செயல்வகைகளும் பயன் வகைகளும் இங்ஙனம் இன்னும் பற்பல புறஉறுப்புகளும் புறப்புறஉறுப்புகளும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பவுதிக வடிவின்கண் ஒருங்கே உள்நின்று தோன்ற உள்நின்று தோற்றாது தோற்றவித்து தேவரீரது திருவருட் பேராற்றலை எங்ஙனம் அறிந்து எவ்வாறு கருதி என்னென்று துதிப்பேன்!
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 125. ஆடிய பாதம் āṭiya pātam
18. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
-
உபதேசக் குறிப்புகள்
16. பிண்ட இலக்கணம்
தலை அண்டம், மார்பு முதலானவை பிண்டம். அண்டத்தில் பிண்டம் புருவமத்தி, அண்டத்தி லண்டம் பிரமரந்திரம். இதில் சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம். இதில் பிரகாசமாயும் அறிவாயும் பிராணவாயு வாயும்...... இருக்கின்றது. பிண்டத்தில் பிண்டம் இடுப்புக்குங்கீழ் பாதபரியந்தம். பிண்டத்தி லண்டம் பீசம். பிண்டம் வயிறு..... மேற்படி பிண்ட ஸ்தானத்தில் கர்த்தாக்களிருக்கு மிடம் கோசம், தொப்புள், மார்பு; இவர்கள் வண்ணம், நாடி, உஷ்ணம், காற்று, குறி முதலிய பேதங்களாம். ஆதலால், பிரம விஷ்ணு ருத்திர பேதங்கள் அனந்த கோடி. அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இது போலவே பிரமாண்ட நியாயம்.
இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை? கண்டம், சிரம் சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
பிண்டத்தில் பூர்வமென்பது தலை, உத்தரமென்பது கால். பூர்வமென்பது பூர்வசம்பந்தத்தால் வந்த பெயர். பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல். பிண்டத்திற்குக் கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடதுகை; கொடிமரம் தொப்புளடி, மேற்படி மரத்தின் அளவு உண்ணாக்கு, கொடி புருவ மத்திக்குள்ளிருக்கும் வபை, பலிபீடம் தொப்புள், நந்தி என்பது பசு ஆணவமலம், மூலாதாரத்தினது உள்ளங்கமே சிவலிங்கம், வாய் வாசல், புருவமத்தி சபை, அறிவே பதி; ஆதிகால், அநாதிதலை; கீழ் தலை, மேல் கால். ஆதலால், பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் என நான்கு. இதில் பூர்வமென்பது புறப்புறமாகிய நக்ஷத்திரம் போன்ற இந்திரியக் காட்சி. பூர்வபூர்வம் புறமாகிய சசி போன்ற கரணக்காட்சி. உத்தரம் அகப்புறமாகிய பரிதி போன்ற ஜீவக்காட்சி. உத்தரோத்தரம் அகமாகிய அக்கினி போன்ற ஆன்மக்காட்சி. ஆதலால் அகம், அகப்புறம் புறம், புறப்புறம் என்னும் நான்குமே மேற்குறித்த பூர்வாதி உத்தரோத்தரமென வழங்குவது.
பிண்ட நியாயம் பிண்ட நியாயம். அண்டமென்பது கழுத்துக்கு மேல் சிரம். பிண்டமென்பது கழுத்துக்குக் கீழ் பாதம் வரையில். அண்டத்தில் சோமன் சூரியன் அக்கினி பிரமா விஷ்ணு ருத்திரன் இருக்குமிடம் நெற்றி. பிண்டத்தில் பிரமா, விஷ்ணு, ருத்திரன் இருக்குமிடம் பிரஜாபதி, தொப்புள், மார்பு. இவர்கள் வாயு வடிவம். இதிற் பிரம பேத மனந்தம். விஷ்ணு ருத்திர பேத மனந்தம். அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இதுபோலவே பிரமாண்ட நியாயம். ஜீவஸ்தானம்
ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2. அவை சிரசு. கண்டம். சிரத்திலிருக்கிற ஜீவன் இறக்கிற தில்லை, கண்டத்திலிருக்கிற ஜீவன் இறக்கும்.
சுவர்க்க நரகம்
மனித தேகமே சுவர்க்கம் நரகம் இருக்கிற இடம். பிரமபதம் விட்டுணுபதம் ருத்திரபதம் மயேசுரபதம் சதாசிவபத முதலிய பதங்களின் இடம் இந்த மனிததேகத்தில் கண்டம் முதல் உச்சி வரையில். இந்தப் பதங்களுக்குச் சுவர்க்கம் என்று பெயர். நரகம் நரகாதிகளுக்கிடம் உந்தி முதல் குத பரியந்தம். இயமனிருக்குமிடம் குதத்திற்கு இடது பாகம்.
ஆன்மாவும் ஜீவனும்
ஆன்மா தனித்தே யிருக்கும். ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
பூர்வோத்தரம்
பூர்வம் என்பது தலை, உத்தரம் என்பது கால். பூர்வம் என்பது பூர்வ சம்பந்தத்தால் வந்த பெயர்.
பெருங்கோயில்
கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடது கை, கொடிமரம் தொப்புள், கொடி மரத்தின் அளவு உள் நாக்கு, பலி பீடம் வயிற்றின் மேடு, நந்தி ஆணவம் முதலிய மலங்கள் உள்ள பசு, சிவலிங்கமே மூலாதாரத்தின் உள்ளங்கம்.
ஆதி அநாதி
ஆதி அநாதி, கீழ் மேல் என்பவை கால் - தலை.
காட்சி
பூர்வம் - புறப்புறம், இந்திரியக் காட்சி. பூர்வ பூர்வம் - புறம், கரணக் காட்சி. உத்தரம் - அகப்புறம், ஜீவக் காட்சி. உத்தரோத்தரம் - அகம், ஆன்மக் காட்சி.
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 030. நெஞ்சுறுத்த திருநேரிசை neñsuṟutta tirunērisai
22. ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
பாதம் பிடிக்கும் பயன்.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 012. கருணை மாலை karuṇai mālai
28. வேத மாமுடி விளங்கும் நின்திருப்
வேத மாமுடி விளங்கும் நின்திருப்
பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 110. தனித் திருஅலங்கல் taṉit tirualaṅkal
34. உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 134. அம்பலத்தரசே ampalattarasē
57. சபாபதி பாதம் தபோப்ர சாதம்
சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 112. மெய்யருள் வியப்பு meyyaruḷ viyappu
58. இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
எனக்கும் உனக்கும்
-
உபதேசக் குறிப்புகள்
55. காயத்ரி காயத்ரி: கா-ய-த்ரி. க ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.
மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.
56 தத்துவம் தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை. 57. குடிலை குடிலை என்பது மூலப் பிரகிருதி. 58. பூதம்
பூதம் என்பது: பூ-த-ம். பூ அலர்ந்தது, த தடித்தது, ம் கலத்தல், ஆதலால், எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் பூதம்.
பூதம் என்பதன் சப்தார்த்தம் பூதமென்பது யாது? அதனது சொரூப ரூப சுபாவங்களென்ன? பூதம் என்பதற்குச் சப்தார்த்தம்: பூ மலர்ந்தது, பிரகாசம்; த தடித்தது, காரியம்; ம் ஊன்றியது, நிலை. இதற்குத் தாத்பரியம்: நிலை பெற்ற காரியம் பிரகாசம். பூத அக்கினித் தோற்றமென்றும் பெயர். பூதகாரிய அக்கினி என்றும் பெயர். பூ என்பதில் உகர உயிரும் தம் என்பதில் அகர உயிரும் எண்ணில் அ - ம், உ - ம் ஆயின, ஆக தொகை 10. இந்தப் பத்து இடத்திலும் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு. கல்லுக்குள்ளிருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம். பத்துப் பொது ஸ்தானங்களாவன: மண், ஜலம், அக்கினி, காற்று, வெளி, பிரகிருதி, மாயை, சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் ஆக இடம் 10. 59. பௌதிகம்
பௌதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பௌ+தீ+அகம் = பௌதீகம். பௌ - மூடல், அகம் - உள், தீ - அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பௌதீகம். தீ என்பது காரண உஷ்ணம்.
பௌதிகங்கள் பௌதிகங்க ளென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள். 60. நினைப்பு மறைப்பு நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்: சந்திரன் அக்கினியோடு கூடி, சூரியபாகத்திலுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும் போது, உண்டாகும் நினைப்பு; சூரியன் அக்கினியோடு கூடி, சந்திர பாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும்போது உண்டாகின்றது மறைப்பு. நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது யாது? ஜனனம், மன அசைவு, ஒன்றை நினைத்தல், சகலகாலம், மேற்படி தத்துவம் வேறொன்றில் பற்றல், தத்துவத்தின் அசைவாகிய ஆவி மேலேறுதல், மேற்படி ஆவி ஏறின இடத்தில் நில்லாது அக்கிரமித்தல். மறைப்பென்பது யாது? மரணம், தூக்கம், மனம் ஒன்றைப்பற்றி உடனே மறைதல், கேவலகாலம், மேற்படி தத்துவத்தின் கூர்மை கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை இல்லாதிருத்தல், மேற்படி ஆவி அக்கிரமித்தல், மனம் ஆபாசப்பட்டுச் சூனியமாதல். மேற்குறித்த நினைப்பு மறைப் பற்று நிரதிசயானந்தமாய் அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்க சாதனம். நினைப்பு மறைப்பு இந்த ஜீவன் அக்கினியின் சூரியபாகத்தி லுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும்போது நினைப்பும், அக்கினியின் சந்திரபாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும் போது மறைப்பும் உண்டாகின்றன. இதுதான் நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம். நினைப்பு மறைப்பு
நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது ஜனனம், மனம் நினைத்தல், சகலம், தத்துவத்தின் ஆவி அதிக்கிரமிக்கிறது. மறைப்பென்பதற்குப் பொருள்: மரணம், கேவலம், தூக்கம், தத்துவத்தின் கூறுபாடு கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை யில்லாதிருத்தல், அதனது உஷ்ணம் அதிக்கிரமிக்கிறது, மனம் ஆபாசப்பட்டுக் கீழ்ச்செல்லுதல். ஆதலால், நினைப்பு மறைப்பு அற்று, நிரதிசயானந்தமாய் அருள்வடிவமாவதே சுத்தசன்மார்க்க சாதனம் இது ஒருவாறு.